ஞாயிறு, 31 மே, 2009

இன்றைய தேதியில் பொருளாதார சிக்கல்கள் @

இன்றைய தேதியில் இன்னும் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை . அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் இந்த பிரச்சனைகள் மேலும் வலுவடைந்து வருவதாக தான் உலக வல்லுனர்கள் அனைவரும் கூறும் விஷயம் .

இது சந்தைகளில் எவ்வித தாக்த்தினையும் ஏற்படுத்தவல்லது - அதைப்பற்றிய சில விளக்கங்களை பார்க்கலாம் .

அமெரிக்காவில் வரும் ஜுன் முதல் தேதி அதாவது நாளை ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது திவால் அறிவிப்பினை அரசிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏன் என்றால் ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஏற்க்கனவே திவால் மனு செய்ய வரமாட்டோம் என்று கூறி மோட்டார் நிறுவனக்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க தொகையில் அதிக தொகையினை பெற்ற நிறுவனம் ஆகும் .

மேலும் இந்த நிறுவனம் ஏற்க்கனவே இரண்டு முறைகள் திவால் மனு செய்ய சென்று அரசு விண்ணப்பத்தினை நிராகரித்து விட்டது . இந்த முறை அதையும் மீறி எப்படியும் திவால் மனு செய்ய்ய தயாராகிவருகிறது ஜெனரல் மோட்டார் நிறுவனம் .

தற்பொழுது அமெரிக்காவில் திவால் செய்ய இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டும் என ஒரு அறிக்கை கூறுகிறது (தனியார் நிறுவங்கள் உட்பட ) . அதோடு மட்டுமல்லாமல் தனி நபர்கள் இரண்டு லட்சத்துக்கு மேல் திவால் மனு செய்ய தயாராகி வருகிறர்கள் . அவர்களில் இருபது ஐந்தாயிரம் பேர் இம்மாதம் திவால் மனு செய்ய அனுமதிக்க பட்டுள்ளனர் .

மேலும் அமெரிக்காவில் திவாலாகி வரும் வங்கிகளின் எண்ணிக்கை அறுபதை நெருங்கி வருகிறது . மேலும் சில வங்கிகள் இந்த மாதத்தில் திவால் மனு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது . இவ்வருட இறுதிக்குள் பல வங்கிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது ..

மேலும் அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களான சோனி , மைக்ரோசாப்ட் , வோல்ஸ் வேகன் , ரோல்ல்ஸ் ராய் , சிட்டி வங்கி . மற்றும் பல நிறுவனங்கள் மேலும் மேலும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன . அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணியாளர்கள் என்ற நோக்கத்துடன் ஆட்குறைப்பு நடந்து வருகிறது .

இதற்கிடையில் போன வாரம் நடந்த அதிபர் கருத்தரங்கில் நடை பெற்ற பொருளாதார ப்பிரச்சனைகள் பற்றிய விவாதத்தில் பேசிய திரு . ஒபமாவின்மற்றும் அவர் குழுக்களும் சேர்ந்து இனி பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஊக்க தொகைகள் அதிகம் வழங்கப்பட மாட்டது என உறுதியான அறிவிப்பினை அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் இதில் மறு பரிசீலனை என்பது கிடையாது என்றும் ஒபாமா அரசு திட்டவட்டமாக தெளிவாக கூறியுள்ளது .

இந்த அறிவிப்புகளினால் அமெரிக்கா சந்தைகளில் முதலீடுகள் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளன . மேலும் பரஸ் பர நிதி நிறுவனங்கள் இன்னும் ஆட்குறைப்பில் ஈடு படவில்லை இந்த செய்திகளினால் வரும் வாரங்களில் அவர்களும் ஆட்குறைப்பில் ஈடு படலாம் .

தற்போதைய சூழலில் அமெரிக்காவின் டாலரை முதல் அந்தஸ்தில் இருந்து இறக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சீன மற்றும் இந்தியா இன்னும் சில சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

சில மாதங்களுக்கு முந்தய " G 20 " மாநாட்டில் இது பற்றிய பொதுவான ஒரு கரன்சியை கொண்டு வர விவாதம் பேச ஒபாமா அந்த பேச்சினை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றய உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்கா ஒரு பொருளாதார பிரச்சனைக்குரிய நாடாக கருதப்படுகிறது . அதோடு மட்டுமல்லாமல் பல நாடுகள் அமெரிக்காவின் தற்போதைய சிக்கல்களை வைத்து அமெரிக்காவை ஓரம் கட்ட முயற்சி செய்கின்றன . ஆனால் அதை எளிதாக எதிர் கொள்ள கூடிய திறமை படைத்த இங்கிலாந்து மிகவும் அமைதியாக இருந்து வருகிறது .

இங்கிலாந்திலும் தற்சமயம் அமெரிக்காவை பற்றி பேசிய அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன . ஆகா ------

அதையும் நீட்டி முழங்க வேண்டுமா உங்களுக்கு நண்பர்களே @@@@@@@

ஆக இவ்விரு வல்லரசு நாடுகளிலும் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஊக்க தொகைகள் வழங்கிய போதிலும் அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் இது சம்பந்தமா சலுகைகள் வழங்கியும் பிரச்சனைகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை . பிரச்சனைகள் மேலும் மேலும் தலை தூக்கி வருகின்றன .

இந்த அனைத்து பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு சீன மற்றும் நமது நாடும் மற்றும் ஜப்பானும் இது பற்றிய பேச்சுக்களில் சிறிது தயக்கம் காட்டாமல் எங்களது நாடுகளில் பொருளாதார பிரச்சனைகள் எதுவும் அதிகமாக இல்லை என்று கூறி வருகின்றன .

நிபுணர்களின் கணிப்பின் படி சீனாவில் அடுத்த வருட ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் பயங்கரமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது . நமது நாடும் அது போல தான் உள்ளது . மிக குறைவான இன்பிலேசன் மிக குறைந்த வட்டி விகிதங்கள் என பொருளாதார பிரச்சனைக்கு முன்னரே எல்லாம் குறைவாக உள்ளது .பொருளாதார பிரச்சினைகள் வந்தால் மீண்டும் உலக வங்கியில் கையேந்த வேண்டும் .

அவ்வாறு நடக்கும் சூழ்நிலையில் தற்போதைய அமெரிக்காவை எதிர்க்கும் டாலர் விஷயம் முக்கியமாக பேசப்படலாம் . அதனால் புதிய பிரச்சனைகள் நிகழலாம் .எது எப்படியாகினும் நமது நாடும் சீனாவும் மற்றும் ஜப்பானும் அமெரிக்காவை ஓரம் கட்ட நினைக்கும் எண்ணத்தினை கைவிட்டால் பரவாயில்லை .

அது தான் நமக்கும் நமது நாட்டின் எதிர் காலத்திற்கும் நல்லதொரு விசயமாக இருக்கும் . உலக நிபுணர்களின் கணிப்பின் படி அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார சரிவின் இரண்டாம் நிலை துவங்க உள்ளது . அது கிரெடிட் கார்டு பற்றிய விஷயம் தான் . அவ்வாறு நிகழும் பட்சத்தில் உலகின் முதல் வல்லரசான அமெரிக்கா வீழும் என நினைப்பது முட்டாள் தனம் .

அவ்வாறு நிகழ்ந்தால் அது உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம் .

நண்பர்களே இந்த முக்கிய பதிவின் நோக்கம் சந்தைகள் உயர்ந்து கொண்டே செல்வதர்ககவோ அல்லது நான் ஒரு சரிவின் ஆதரவாளனோ இல்லை நீங்கள் இத்தகைய பிரச்சனைகள் உள்ளதை தெரிந்து கொள்ளவே .


உச்சராக இருங்கள் !!! லாபத்தினை உறுதி செய்யுங்கள் @@@@@@@@@

நன்றி !!!

அடுத்த இது போன்ற முக்கிய விழிப்புணர்வு பதிவு தலைப்பு மட்டும் இங்கே--

--- அமெரிக்காவை சாப்பிட தயாராகும் கிரெடி கார்டு சிக்கல்கள் -----

காத்திருங்கள் நண்பர்களே @@@@@@@@@@@@@@@@@@@@

விழிப்புணர்வு இடுகை 5

மே மாத சந்தைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு இடுகை ,
************************************************************
கடந்த மாத சந்தைகளை பொறுத்த வரை சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் அவர்களின் வாங்கும் படலம் ஏப்ரல் மாத இறுதியிலேயே ஆரம்பித்துள்ளது . காரணம் அவர்களுக்கு அடுத்து அமையுள்ள ஆட்சி காங்கிரெஸ் என்பது அவர்களுக்கு சரியாக தெரிந்துள்ளது. நமது மக்களிடையே எலெக்சன் வரை சந்தைகள் விழாது என்ற ஊடகத்தினை மட்டும் பரப்பி விட்டு சந்தைகளை சரியானதொரு தருணத்தில் மேலே கொண்டு செல்ல ஆரம்பித்தனர் .

மேலும் சந்தைகளில் கடந்த மாதம் சிறிய பங்குகள் முதல் லார்ஜ் கேப் மற்றும் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் நன்றாக உயர்த்தப்பட்டுள்ளது . அதுவும் பல பங்குகளின் விலைகள் இரண்டு மூன்று மடங்கிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகளின் வளர்ச்சி என்பது அதிகம் வியாபாரம் இல்லாமல் சந்தைகள் உயர்வு அடைந்துள்ள அந்த வளர்ச்சி விகிதங்கள் சாதரணமாக
2 % - 5 % வரை ஆகும் .

பங்குகளின் விலைகள் அதிக அளவில் வர்த்தகம் இல்லாமல் திடீர் திடீர் உயர்வுகளை அடைய செய்துள்ளனர் .

சந்தைகளில் வர்த்தகத்தின் அளவு குறைந்து வரும் பொழுது சந்தைகள் திடீர் உயர்வுகளை சந்திக்கின்றன . ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது சந்தைகள் சிறிய அளவிலான சரிவுகளை மட்டும் சந்திக்கிறது . மேலும் அந்நிய மற்றும் ஆபரேட்டர்கள் சந்தைகளில் அடாசு பங்குகளின் விலைகளையும் , மற்றும் முதல் தரம்மான பங்குகளின் விலைகளையும் சற்று அதிகமாக உயர்த்தி உள்ளனர் .

அந்த உயர்வுகளில் தங்கள் பங்குகளை விற்று வருகிறார்கள் . மேலும் இது போன்ற செயல் சந்தைகள் பின்னாளில் பலவீனம் அடைய வாய்ப்ப்பு உள்ளதையே காட்டுகிறது .

நமது மக்களிடையே தவறான ஒரு வர்த்தக முறை உள்ளது அது பங்குகளின் விலைகள் மிகவும் சரிவடைந்து கீழே வாரும் பொழுது கையில் உள்ள பங்குகள் அனைத்தினையும் விற்று விட்டு சும்மா இருப்பார்கள் . அப்பொழுது வாங்க வேண்டும் செய்ய மாட்டார்கள் . ஆனால் இது போன்ற அதிக விலைகள் வரும் பொழுது உள்ளே புகுந்து சிறிதும் மீதமின்றி அனைத்து தொகைகளுக்கும் பங்குகளை வாங்கி போட்டு விடுவார்கள் .

இதை பொறுத்த வரை வாறன் பபெட் அவர்கள் கூறியது போல சந்தைகள் அதிகம் சரிவடையும் பொழுது நாம் சந்தைகளில் வாங்க வேண்டும் அதிகம் உயரும் பொழுது விற்று விட்டு சந்தையை விட்டு வெளியேற வேண்டும் .அதையும் மீறி நாம் விற்றதிர்க்கும் அதிகமாக செல்லும் பொழுது சந்தையை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் .

நம்து மக்கள் இது வரை மூன்று இடங்களில் கோட்டை ( முதலில் சந்தைகள் 20 % சரிவு சனவரி 2008 , அடுத்து " LIFE TIME " குறைந்த பட்ச புள்ளிகளான அக்டோபர் மாதம் 2008 , அடுத்தது சமீபத்திய உயர்வான மே 2009 ) விட்டு விட்டனர் இனியாவது சரியாக சிந்திப்பார்கள் என நம்புகிறேன் ....

மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளின் பொழுதும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நமது சந்தைகளில் இருந்து நமது மக்கள் பலரை வெளியேற்றி அனுப்பி விட்டனர் .

இன்றைய சூழலில் நமது சந்தைகள் உயர்ந்துள்ள உயர்வுகளை மனதில் வைத்து உங்கள் லாபத்தினை உறுதி செய்ய தவறாதீர்கள் .

நன்றி !!!

அடுத்த இடுகையான விழிப்புணர்வு இடுகை 6 - ஐ படிக்க தவறாதீர்கள் ...

மே மாதம் அதிகம் உயர்ந்த இன்டெக்ஸ் !!!

மே மாத பியுச்சர் சந்தைகளில் சில இண்டக்ஸ்களின் உயர்வுகள் சற்று அபரமானதகவே இருந்தன அவைகள் ------------

* சென்செக்ஸ் - 20 %
* நிப்டி - 21 %
* காப் கூட்ஸ் - 42 %
* மிட் காப் - 33 %
* சுமால் காப் - 46 %
* ரியாலிட்டி - 71 %
* பேங்க் இன்டெக்ஸ்- 35 %
*பவர் - 31 %
* மெட்டல் - 45 %

******************************************************

மே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் !!!

மே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் ---
*******************************************
பங்குகளின் பெயர் ----- உயர்ந்த சதவீதம் %
-------------------------------------------------------
* டாட்டா ஸ்டீல் - 70 %
*ரேன் பாக்சி - 67 %
*ப்ரோவோகு - 123%
*ஹச் ஜிஎஸ் எல் - 156 %
* யுனிடெக் - 79%
* நால்கோ - 68 %
* ஆர்பிட் - 136%
* என் எம் டி சி - 126%
* எலி கான் - 126%
*பல கஷ்யப் - 136%
* ஜெ பி அசோசியட் - 76%
* REL காப் - 79%
* REL இன்பிரா - 83%
* யுனிட்டி இன்பிரா - 144%
* அபான் - 108%
*REL காம் - 43%
* இந்தியா புல்ல்ஸ் - 125%
* கம்மன் இந்தியா - 80 %
* எஸ் பி ஐ - 40%
*********************************************************

கடந்த வார சந்தைகள் !!

கடந்த வார சந்தைகள் !!

INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9522.50 = +296.69 .
FTSE = 4417.94 = +52.65 .
DAX = 4940.82 = ------
CAC = 3277.65 = ------
STRAITES = 2329.08 = ----
DOW JONES = 8500.32 = +223.07 .
NASDAQ = 1774.33 = +82.32 .
HANG SENG = 18171.00 = +1108.48 .
KOSPI = 1320.99 = - 0.3 .
NIFTY = 4448.95 =+ 210.45 .
SENSEX = 14625.25 = +738.10 .
SGX NIFTY = 4449 = + 203 .

*********** ************* ****************

வலைப்பதிவு திரும்ப ஆரம்ப அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே !!!

---- வலைப்பதிவு திரும்ப ஆரம்ப அறிவிப்பு ----

கடந்த மாத இடையில் எனது தொழில் முறையான சில வேலை பளுவின் காரணமாக பதிவினை தற்காலிகமாக நிறுத்தியது அறிந்து நண்பர்கள் பலரிடம் இருந்து கேள்விக்குறியுடன் வந்த மின் அஞ்சல் களுக்கு பதில் அஞ்சல் செய்து விட்டு பதிவை தொடருகிறேன் ............

எனக்கு வந்த மின் அஞ்சல் பலவற்றிலும் நண்பரே நீங்கள் கூறியது போல வர்த்தகத்தினை நிறுத்தாமல் தொடர்ந்தேன் , தற்சமயம் பார்த்தால் நஷ்டம் தான் மிச்சம் என மின் அஞ்சல் வந்துள்ளது .

கவலை படாதீர்கள் நண்பர்களே !! சம்பாதித்து கொள்ளலாம் ...

இனி வழக்கம் போல பதிவுகள் தொடரும் ....

அன்புடன்

ரமேஷ்

ஞாயிறு, 24 மே, 2009

கடந்த வார சந்தைகள்

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************

NIKKIE = 9225.81 = -39.19 .
FTSE = 4365.29 = +17.18 .
DOW JONES = 8277.32 = +8.92 .
NASDAQ = 1692.01 = +12 .
HANG SENG = 17062.52 = +271.30 .
KOSPI = 1321.29 = +11 .
NIFTY = 4238.50 =567.50 .
SENSEX = 13887.15 = +1715 .
SGX NIFTY = 4247 = + 552 .

*********** ************* ****************

வேண்டாமே ஆக்சன் சந்தை !!!

வணக்கம் நண்பர்களே !!!

அடுத்த புதிய பதிவாக எதை எழுதலாம் என்று தோன்றிய பொழுது ஆக்சன் சந்தை பற்றி தோன்றியது ------

இனி அதன் விபரங்களை பார்ப்போம் ---

நாம் முன்பு பங்கு சந்தை ஒரு அலசலில் பார்த்து போல பங்குகளை வாங்கிய () விற்ற பங்குகளை அன்றைய தினத்தன்றே கணக்குகளை முடித்து தர வேண்டும் . அவ்வாறு செய்ய விட்டால் வாங்கிய பங்குகள் டெலிவரி ஆகிவிடும் தரகு நிறுவனத்திற்கு பங்குகளுக்கான தொகையினை செலுத்த வேண்டும் . விற்று வாங்காமல் விட்டு விட்டால் அது ஆக்சன் சந்தைக்கு சென்று விடும் .

ஆக்சன் சந்தை என்றால் என்ன ?

ஆக்சன் சந்தைகள் பங்கு சந்தைகள் தினசரி வணிகமாகும் அதே சந்தைகளில் 12 - 1.30 வரை தனியாக வணிகமாகும் . நாம் பங்குகளை வாங்கி விற்பது போல அங்கே நடக்காது தங்களது கணக்கில் பங்குகளை வைத்துள்ள நபர்கள் விற்ப்பனை மட்டும் செய்யலாம் . யார் வேண்டுமானாலும் விற்ப்பனை செய்யலாம் .

இந்த சந்தையில் விற்ப்பவர்கள் யார் . ??

இதில் விற்ப்பவர்கள் நம்மை போல வணிகர்கள் தான் ஆனால் அவர்கள் கணக்கில் பங்குகள் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் . அவ்வாறு கணக்கில் இருந்தால் சந்தையில் வணிகமாகும் விலையை விட 30 % அதிக விலையிட்டு செல்லிங் செய்யலாம் .

காரணம் ஆக்சன் சந்தைகளில் வாங்குபவர்கள் நமது எக்ஸ்ச்சஞ் தான் அவர்கள் விலையை பார்க்க மாட்டார்கள் . இத்தனை பங்குகள் தேவை என ஆக்சன் சந்தையில் உள்ள விலைகளில் பங்குகளை வாங்கி கணக்கை நேர் செய்வார்கள் . அது 10 % to 30 % வரை நமது சந்தை விலையை விட அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம் .

ஆக்சன் பிற விளக்கங்கள் . ??

மேற்குறிப்பிட்ட படி ஒருவர் தனது கணக்கில் பங்குகளை விற்று கணக்கை நேர் செய்யாமல் விட்டு விட்டால் அது ஆக்சன் சந்தைக்கு விற்றதற்கு பின் இரண்டாவது நாளில் ஆக்சன் சந்தைக்கு வரும் . இது தனியாக ஒவ்வொரு நபர்களை வைத்து பங்குகள் வாங்கப்பட மாட்டார்கள் .

உதா ; ஷேர்கான் , கார்வி , இந்போ லைன் போன்ற பங்கு தரகு அலுவலகங்களின் தலைமையகத்தில் இது போல பங்குகள் மொத்தம் எத்தனை தேவை என கணக்கு இருக்கும் அதை எக்ஸ்ச்சஞ்சில் தினம் கணக்கிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்து ஆக்சன் சந்தைகளில் பங்குகளை வாங்குவார்கள் .

இவ்வாறு ஆக்சன் சந்தைகளுக்கு சென்று பங்குகள் வாங்கப்பட்டால் இது போல தவறுகள் நடக்க கூடாது என்று சில நிறுவனங்கள் அபராதமும் விதிக்கின்றன .

நண்பர்களே !!!

எனது அனுபவத்தின் அடிப்படையில் கண்ட சில உண்மைகள் -----


** அன்றைய தினம் விற்று அதிகரித்த பங்குகளை ஆக்சனுக்கு அனுப்புவதால் நமக்கு டெலிவரி கமிசன் மற்றும் கவர செய்யும் தினம் பங்கின் விலை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் .

தற்போதைய சூழலில் சந்தைகளில் ஆக்சன் சந்தை துவங்கும் பொழுது சந்தைகள் தற்காலிகமாக உயர்த்தப்படுகின்றன . ஆக்சன் சந்தைகள் முடிவடையும் பொழுது தான்
நமது சந்தைகள் சரிவடைகின்றன ..

** ஆக்சன் சந்தைகளிலும் சில சூதாடிகள் உள்ளனர் அவர்கள் அதிக அளவில் பங்குகள் வரும் பொழுது பங்கின் விலையை மிகவும் அதிகரிப்பது இவர்களின் முக்கியமான வேலை ..

** அதிகம் வர்த்தகம் ஆகாத பங்குகளில் விற்ப்பவர்கள் தனது இஷ்டத்திற்கு 30 % வரை அதிக விலையிட்டு வைப்பார்கள் சந்தையில் அந்த விலையிலும் சில சமயம் பங்குகள் வாங்கப்படும் .

நன்றி நண்பர்களே !!!

தங்களது கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் ---

அன்புடன்
ரமேஷ்

புட் ஆப்சன் புட்டுகிச்சு ! கால் ஆப்சன் கழண்டு கிச்சு !!!


எனது ஒவ்வொரு பதிவிலும் நமது பங்கு சந்தை சகாக்களுக்கு பயன் படும் விதத்தில் மிகவும் கடினமான பணிகளுக்கு இடையிலும் பதிவெழுதி வருகிறேன் . பங்கு சந்தை ஓரு அலசலை தொடர்ந்து சந்தைகளின் அடுத்ததடுத்த விபரங்களை தொடர்ந்து கொண்டே உள்ளேன்.

தற்சமயம் சந்தைகளில் பெரிதும் வணிகர்களை பாதிக்கும் ஒரு விசயத்தினை பற்றி =====

இனி அதை பற்றி @@@@@@@@@@@@

இந்த பதிவில் ----

நமது சந்தைகளை பொறுத்த வரை தினசரி வர்த்தகம் , மற்றும் பியுச்சர் மற்றும் ஆப்சன் போன்றவற்றின் மேலோட்டமான விசயங்களை பங்கு சந்தை ஒரு அலசலும் மற்றும் பியுச்சர் அண்ட் ஆப்சன் பதிவிலும் பார்த்தோம் .

இனி ஆப்சன் பற்றி !!!

நானும் கடந்த மூன்று மாதங்களாக சந்தையில் நகர்வுகளை கவனித்து வருகிறேன் . சந்தையில் வர்த்தகத்தில் உள்ள தினசரி வர்த்தகர்களை சந்தையை விட்டே வெளியே அனுப்புவது என்ற கோணத்தில் ஆபரேட்டர்கள் சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள் .

பதிவை படிக்கும் ஒவ்வொரு வரும் பதிவு முடியும் வரை தினசரி வர்த்தகர்கள் என்ற நிலையில் இருக்கவும் ..

தற்போதைய சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது யாவரும் அறிந்ததே ஆனால் இதற்க்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் முன்பெல்லாம் சந்தைகளில் விற்று வாங்கும் அல்லது வாங்கி விற்கும் படலம் தான் இருக்கும் .

பயுச்சர் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது சந்தைகளில் புட் ஆப்சன் அதிகம் வாங்கப்பட்டு இருந்தால் சந்தைகளை ப்ரெட் செய்து சந்தையை உயர்த்தி புட் ஆப்சனை மதிப்பில்லாம செய்வார்கள் . அதே போல எதிர் திசையாக கொண்டால் கால் ஆப்சன் அதிகம் வாங்கப்பட்டு இருந்தால் சந்தையை சரிவு அடையசெய்து கால் ஆப்சனை மதிப்பில்லாமல் செய்வார்கள் .

இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முந்தய வியாபார முறை ( தந்திரம் )

ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன . ஆபரேட்டர்கள் பியுச்சர் வர்த்தகம் முடிவு தேதியின் பொழுது அதிக அளவு புட் ஆப்சனும் அதிக அளவு கால் ஆப்சனும் வாங்கபட்டிருப்பின் சந்தையினை ஒரே இடத்தில அவர்கள் வாங்கும் சக்தியை பயனபடுத்தி நிலை நிறுத்தி புட் ஆப்சன் மற்றும் கால் ஆப்சன் இரண்டையும் மதிப்பில்லாமல் செய்வார்கள் .

ஆனால் கடந்த 3 - 4 மாதங்களாக சந்தைகளில் ஆபரேட்டர்களின் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டதாக உணர்கிறேன் . முன்பு மாத இறுதி செய்த வேலைகளை இன்று நினைத்த மாத்திரத்தில் செய்து வருகின்றனர் .

உதா ; சந்தைகள் 3700 - 4000 க்குள் வர்த்தகம் நடப்பதாக கொண்டால் சந்தையை 3850 நிலைகளில் நிறுத்தி 3600 புட் ஆப்சன் மற்றும் 4100 கால் ஆப்சனை ஷாட் செல் செய்து லாபம் பார்க்கின்றனர் .

இது ஒரு வகையில் அவர்கள் எடுக்கும் ரிஸ்க்கை காட்டினாலும் நமது சந்தைகளில் உள்ள HNI'S - DII'S - எல்லாம் எங்கே சென்று விட்டார்க என்று புரியவில்லை .

மேலும் முன்பெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் எதாவது ஒரு திசையில் இருப்பார்கள் . ஆனால் அவர்கள் செய்யும் வணிகம் முழுவதும் ஹெட்சில் இருக்கும் .

நான் ஒரு மாத வர்த்தக நிலைகள் நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது -----

அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் ஆபரேட்டர்களும் தற்சமயம் சந்தையின் அதிக ஏற்ற இரக்கங்களின் பொழுது சந்தையில் நிப்டி பியுச்சர் வாங்கி புட் ஆப்சனையும் வாங்கி கொள்கின்றனர் . இது ஒரு முறை அல்லது நிப்டி பியுச்சர் விற்று கால் ஆப்சனை வாங்குகின்றனர் .

இவ்வாறு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நமது சிறிய தினசரி வணிகர்கள் உலக சந்தைகளின் போக்கினை வைத்து வர்த்தகம் செய்ய சந்தைக்குள் இறங்கினால் அவர்கள் கேட்கும் விலைக்கு ஆபரேட்டர்கள் விற்கின்றனர் நமது மக்களும் குழப்பத்துடன் ஸ்டாப் லாஸ் அல்லது நஷ்டத்துடன் சந்தையை விட்டு வெளியே வருகின்றனர் .

இவ்வாறு அவர்கள் விற்றால் சந்தைகளை உயர்த்த போகிறார்கள் என்று அர்தம் பின்னர் சந்தைகளின் உயர்வின் பொழுது புட் ஆப்சனை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் அது போல கால் ஆப்சனை விற்றால் சந்தையை இறக்கபோகிறார்கள் என்று அர்த்தம் சரிவின் பொழுது கால் ஆப்சனை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் .

இது போதாதென்று சில சமயங்களில் சந்தையில் புட் ஆப்சனில் அதிக செல்லரை போட்டு வைத்தும் கால் ஆப்சனில் அதிக செல்லரை போட்டு வைத்தும் குழப்பத்தை உண்டு செய்வார்கள் .

இவ்வாறு தான் தற்போதைய சந்தைகளின் போக்கு உள்ளது

இதை புரிந்து கொண்டு தினசரி வணிகர்கள் வணிகம் செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் .

அன்புடன்

ரமேஷ்

செவ்வாய், 19 மே, 2009

வணக்கம் நண்பர்களே !!!

சந்தையின் நிலையற்ற போக்கினை வைத்தும் மற்றும் எனது சொந்த தொழில் முறையான விசயங்களை வைத்தும் இந்த மாதம் இறுதி வரை வலை பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .

மீண்டும் ஒரு சிறிய அறிவிப்பிற்கு பின் வழக்கம் போல எனது பதிவினை தொடர உள்ளேன் .

தயவு செய்து புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் இப்போதைய சூழலில் உள்ளே செல்ல வேண்டாம் , மேலும் பழைய முதலீட்டாளர்கள் இந்த நிலைகளில் லாபத்தினை உறுதி செய்ய தவற வேண்டாம் . தினசரி வணிகர்கள் இம்மாத இறுதி வரை சந்தைக்குள் வர வேண்டாம் ..

நன்றி !!!

அன்புடன்

ரமேஷ் ..

திங்கள், 18 மே, 2009

சூடான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி !!!

காங்கிரஸ் கட்சி திரும்ப வெற்றி பெற்று ஆட்சிஅமைப்பது சந்தைகளுக்கு பலமான ஒரு செய்தியாகும் . நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் எதற்காக தொடர்ச்சியாக வாங்கி வந்தனர் என்பது இப்பொழுது தான் எனக்கும் மற்ற அனைவருக்கும் இன்று தான் விளக்கம் கிடைக்கும் .

நமது சந்தையில் வணிகம் செய்யும் சிறு சிறு நபர்களை எல்லாம் சந்தைகள் சரிவின் பொழுது சந்தையை விட்டே ஓரளவு விலக்கி விட்டனர் இன்னும் சிலரை இந்த உயர்வில் காணாமல் போக செய்து விடுவார்கள் நமது அந்நிய முதலீட்டாளர்கள் . காரணம் நமது ஆட்கள் இன்று முழுவதும் வாங்கும் படலத்தில் இருப்பார்கள் அவர்கள் விற்கும் படலத்தில் இருப்பார்கள் .

இன்றைய ஆசியசந்தைகள் அனைத்தும் 2 % அளவிற்கு சரிவில் துவங்கி உள்ளன . இவை அந்த சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்யும் நிலைகளாக இருக்கலாம் . மேலும் நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளை பின் தொடராது .

நமது சந்தைகள் இன்றைய துவக்கம் அந்நிய முதலீட்டாளர்கள் கையில் உள்ளது . அவர்கள் சந்தையை எது வரை கொண்டு செல்ல விருப்பமோ அது வரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கிறேன் . மேலும் நமது மக்களில் பெரும்பாலும் " செல்லிங் " இல் உள்ளனர் அதை அந்நிய முதலீட்டாளர்கள் அதிக புள்ளிகள் இழப்பிற்கு வாங்க செய்வார்கள் என நினைக்கிறேன் .

காங்கரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சந்தைகளில் சரிவுகள் தடுத்து நிறுத்த முடியாது . சந்தையில் தற்சமயம் உள்ள நிலைகளே சற்று அதிகம் என எல்லோராலும் கணிக்கப்பட்டுள்ளது . ஆகவே சந்தையில் வாங்க வேண்டாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் . இந்த உயர்வுகள் ஒரு வித மாயை போன்ற தோற்றம் தான் . இது தான் இன்றைய சந்தையின் தாரக மந்திரம் . இதை தான் என் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன் .

மேலும் அதிக ரிஸ்க் எடுத்து ( அதாவது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என கருதி புட் மற்றும் செல்லிங் இல் இருக்கும் நபர்கள் சந்தை துவக்கத்தில் சற்று சந்தையில் இருந்து வெளியேறுங்கள் மீண்டும் சம்பாதிக்கலாம் . தற்போதைய நிலவரப்படி சிங்கபூர் நிப்டி 13 % வரை அதிகரித்து 441 புள்ளிகள் உயர்வில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . )

நமது சந்தைகளில் மே இறுதி வரை சந்தைகளில் சற்று அதிக உயர்வுகள் மற்றும் குறைந்த சரிவுகள் வரும் என நினைக்கிறேன் . ஆகவே முடிந்த வரை சந்தையில் இருந்து சற்று விலகி இருங்கள் .

நிப்டி நிலைகள் ----

இன்று நிப்டி எல்லா எதிர் நிலைகளையும் கடந்து தான் சந்தைகள் துவங்கும்

நன்றி !!!

சனி, 16 மே, 2009

கடந்த வார சந்தைகள்

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = CHANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9265.02 = -169.81 .
FTSE = 4348.11 = -113.98 .
DOW JONES = 8268.64 = -306.10 .
NASDAQ = 1680.14 = -58.80 .
HANG SENG = 16790.70 = -598.30 .
KOSPI = 1310.34 = -102.79 .
NIFTY = 3671.65 = +51 .
SENSEX = 12173.42 = + 297.50 .
SGX NIFTY = 3695 = +75 .50 .

*********** ************* ****************
நேற்றைய சந்தைகள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவுள்ள பரபரப்பான சூழலில் வார இறுதி வர்த்தக தினமாக கொண்டு வர்த்தகம் துவங்கியது . சந்தையில் பெரிதாக சரிவுகள் எதுவும் வரவில்லை . நமது சந்தைகள் துவக்கம் 1 % வரை அதிகரித்து துவங்கின .

ஆசிய சந்தைகள் காலை துவக்கம் முதலே உயர்வில் வர்த்தகம் நடந்தது . மேலும் நமது சந்தைகள் விற்ப்பனை வாங்குவது இரண்டும் அதிகரித்தது . மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் கடந்தவாரத்தில் அதிக அளவில் முதலீடுகளை நமது சந்தைகளில் மேற்கொண்டுள்ளதாக கருதுகிறேன் . ஆசிய சந்தைகள்முடிவில் 1.5 % - 2 % வரை உயர்ந்துள்ளது .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் முடிவில் 2 % வரை உயர்வில் வர்தகமாகி கொண்டு இருந்தது . அனைவரும் எதிர் பார்த்தபடி சந்தைகளில் பெரிதாக நிலைகள் எதுவும் செல்லிங் செய்யப்படவில்லை . மாறாக சந்தைகள் மேலே ஏற துவங்கி சந்தைகள் முடிவில் 2.5 % உயர்வில் முடிந்தன .

நேற்றைய சந்தையில் அரசியல் சம்பந்தமான செய்திகள் எதுவும் வராதது சற்று ஆச்சர்யமே . !!!

சந்தைகள் சிறிதும் பாதிப்பின்றி வர்த்தகம் நடந்தது .

நேற்றைய அமெரிக்காசந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகம் நடந்தன . அங்கு வந்த பொருளாதார அறிக்கைகள் சரிவர இல்லை மேலும் கடந்தவாரம் வந்த அனைத்து பொருளாதார சம்பந்தமான அறிவிப்புகளும் சற்று மோசமாக வந்தது குறிப்பிடத்தக்கது .

அமெரிக்கா சந்தைகள் முடிவில் மேற்சொன்ன சாதகமற்ற அறிவிப்புகளால் சந்தைகள் மேலே செல்ல முடியாமல் சரிவில் முடிந்தன . சரிவுகள் பெரிய அளவில் இல்லை .

நமது நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் உலகம முழுவதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது . நமது நாட்டின் தேர்தல் நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் ஆகியவற்றை வைத்து தான் உலக சந்தைகளில் வரும் நாட்களில் வர்த்தகம் நடைபெறும் என நினைக்கிறேன் .

நன்றி !!!

எந்த பொருளின் மதிப்பும் இழந்தால் தான் தெரியும் !

வெள்ளி, 15 மே, 2009

நேற்றைய சந்தைகள் 2% அளவிற்கு சரிவில் துவங்கின . உலக சந்தைகள் பலவும் 2 % - 3% வரை சரிவில் துவங்கின . ஆனால் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கி இருப்பதால் சந்தைகள் சரிவில் துவங்கியதும் பின்னர் உடனடியாக சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன . அந்த மீட்சி கிட்டத்தட்ட 1.5 % அளவிற்க்கு இருந்தது .

ஆனால் ஆசிய சந்தைகள் தொடர்ச்சியாக சரிவிலேயே வர்த்தகத்தினை தொடர்ந்தன . அதே சரிவுகளை வர்தகமாகி 2 % - 3% வரை சரிவில் முடிந்தன .

நேற்றைய இன்பிலேசன் அறிவிப்பு 0.48 VS 0.70 என வந்தது . இது சந்தைகளுக்கு சற்று சாதகமான அம்சம் தான் . மேலும் சந்தைகள் முடிவில் 1% அளவிற்கு மட்டும் சரிவடைந்து" 3593 "புள்ளிகளில் முடிவடைந்தன .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கின பின்னர் அங்கு வந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்த அறிவிப்பினால் சந்தைகளில் நகர்வுகள் சற்று பிளாட் ஆக இருந்தது . முடிவில் அமெரிக்க சந்தைகள் " பிளாட் " நிலைகளிலேயே முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றய சரிவின் எழுச்சியாக சற்று அதிகரித்து துவங்கி உள்ளன . ஆசிய சந்தைகள் 1.5 % வரை அதிகரித்து துவங்கி உள்ளன . நமது சந்தைகளுக்கு இந்த போக்கு சரிவராது மேலும் நமது சந்தைகள் நாளை வரவுள்ள தேர்தல் அறிவிப்புகளுக்காக இன்றைய தினம் அனேக நபர்கள் சந்தைகளில் இருந்து முழுவதுமாக வெளியேறலாம் என நினைக்கிறேன் .

அப்படி இருக்கும் பட்சத்தில் பியுச்சர் சந்தைகளில் உள்ளவர்கள் அதிக அளவில் செல்லிங் செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . ஆதலால் சந்தைகளில் சரிவுகள் சற்று அதிகமாக வரலாம் .

நிப்டி இன்றைய நிலைகள் -----

அதரவு --- 3580 , 3550 ,3510 ..
எதிர்ப்பு --- 3610 ,3650 ,3683 ..

நன்றி !!!

வியாழன், 14 மே, 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி 10 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கில் வர்த்தகம் ஆனது . நேற்றைய சந்தையில் நிப்டி முக்கிய எதிர் நிலையான " 3670 , 3705 " ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து சந்தைகள் உயர்வினை கண்டன .

பின்னர் ஆசிய சந்தைகளின் வீழ்ச்சியை கண்டு நமது சந்தைகளும் சிறிது சரிந்தன . அந்த சரிவின் பொழுது சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான "3650 "நிலைகளை உடைத்து கீழிறங்கின . அந்த நிலைகளில் அடுத்த முக்கிய ஆதரவு நிலையான" 3610 "மட்டும் தான் உள்ளது . ஆனால் அந்த நிலைகள் உடை படாமல் சந்தைகள்சரிவில் இருந்து மீண்டன .

ஆசிய சந்தைகளும் முடிவில் " பிளாட் " நிலைகளிலேயே வர்த்தகத்தினை முடித்து கொண்டன . நமது சந்தைகள் முடிவில் " 3635 " என்ற புள்ளிகளில் சந்தைகள்" 45 " புள்ளிகளை இழந்து முடிந்தன ..

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் 1 % அளவிற்கு சரிவில் துவங்கின . பின்னர் அங்கு வந்த வீடு விற்ப்பனை அறிவிப்புகள் சற்று மந்தமாக இருந்ததால் சந்தைகளில் சற்று சரிவுகள் வந்தது என தகவல் வருகிறது . மேலும் அமெரிக்கா சந்தைகள் முடிவில் 2.5 % - 3 % வரை சரிவில் முடிந்தன .

வர வர சந்தைகள் சரியான காரணங்களுக்கு உட்பட்டு வர்த்தகம் நடப்பதில்லை என்பதற்கு நேற்றைய அமெரிக்கா சந்தைகளே நல்லதொரு உதாரணம் ஆகும் . வீடு விற்ப்பனை அறிவிப்புகள் சரியில்லை என்றால் காப்பர் மற்றும் அது சம்பந்தமான் பொருளின் விலைகள் இறங்கும் . ஆனால் பங்கு சந்தைகளுக்கு சிறிது சம்பந்தம் இல்லாத இந்த அறிவிப்பினால் சந்தைகளில் சரிவு என்பது சற்று ஆச்சர்யமே .

இன்றைய ஆசிய சந்தைகள் அமெரிக்கா சந்தைகளை பின்பற்றி 2 % - 3 % வரையிலான சரிவில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போல சரிவில் 2% - 3 % துவங்கலாம் .

ஆனால் நேற்றைய சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் வாங்கியது சற்று அதிகமாக உள்ளது . ஆகவே சந்தைகளில் சற்று உயர்வுகள் வரலாம் . கவனமாக வர்த்தகம் செய்யவும் . உயர்வு நிலைகளில் செல்லிங் செய்யலாம் . ( ரிஸ்க் எடுக்கும் நபர்கள் மட்டும் )

நன்றி !!!

புதன், 13 மே, 2009

நேற்றைய சந்தையில் நிப்டி " பிளாட் " நிலைகளில் துவங்கின . பின்னர் சந்தைகளில் சிறிதளவு மேடு பள்ளங்களுடன் வர்த்தகம் நடை பெற்றது . சந்தைகள் ஐ ஐ பி அறிவிப்பிற்கு சற்று ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆனது . ஐ ஐ பி அறிவிப்புகள் மிகவும் மோசமாக வந்தது . ஆனால் எதிர் பார்த்ததுபோல சந்தைகள் கீழிறங்காமல்மேலே உயர்த்தி செல்லப்பட்டது .

சந்தைகளில் ஆபரேட்டர்களின் கைவண்ணம் நன்றாக தெரிந்தது .

மேலும் ஆசியசந்தைகள் இடை வேளையின் பொழுது சிறிய சரிவுகள் மீள ஆரம்பித்தது . நமது சந்தைகள் முழுவதும் ஆசிய சந்தைகளை பின்பற்றியது . நமது சந்தைகள் வர்த்தகத்தின் முடிவில் ஆசிய சந்தைகள் 2% வரை சரிவில் முடிந்தன .

ஆனால் நமது சந்தைகள் 4 % வரை உயர்ந்தன . இது சற்று அபாரமான ஒரு விஷயம் தான் ........

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி பின்னர் அங்கு வந்த பொருளாதார அறிவிப்புகள் சற்று மோசமாகவே வந்துள்ளது . மேலும் இப்போதைய நிலைகளுக்கு மேலே செல்ல சந்தைகளுக்கு நல்லதொரு செய்திகள் சந்தைகளுக்கு இல்லை . ஆதலால் அமெரிக்கா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் " பிளாட் " துவங்கி உள்ளன . இன்றும் மற்றும் இவ்வார இறுதி வரை உலக சந்தைகள் முழுவது இது போல தான் வர்த்தகமாகும் என நினைக்கிறேன் . நமது சந்தைகளும் அதே போல தான் ஆனால் சற்று ஏற்ற இறக்க்கங்கள் அதிகமாக இருக்கலாம் .

இன்று நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நமது மாநிலத்தில் குறைவான (40 % ) வாக்குகளே பதிவாகும் என கருதுகிறேன் , மேலும் மத்தியில் அமையவுள்ள ஆட்சி சற்று இழுபறியான சூழலே உருவாகும் என நினைக்கிறேன் .

எது எப்படியாகினும் இந்த மாத இறுதி வரை சந்தைக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது ...................


நன்றி !!!

செவ்வாய், 12 மே, 2009

நேற்றைய சந்தையில் எதிர் பார்த்த உலக சந்தைகளின் வரிசை படி நமது சந்தை 20 புள்ளிகள் அதிகரித்து துவங்கின . பின்னர் சந்தைகள் முன்பு சொன்னது போல " 3655 " நிலைகளை எட்டிபிடிக்க முயற்சித்தது ஆனால் முடியவில்லை அங்கிருந்து கீழிறங்க ஆரம்பித்த சந்தைகள் முக்கிய அதரவு நிலையான " 3600 - 3585 " நிலைகளையும் உடைத்து சென்றது அந்த அளவு சந்தையில் விற்ப்பனை அதிகரித்தது .

நமது உசந்தைகளின் வர்த்தகத்தின் இடையே சிறிய சரிவில் இருந்தன . ஆசிய சந்தைகள் நமது சந்தைகளின் இடை வேளையின் பொழுது நன்றாக சரிவினை நோக்கி சென்றன . ஆசிய சந்தைகள் முடிவில் 2 % - 3 % வரை சரிவில் முடிந்தன . நமது சந்தைகள் முடிவில் அதே போல ஆசிய சந்தைகளின் முடிவினை ஒட்டி 2 % - 3% வரை சரிவில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சிறிதளவு லாபத்தினை உறுதி செய்தன என நினைக்கிறேன் . அமெரிக்கா சந்தைகள் 1 % சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் முடிவில் விற்ப்பனை அதிகரித்து 2 % சரிவில் முடிந்தன ..

இன்றைய ஆசிய சந்தைகளின் துவக்கம் சரிவ்ல் துவங்கி உள்ளன . அனைத்து சந்தைகளும் 1 % - 1.5 % வரை சரிவில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் 30 - 40 புள்ளிகள் சரிவில் துவங்கலாம் . இன்றைய சந்தையில் 3520 நிலைகள் இறுதி அதரவு நிலைகளாக கொண்டு வர்த்தகம் தொடங்கும் . இந்த நிலைகள் உடை பட்டாள் சந்தைகளின் சரிவின் வேகம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கிறேன் .

இன்றைக்கு வரவுள்ள ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் மற்றும் சந்தையின் வேகத்தினை அதிகப்படுத்தும் என நினைக்கிறேன் . அனேகமாக ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைக்கு சாதகமாக வர வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது .

நிப்டி நிலைகள் -- -- - -

அதரவு ---3550 . 3520 , 3480 ..
எதிர்ப்பு --- 3585 , 3600 , 3610 ..

நன்றி !!!

உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது . அது செயலிலும் வேண்டும் ......

திங்கள், 11 மே, 2009

கடந்த வாரம் வரை சந்தைகள் உலக சந்தைகளின் வரிசையில் அனைத்து சந்தைகளும் உயர்வு விகிதத்தினை சரியாக கடை பிடித்து உயர்ந்துள்ளது . ஆனால் சீன மற்றும் கொரிய சந்தைகள் மட்டும் முறையே 12 % - 7 % உயந்துள்ளன ..

இன்றைய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி உள்ளன . மேலும் உலக சந்தைகள் பலவும் இது வரை அதிக பட்ச உயரங்களை அடைந்துள்ளன . நுட்ப காரணிகள் படி கூறப்பட்ட அனைத்து இலக்குகளையும் உலக சந்தைகள் அடைந்துள்ளன.

நுட்ப காரணிகளை படி கூறப்பட்ட இலக்குகள் ----
******************************************************
டவ் ஜோன்ஸ் --- 8400 - 8500 .
நிக்கே --- 9400 - 9500 .
சென்செக்ஸ் --- 12250 - 12500 .
நிப்டி ----3650 - 3750 .
hang செங் ---- 15500 - 16200 .

*******************************************************
மேற்கொண்டு சந்தைகள் இன்னும் மேலே செல்ல நல்ல வலுவான செய்திகள் தற்சமயம் எதுவும் இல்லை . மேலும் சந்தைகளில் வரும் வார மற்றும் நாட்களில் எதிர் மறையான செய்திகள் சில சந்தைகளில் சில தாக்கத்தினை ஏற்படுத்தலாம் . அந்த சிறிய தாக்கங்கள் சந்தைகளில் சரிவினை உண்டு செய்யலாம் ..


நமது சந்தைகள் இன்று" 2 0 "புள்ளிகள் உயர்வில் அல்லது " பிளாட் " நிலைகளில் துவங்கலாம் . நமது சந்தைகள் பொறுத்த வரை வெள்ளியன்று நடந்த வர்த்தகத்தில் சந்தைகள் முக்கிய ஆதரவு நிலைகளான " 3610 - 3610 " உடைபட்டு இருப்பது சந்தையின் பலவீனத்தை காட்டு கிறது

இன்றைய சந்தைகள் 3610 நிலைகளை முக்கிய அதரவு நிலையாகவும்" 3655 " முக்கிய எதிர் நிலையாகவும் இருக்கும் இருந்தாலும் சந்தையில் ஆபரேட்டர்கள் சந்தையை 3655 நிலைகளுக்கு மேலே கொண்டு செல்ல முனையலாம் .

ஆசியா சந்தைகளின் போக்கினை வைத்து பார்க்கும் பொழுது நமது சந்தைகள் இன்றைய சந்தையில் சற்று சரிவுகள் வரலாம்

நிப்டி நிலைகள் ----

அதரவு --- 3610 , 3600 , 3580 ...
எதிர்ப்பு --- 3650 , 3670 , 3700 ...

நன்றி !!!

நல்ல உறுதியுடன் உழைப்பும் இருந்தால் தான் வெற்றி எனும் கனியினை பறிக்க முடியும் .....

சனி, 9 மே, 2009

கடந்த வார சந்தைகள் !

கடந்த வார சந்தைகள் !!INDICES == WKLY CLS = CHANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9432.83 = +455 . 46 .
FTSE = 4462.09 = +218.87 .
DOW JONES = 8574.65 = +362.24 .
NASDAQ = 1739 = + 20.
HANG SENG = 17389. 87 = +1868. 88 .
KOSPI = 1413.13 = +115.07 .
NIFTY = 3620.70 = +146.75 .
SENSEX = 11876 = + 472 .75 .
SGX NIFTY = 3620. = +99 .50 .

*********** ************* ****************
போன வார சந்தைகளில் ( அண்ணாச்சி) சீன மற்றும் கொரியா சந்தைகள் முறையே 12 % மற்றும் 7 % உயர்வினை கண்டுள்ளன ........

நன்றி
!!!!
நேற்றைய சந்தைகள் நாம் எதிர் பார்த்தபடி ஆசியசந்தைகளின் நகர்வின் ஊடே செல்லாமல் சந்தைகள் தனித்துவமாக வர்த்தகம் ஆனது . துவக்கத்தில் சந்தைகள் 20 புள்ளிகள் அதிகரித்து துவங்கின பின்னர் சந்தைகளில் முதலீட்டாளர்களிடையே சற்று லாபத்தினை உறுதி செய்யும் சூழல் உருவானது . அதனால் சந்தைகளில் சில குறிப்பிட்ட துறைகளில் பங்குகள் பெருமளவு விற்கப்பட்டன .

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சந்தைகளில் முந்தய பதிவுகளில் கூறியபடி உலக சந்தைகளில் உயர்வுகள் வரும் பொழுது நமது சந்தைகளில் சரிவுகள் வரும் என்று பதிவில் குறிப்பிட்டது போல நேற்று சரிவுகள் வந்தன .

ஆனால் ஆசிய சந்தைகள் முடிவில் .5 % - 1 % வரை உயர்ந்து முடிந்தன . ஆனால் ஆசிய சந்தைகள் சரியான ஒரு நிலைப்பாடு அல்லாமல் இவ்வாறு முடிந்துள்ளன . இதை விட ஆச்சர்யப்படும் விஷயம் என்ன வென்றால் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல சந்தைகள் மூன்று அதரவு மற்றும் எதிர் நிலைகளை கடந்து சந்தைகள் வர்த்தகம் நடந்தன . மேலும் சந்தைகள் வரும் நாட்களில் அந்நிய முதலீட்டாளர்கள் சற்று குறைந்த அளவாவது வெளியேறலாம் என கருதுகிறேன் .

நேற்றய சந்தையில் நமது சந்தைகள் முக்கிய நிலைகளான "3690 " நிலைகளை தாண்டிய போதும் சந்தைகளில் பெரிதாக எதுவும் நகர்வுகள் இல்லை . அமெரிக்கா "street strees " சம்பந்தமான அறிவிப்பு சந்தைகளுக்கு சற்று எதிர் மறையான அறிவிப்பாகவே கருதுகிறேன் .. மேலும் உலக சந்தைகளில் இந்த அறிவிப்பு சந்தைகளில் பெரிய தாக்கத்தினை எதுவும் ஏற்படுத்த வில்லை என்பது ஆச்சர்யமே . ..

நேற்றய அமெரிக்கா சந்தைகள் 1.5 % - வரை அதிகரித்து துவங்கின பின்னர் சந்தைகளில் வந்த வேலையில்லா அறிவிப்பு மீண்டும் அதிகரித்தது . அந்த அறிவிப்புக்கு பின்னர் சந்தைகள் சிறிதளவு சரிந்தன .முடிவில் கீழிறங்க வேண்டிய சந்தைகள் 1.5 % - 2.% வரை உயர்வில் முடிந்தன .

நன்றி !! !

மனிதனின் ஆசை எப்பொழுதும் குறைவதில்லை .

ஏனென்றால் அது மனதின் பசி .......................

வெள்ளி, 8 மே, 2009

நேற்றைய சந்தைகள் முழுவதும் அமெரிக்காவின் வங்கிகளின் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள சில பிரச்சனைகளுக்காக கொள்முதலை அதிகரிப்பது சம்பந்தமான " street strees " எனப்படும் அறிவிப்பிர்க்காக சந்தைகள் முழுவதும் சரிவுகள் எதுவும் இல்லாமல் வர்த்தகமானது .

ஆசியா சந்தைகள் முடிவில் சற்று நல்லதொரு உயர்வினை கண்டது , ஆசியா சந்தைகள் முடிவில் 2 % - 3 % வரை உயர்வில் முடிந்தன (முந்தய தினம் 2 % - 5 % . நமது சந்தைகளும் அதே போல 1.5 % -2 % வரை உயர்வில் முடிக்கப்பட்டன . இன்னும் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடுகள் நிறுத்தப்பட வில்லை சந்தைகளை அவர்கள் வாங்கும் படலம் இன்னும் நிற்கவில்லை .

அதோடு மட்டுமல்லாமல் உலக சந்தைகள் முழுவதிலும் அவர்களது வாங்கும் படலம் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை . நமது சந்தைகளில் l நுட்ப காரணிகளை செல்லுபடி ஆகாமல் சந்தைகளில் வர்த்தகம் நடந்து ( நடத்தப்பட்டு ) வருகிறது .

குறிப்பிட்டு சொல்ல போனால் அவர்கள் வாங்குவது என்பது சில பங்குகளின் விலையினை நன்கு ஏற்றம் செய்து பின்னர் அவற்றை உயர்ந்த விலைகளில் விற்ப்பனை செய்து விட்டு சந்தையில் இருந்து வெளியேறி சம்பந்தம் இல்லாத வர்த்தகம் அதிகம் ஆகும் துறை வாரியான பங்குகளில் தங்கள் கை வரிசையை காட்டு கின்றனர் ..

நேற்றைய அமெரிக்கா சந்தைகளும் " street strees " அறிவிர்ப்பிர்க்காக சந்தைகள் சிலமணி நீரம் ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆனது . பின்னர் வங்கிகள் பங்கு சந்தைகளில் பங்குகளை மற்றும் அரசின் பாண்டு விற்பனை மூலம் தங்கள் கொள்முதலை அதிகரிக்கலாம் என அறிவிப்புகள் வெளிவந்ததும் சந்தைகள் சரிவினை காண ஆரம்பித்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 1.5 % - 2.5 % வரை சரிவில் முடிந்தன ..

இன்றய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகம் துவங்கி உள்ளன . நமது சந்தைகள் போக்கில் இன்று சில குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளன . இன்பிலேசன் அறிவிப்பு பின்னர் உலக சந்தைகளின் சரிவு மற்றும் " street strees " இவை அனைத்து உள்ள சூழலில் சந்தைகள் இன்று துவக்கம் " பிளாட் " நிலைகளில் துவங்கலாம் . பின்னர் சந்தைகளில் ஆசியா சந்தைகளின் போக்கினை பிரதிபலிக்கலாம் .

பார்த்து கவனமாக வர்த்தகம் செய்யவும்

நிப்டி நிலைகள்

அதரவு -- 3650 , 3615 , 3580 ..

எதிர்ப்பு -- 3683 , 3701 , 3710 ..

நன்றி !!!
நேற்றைய உலக சந்தைகள் முழுவதும் அமெரிக்காவின் " strees " பற்றிய அறிவிப்பிற்க்காக உலக சந்தைகள் பலவும் சரிவுகள் இல்லாமல் உறுதியாக மேல் நிலைகளில் வர்த்தகம் ஆனது . ஆசியசந்தைகள் துவக்கம் சற்று அதிகமாக இருந்தது இருந்தாலும் சந்தைகள் முடியும் வரை சரிவுகள் இல்லை

ஆதலால் நமது சந்தைகள் முடிந்த வரை மேலே கொண்டு செல்லப்பட்டது . நமது சந்தைகள் இன்றைய சூழலில் நுட்ப காரணிகளை தொடர்பு படுத்தாமல் சந்தைகள் வர்தகமாகி வருகிறது .

மேலும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் இன்னும் வாங்கும் படலத்திலேயே உள்ளனர் என்று அவர்கள் கணக்கு சொல்கிறது ( ஆனால் அவர்கள் வாங்குவது சில சூட்சமம் தான் சில பங்குகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது ) . அவர்கள் வெளியேறும் வரை நமது சந்தைகளின் போக்கு நமக்கு புரியாது ...

நேற்றைய சந்தைகளில் நமது சந்தைகள் 3610 முக்கிய அதரவு நிலையாக கொண்டு துவங்கியது .. சந்தைகள் எதிர் ' 3670 சென்றது குறிப்பிடத்தக்கது