சனி, 16 மே, 2009

நேற்றைய சந்தைகள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவுள்ள பரபரப்பான சூழலில் வார இறுதி வர்த்தக தினமாக கொண்டு வர்த்தகம் துவங்கியது . சந்தையில் பெரிதாக சரிவுகள் எதுவும் வரவில்லை . நமது சந்தைகள் துவக்கம் 1 % வரை அதிகரித்து துவங்கின .

ஆசிய சந்தைகள் காலை துவக்கம் முதலே உயர்வில் வர்த்தகம் நடந்தது . மேலும் நமது சந்தைகள் விற்ப்பனை வாங்குவது இரண்டும் அதிகரித்தது . மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் கடந்தவாரத்தில் அதிக அளவில் முதலீடுகளை நமது சந்தைகளில் மேற்கொண்டுள்ளதாக கருதுகிறேன் . ஆசிய சந்தைகள்முடிவில் 1.5 % - 2 % வரை உயர்ந்துள்ளது .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் முடிவில் 2 % வரை உயர்வில் வர்தகமாகி கொண்டு இருந்தது . அனைவரும் எதிர் பார்த்தபடி சந்தைகளில் பெரிதாக நிலைகள் எதுவும் செல்லிங் செய்யப்படவில்லை . மாறாக சந்தைகள் மேலே ஏற துவங்கி சந்தைகள் முடிவில் 2.5 % உயர்வில் முடிந்தன .

நேற்றைய சந்தையில் அரசியல் சம்பந்தமான செய்திகள் எதுவும் வராதது சற்று ஆச்சர்யமே . !!!

சந்தைகள் சிறிதும் பாதிப்பின்றி வர்த்தகம் நடந்தது .

நேற்றைய அமெரிக்காசந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகம் நடந்தன . அங்கு வந்த பொருளாதார அறிக்கைகள் சரிவர இல்லை மேலும் கடந்தவாரம் வந்த அனைத்து பொருளாதார சம்பந்தமான அறிவிப்புகளும் சற்று மோசமாக வந்தது குறிப்பிடத்தக்கது .

அமெரிக்கா சந்தைகள் முடிவில் மேற்சொன்ன சாதகமற்ற அறிவிப்புகளால் சந்தைகள் மேலே செல்ல முடியாமல் சரிவில் முடிந்தன . சரிவுகள் பெரிய அளவில் இல்லை .

நமது நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் உலகம முழுவதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது . நமது நாட்டின் தேர்தல் நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் ஆகியவற்றை வைத்து தான் உலக சந்தைகளில் வரும் நாட்களில் வர்த்தகம் நடைபெறும் என நினைக்கிறேன் .

நன்றி !!!

எந்த பொருளின் மதிப்பும் இழந்தால் தான் தெரியும் !