சனி, 21 மார்ச், 2009

விழிப்புணர்வு இடுகை


விழிப்புணர்வு இடுகை !!!
நாளுக்கு நாள் சரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும்பங்குகளின் விலைகள் எங்கே சென்று நிற்கும் எனநிர்ணயிக்க முடியாத சூழல் தற்சமயம் உள்ளது .நமது பங்குசந்தைகளின் தற்போதைய நிலை இது தான் .....

ஏன் ... ??????

சந்தையில் ஒரு காலத்தில் "1000" க்கு மேல் வணிகம்ஆனபங்குகள் இன்று "100 " க்கு கீழ் வணிகம் நடந்துகொண்டுள்ளது . இது இத்துடன் நின்று மேலே வருமா ( அ)இன்னும் கீழே போகுமா என்ற அச்சம் பெரும்பாலானமுதலீட்டாளர்களிடம் தற்சமயம் எழும் பெரிய கேள்வியாகஉள்ளது ..

இந்த நிலை ஏன் ... ??

அந்நிய முதலீட்டாளர்கள் பலர் நமது நாட்டில் 2003 ஆம்வருடத்தில் இருந்து தான் அதிகப்படியாக வந்தனர் . நமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர் கால வளர்ச்சி,சிறப்பான அரசியல் சூழ்நிலைகள் , மற்றும் நடவடிக்கைகள்ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமதுசந்தைகளில்வர்த்தகத்தை துவங்கினார்கள் ...

அவர்கள் வந்து வர்த்தகம் தொடங்கியதும் ( இயல்பாகவேவாங்கும் சக்தி அவர்களிடம் அதிகம் ) சாதாரண பங்குகள்விலையை ( இப்பொழுது தான் புரிகிறது ; உதா - HDILபங்கின் அதிக பட்ச விலை 1431 குறைந்த பட்ச விலை 62.50மட்டுமே ) ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விலையைஉயர்த்தி அது சம்பதமான செய்திகளை மிகை படுத்திபங்குகளின் விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டது .

மக்களும் வாங்கினார்கள் .??

அந்தநிலையில் வந்த செய்திகள்அப்படி .. நமது மக்களும் விற்று லாபத்தினை உறுதி செய்யவில்லை . இது எப்படி சாத்தியம் என்றால் நமது அரசாங்கம்பங்கு சந்தைகளின் எதிர் கால வளர்ச்சியை கருத்தில்வைத்தும் , ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியையும்கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சிலஅந்நிய முதலீட்டாளர்களை சந்தைக்குள் அனுமதித்தது ..அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில சலுகைகளும்வழங்கப்பட்டன .. ஆனால்தற்போதைய சூழலில் பங்குசந்தை அவர்களது கைப்பாவை ஆகி விட்டது ..

அவர்கள்அதிக அளவில் லாபம் கருதி விற்பனை என்ற பெயரில்சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றனர்.சந்தை அதை தங்க முடியாமல் சிறிது எழுவதும் அதிகம்வீழ்வதும் என உள்ளது .

மேலும் அதிக பொருளாதாரம்உள்ள தனி நபர் (HNI )மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள்நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆகியவர்கள் இருந்துசந்தையின் சரிவின் வேகத்தை குறைக்க்க முடிந்ததே தவிரநிறுத்த முடியவில்லை ..அந்த அளவிற்கு அந்நியமுதலீட்டாளர்களின் கையில் சந்தை உள்ளது .......

@@ இடுகை ஒன்று முடிந்தது ... இடுகை இரண்டைபார்க்கவும் @@