திங்கள், 22 ஜூன், 2009

பதிவு நிறுத்த அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே !!!

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பதிவினை தொடர இயலவில்லை . மீண்டும் தொடர வாய்ப்புகள் குறைவாக உள்ளது .


முடிந்த வரை தொடர முயற்சிக்கிறேன்

மன்னிக்கவும்

நன்றி !!!

ஞாயிறு, 21 ஜூன், 2009

கடந்த வார சந்தைகள் !!!

INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9786 = - 348.71 .
FTSE = 4345.93 = -96.02 .
DAX = 4839.46 = -229.78.
CAC = 3221.27 = -104.87 .
STRAITES = 2273.18= 103.89.
DOW JONES = 8539.73 = 259.53 .
NASDAQ = 1823.03 = -35.07 .
HANG SENG = 17920.93= -969 .
KOSPI = 1383.34= - 45.25 .
NIFTY = 4313.60 =- 270 .
SENSEX = 14521.89 = -715.11.
SGX NIFTY = 4585 = -2 .

*********************************************************
வெள்ளியன்று சந்தைகள் துவக்கம் சற்று உயர்வாக இருந்தது . பின்னர் சந்தைகளில் வந்த அதிக செல்லிங் காரணமாக சந்தைகள் தொடர்ச்சியாக சரிந்தன .மேலும் முக்கிய தடை நிலையான 4325 - 4280 ஆகிய இரண்டு நிலைகள் உடைந்ததால் சந்தைகளில் மேலும் மேலும் செல்லிங் அதிகரித்தது .

ஆசிய சந்தைகள் 1 % வரை அதிகரித்து முடிந்தன .ஆனாலும் ஆசிய சந்தைகள் வர்த்தகத்தின் இடையில் நாளின் குறைந்த பட்ச புள்ளிகளில் வர்த்தகம் ஆனது ஆசிய சந்தைகள் முடிவில் தான் உயர்வினை அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது .

வெள்ளியன்று அமெரிக்கா சந்தைகள் துவக்கம் பெரிய எதிர் பரப்பில் இருந்தது ஆனால் முந்தய மூன்று தினங்களின் சரிவுக்கு பிந்தைய மீட்சியை சந்தைகளில் காண முடியவில்லை . மேலும் அமெரிக்கா சந்தைகள் டவ் ஜோன்ஸ் 8600 நிலைகளுக்கு மேல் சந்தைகளை நிலை நிறுத்த முடிய வில்லை மேலும் சந்தைகள் கடைசி இரு தினங்கள் மேற்குறிப்பிட்ட நிலைகளுக்கு கீழே முடிவடைந்துள்ளன . அநேகமா எனது கணிப்பின் படி அமெரிக்கா சந்தைகள் திங்களன்று இந்த நிலைகளை தாண்ட விலை என்றால் 8300 வரை சந்தைகள் உடனடியா ஒரு சரிவுகள் வரலாம் என கருதுகிறேன் .

மேலும் வியாழனன்று வந்த இன்பிலேசன் அறிவிப்புகள் சற்று குழப்பத்தினை சந்தைகளில் ஏற்படுத்தி உள்ளது . ஆனால் கட்டாயம் இது டேப்லேசன் இல்லை என புரிந்து கொள்ளுங்கள் . இன்பிலேசன் - 1.61 வஸ் 0.13 என்று வந்துள்ளது .

இந்த ஒரு நெகடிவ் இன்பிலேசன் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளதாக தெரிகிறது .மேலும் இது வரும் வாரங்களில் சந்தைகளில் கடும் சரிவினை கொண்டு வரலாம் .

மேலும் வெள்ளியன்று வந்துள்ள செபி இன் அறிவிப்பில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு கட்டணத்தில் பாதியாக குறைத்துள்ளது . மேலும் பரஸ்பர நிதியகங்கள் வசூலிக்கும் நுழைவுக்கட்டணம் முழுவதும் ரத்து செய்துள்ளது இது முதலீட்டளர்களுக்கு சற்று சந்தோசமான செய்தி தான் .

இப்படி ஒரு நல்ல மற்றும் கெட்ட செய்திகள் வந்தாலும் upa அரசு இனி மேற்க்கொள்ள இருக்கும் பட்ஜெட் அறிவிப்பிற்கும் மற்றும் இதர விசயங்கள் மற்றும் அரசு முதலீடை சிறிதளவு குறைப்பது என்ற முடிவுகள் சந்தைகளில் பின் நாளில் பெரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

நன்றி !!

வெள்ளி, 19 ஜூன், 2009

வணக்கம் ..

சில முக்கிய பணிகளின் காரணமாக இன்றைய பதிவினை விரிவாக எழுதிட இயலவில்லை .

முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல உலக சந்தைகளில் எழுச்சி என்பது மருந்துக்கு கூட இல்லாமல் வர்த்தகம் ஆகி வருகிறது . ஆகவே நண்பர்களே இந்தவார இறுதி வர்த்தக தினம் மற்றும் நேற்றைய மைனஸ் இன்பிலேசன் ஆகிய வற்றை கணக்கில் கொண்டு உயர்வில் செல்லிங் செய்யலாம் மற்றும் நேற்றைய செபி கூட்டத்தில் சில சலுகைகள் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் நமது முதலீட்டளர்களுக்கு சில சலுகைகள் வழங்க்கப்பட்டுள்ளது


இதை பற்றி விரிவாக நாளைய பதிவில் ......

நிலைகள்
----

அதரவு --- 4250 , 4220 , 4190 .

எதிர்ப்பு --- 4290 .4325 ,4365 .

நன்றி !!!

வியாழன், 18 ஜூன், 2009

நேற்றைய சந்தைகள் இருநாட்களுக்கு முன்னர் உலக சந்தைகளின் சரிவுகளை நேற்று நமது சந்தைகள் சரி செய்தன . நமது சந்தைகளின் துவக்கம் சற்று சரிவுகளின் போக்கில் துவங்கியது . சரிவு 30 புள்ளிகளாக இருந்தது .

ஆசிய சந்தைகள் முழுவதும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளை பார்த்தபடி வர்த்தகம் ஆனது .ஆனால் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் பெரிய அளவில் ஒரு உயர்வில் வர்த்தகம் ஆகவில்லை .ஆகவே ஆசிய சந்தைகள் பிளாட் நிலைகளில் சரிவில் வர்த்தகம் ஆனது .ஜப்பானிய சந்தை மட்டும் ஓரளவு நன்றாக உயர்ந்து வர்த்தகம் ஆனது .

நமது சந்தைகளில் முந்தய தினங்களில் எதிர் பார்க்கப்பட்ட சரிவுகள் சந்தைகள் த்கதுவைக்கத்தில் வரவில்லை .மாறாக சந்தைகள் முன்தினம் உயர்வினை அடைந்தது போல நேற்றும் சற்று ஆபரேட்டர்களின் முயற்சியால் சந்தைகள் ஓரளவு உயர்விற்கு கொண்டு செல்லப்பட்டது .

அதன் பின்னர் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டலார்களின் அதிக அளவு செல்லிங் காரணமாக சந்தைகளில் சரிவுகள் மேலும் மேலும் வந்தன .பின்னர் முடிந்த ஆசிய சந்தைகள் பெரிய அளவில் முந்தய சரிவின் எழுச்சி இல்லை .ஆகவே நமது சந்தைகளும் முடிவு வரை சிறிய எழுச்சியும் இல்லாமல் சரிவை நோக்கியே வர்த்தகம் ஆனது . முடிவில் நமது சந்தைகள் நிப்டி 161 புள்ளிகள் சரிவடைந்து முடிந்தன .

இந்த நேற்றைய சரிவு ஜனவரி மாதத்திற்கு பிறகு வந்த தினசரி வர்த்தகத்தின் அதிக புள்ளிகள் இழப்பாகும் என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் இருதினங்களாக வந்த சரிவுகள் இல்லை .ஆனால் எழுச்சியும் இல்லை . சந்தைகளில் மேலும் செல்லிங் தான் வந்துள்ளதாக தெரிகிறது . அமெரிக்கா சந்தைகள் முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய பிளாட் வர்த்தகத்தின் காரணமாக இன்று துவக்கம் 1 % மேலாக சரிவில் துவங்கி உள்ளன . மேலும் நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிகமாக சரிவடைந்து முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 1 1/2 % - 2 % வரை சரிவடைந்து முடிந்தன .

நமது சந்தைகள் இன்று ஆசிய சந்தைகளை பிரதிபலிக்க வாய்ப்புகள் இல்லை நமது சந்தைகளின் சரிவின் வேகம் நேற்று சற்று அதிகம் என்று கருதுகிறேன் .

நமது சந்தைகள் துவக்கம் 20 -30 புள்ளிகள் அதிகரித்து துவங்க வாய்ப்புகள் உள்ளன . சந்தைகளின் தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் பொழுது கடந்த இருதினங்களாக உலக சந்தைகளின் சரிவுக்கு அடுத்த மீட்சி வர நாளை வாய்ப்புகள் உள்ளன .

எதற்கும் ஸ்டாப் லாஸ் உடன் வர்த்தகம் செய்யவும் . ரிஸ்கி வர்த்தகர் மட்டும் பொசிசன் எடுக்கலாம் .

நிப்டி நிலைகள் -

ஆதரவு ---- 4325 , 4280 , 4250 .

எதிர்ப்பு ---- 4405 , 4445 , 4490 .

நன்றி !!!

கண் தானம் செய்யுங்கள் . நீங்கள் இல்லாவிட்டலும் உங்கள கண்கள் இந்த உலகை ஆளட்டும் .....

புதன், 17 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் துவக்கம் சற்று வித்யாசமாகவே இருந்தது . சிங்கபூர் நிப்டி 109 புள்ளிகள் சரிவு ஆனால் நமது சந்தைகளோ துவக்கம் 60 புள்ளிகள் மட்டும் சரிவு .உயர்வுகளில் சிங்கபூர் நிப்டி ஐ கடை பிடிக்கும் நமது சந்தைகள் சரிவில் மட்டும் குறைவான சரிவுகளை காட்டுகிறது .

ஆனால் துவக்கம் முதலே நமது சந்தைகளில் சற்று மீட்சி தெரிந்தது . ஆசிய சந்தைகள் துவக்கத்தில் ஏற்ப்பட்ட சரிவினை திரும்ப மீள முடியாமல் மேலும் சரிந்தன .என்பது குறிப்பிட தக்கது .

நமது சந்தைகள் மதியம் முடிந்த வரை பங்குகளையும் மற்றும் இன்டெக்ஸ் ஐ யும் மேலே உயர்வுகளில் நிறுத்தி வைத்தனர் நமது ஆபரேட்டர்கள் . ஆசிய சந்தைகள் மேலும் மேலும் சரிந்தன .முடிவில் ஆசிய சந்தைகள் 2 1/2 % வரை சரிந்து முடிந்தன .

நமது சந்தைகள் நேற்று பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் அனைத்தும் ஏமாற்றப்பட்டு உயர்த்தப்பட்டதாக கருதுகிறேன் . சரிவில் வர்த்தகம் ஆனது பின்னர் வர்த்தகத்தில் வேக வேக மாக உயர்த்தப்பட்டது . இந்த உயர்விற்கு எந்த வித செய்திகளோ அல்லது ஊக்க அறிவிப்புகளோ சந்தைகளில் இல்லை என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சரிவில் வர்த்தகம் ஆனது . சந்தைகளில் முந்தய சரிவின் எழுச்சியாக ஒரு உயர்வு எதிர் பார்க்கப்பட்டது ஆனால் அங்கு வந்த பொருளாதார அறிவிப்பின் சரிவால் சந்தைகளிலும் சரிவுகள் அதிகரித்தது ஆதலால் சந்தைகளில் சரிவுகள் அதிகரித்து முடிவில் 1 1/2 % வரை சரிவடைந்து முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . 1 % - 1 1/2 % வரை சரிவில் துவங்கி உள்ளன .நமது சந்தைகளும் ஆசிய சந்தைகளின் போக்கினையே தொடர வாய்ப்புகள் உள்ளன .

நிப்டி நிலைகள் ---

அதரவு ---- 4520 ,4480 ,4450 .
எதிர்ப்பு ---- 4550 ,4591 , 4620 .

நன்றி !!!

செவ்வாய், 16 ஜூன், 2009

நேற்றைய சந்தையில் எதிர் பார்த்தபடி நிப்டி 40 புள்ளிகள் சரிவில் துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகளில் வந்த செல்லிங் காரணமாக நமது சந்தைகளும் சரியத்தொடங்கின . ஆசிய சந்தைகள் அனைத்தும் 2 % வரை சரிவில் வர்தகமாகி முடிந்தன .

நமது சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4520 முக்கிய எதிர்நிலையான 4591 ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து வர்த்தகம் ஆனது குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய சந்தையில் செல்லிங் அதிகரித்ததற்கான காரணம் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நாச்சுரல் விவகாரம் முடிவுக்கு வந்தது .

உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் மிகவும் அதிகம் என்று கணிக்கப்பட்டது . ஆதலால் சந்தைகளில் ரிலையன்ஸ் பங்குகள் சரியத் தொடங்கின . அந்த சரிவுகள் கிட்ட தட்ட 7 % வரை சென்றன . ஆனால் ரிலையன்ஸ் நேச்சுரல் நிறுவனத்திற்கு லாபம் அதிகம் என்று கணிப்பில் தெரிகிறது .

மேற்கண்ட செய்திகளால் சந்தைகளில் சரிவுகள் அதிகரித்தது . சந்தைகள் 4520 நிலைகள் உடை பட்டதும் " 4481 " வரை சந்தைகள் சென்றன பின்னர் முடிவில் சந்தைகள் 100 புள்ளிகள் சரிவடைந்து 4486 புள்ளிகளில் முடிவடைந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பியுச்சர் சந்தைகள் காலை முதலே 1 % வரை சரிவில் வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தது . நேற்று மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் 1 1/2 % வரை சரிவில் துவங்கின

அமெரிக்கா சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்தல் மற்றும் பிரெஷ் செல்லிங் ஆகியவற்றின் காரணமாக சந்தைகள் அதிக சரிவினை கண்டுள்ளதாக கருதுகிறேன் . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 1/2 % - 3 % வரை சரிவில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகளும் அதிக சரிவுகளில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 3 % - 4% வரை சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % வரை சரிவில் துவங்கி உள்ளன . இது உலக சந்தைகளின் போக்கினை கடை பிடிப்பதாக கருதுகிறேன் . மேலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல உலக சந்தைகளில் இந்த மற்றும் வரும் வாரங்களில் சரிவுகள் அதிகமாக இருக்கலாம் . சந்தைகளுக்கு ஆதரவான ஊக்க செய்திகள் எதுவும் இல்லை என்கின்றன நிலை .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்கினையே தொடரும் துவக்கம் 1 1/2 % - 2 % வரை சரிவில் துவங்கலாம் . மேலும் சந்தைகள் மீட்சிக்கு உலக சந்தைகளின் போக்கினை பின்பற்றும் . மற்றும் மதியம் துவங்கும் ஐரோப்பிய சந்தைகள் போக்கு நமது சந்தைகளில் பிரதி பலிக்காது என்றே கருதுகிறேன் .

முடிந்த வரை பங்குகளின் உயர்வில் பங்குகளை விற்று லாபம் பாருங்கள் . அது சிறிய உயர்வாக இருந்தாலும் வெளியேறுங்கள் . அவரேஜ் செய்ய இது சரியான தருணம் அல்ல .

நமது சந்தைகள் இன்று 4520 நிலைகளுக்கு மேல் செல்ல வாய்ப்புகள் இல்லை . 4470 நிலைகள் உடைபட்டால் சந்தைகள் பலவீனமடைவது உறுதி செய்யப்படும் என நினைக்கிறேன் . இறுதி ஆதரவு நிலையான 4450 நிலைகள் மட்டும் எஞ்சியுள்ள இறுதி நிலையாக இருக்கும் அந்த நிலைகள் உடைபட்டால் சந்தைகளில் சரிவில் வேகம் அதிகரிக்கும் .

கவனமாக இருங்கள் !!!

நன்றி !!!

திங்கள், 15 ஜூன், 2009

வெள்ளியன்றைய பதிவினை படித்து தொடரவும் ........

வெள்ளியன்றைய அமெரிக்க சந்தைகள் பெரியதாக நகர்வுகள் எதுவும் இல்லாமல் வர்த்தகத்தினை முடித்து கொண்டன .

இன்றைய ஆசியசந்தைகள் துவக்கம் 1% வரை சரிவில் துவம்ங்கி உள்ளன . ஆசிய சந்தைகளில் இன்றும் மற்றும் வரும் வாரங்களில் செல்லிங் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன . மேலும் இந்த வாரம் வர இருக்கும் உலக நாடுகளின் இன்பிலேசன் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எல்லா நாடுகளிடையேயும் கணிப்பில் உள்ளது .

நமது சந்தைகள் இன்று துவக்கம் ஆசிய சந்தைகளை ஒட்டி சரிவில் துவங்கவே வாய்ப்புகள் உள்ளன . மேலும் நமது சந்தைகள் இன்றைய சந்தையில் 4520 ,4500 நிலைகள் உடைபட்டால் சந்தைகளில் செல்லிங் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன .

அவ்வாறு வரும் செல்லிங் காரணமாக சந்தைகள் எஞ்சியுள்ள ஒரே அதரவு நிலையான 4470 , 4450 நிலைகளை தொட்டாலும் ஆச்சர்யமில்லை .

அவ்வாறு நிகழ்ந்து சந்தைகள் 4450 நிலைகளுக்கு கீழே முடிவடையும் பட்சத்தில் சந்தையின் பலவீனம் உறுதி செய்யப்படும் மற்றும் அவ்வாறு முடிவடைந்தால் சந்தைகள் மேலும் சரிவடையும் .

தினசரி வர்த்தகர்கள் சந்தையில் ஷார்ட் செல்லிங் செல்லலாம் . நிப்டி சந்தைகள் துவங்கி பின்னர் ஒரு உயர்வில் 4550 - 4560 நிலைகளில் செல்லிங் செய்யலாம் ஸ்டாப் லாஸ் 4592 .........

நிப்டி நிலைகள் ---
அதரவு -- 4520 ,4500 ,4478 .
எதிர்ப்பு -- 4591 , 4620 , 4650 .

நன்றி !!!

ஞாயிறு, 14 ஜூன், 2009

good bye @ மிட் கேப்ஸ் .....

வணக்கம் !!!

ஒரு விழிப்புணர்வு பதிவு !!!!!!!! முதலீட்டளர்களுக்கு மட்டும் @

வணக்கம் அன்பு முதலீட்டாளர்களே !

தற்போதைய சந்தைகளில் தங்களுக்கு விற்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் சந்தைகள் தினம் உயர்த்தப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான் .ஆனால் சந்தைகள் இது போல தான் உயர்ந்து கொண்டே செல்லும் என சென்செக்ஸ் இன் அதிக பட்ச விலைகளில் நடந்தது நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம் .

சரி விசயத்துக்கு வருவோம் ,,,,,,,,

நமந்து சந்தைகள் வரலார்ருகானாத அளவு உயர்ந்து வருகிறது . சந்தைகளில் இந்த திடீர் உயர்வுகளில் உயர்ந்த மிட் கேப் பங்குகள் சரிவில் என்னவாகும் .

தற்சமயம் திடீர் என உயர்த்தப்பட்டு வரும் பங்குகள் அடிக்கடி வாங்குபவர் மட்டும் இருக்கும் நிலைகள் இதே போல சந்தைகள் சரிவடையும் பொழுது செல்லர் மட்டும் இருக்கும் படியான வர்த்தகம் தான் நடைபெறும் .

அவ்வாறு நடந்தால் தங்கள் பங்குகளை விற்க சில மாதங்கள் கூட ஆகலாம். அது வரை செல்லர் பிரீஸ் ஆகி கொண்டு இருந்தால் பங்குகளின் விலைகள் பெரிய சரிவுகளை காண நேரிடும் .

ஆகவே நண்பர்களே அது போல பங்குகளை இனம் கண்டு உயர்வில் வெளியேறுங்கள். மேலும் உங்கள் முதலீடு சரிவில் மட்டும் இருக்கட்டும் .

நன்றி !!!

@ கடந்த வார சந்தைகள் @

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 10135 = +367.81 .
FTSE = 4441.95 = +3.62 .
DAX = 5069.24 = +8.
CAC = 3326.14 = +13.35 .
STRAITES = 2377.07 = -19.
DOW JONES = 8799.26 = +36 .
NASDAQ = 1858.80 = +9.09 .
HANG SENG = 18889.68= +210 .
KOSPI = 1428.59=+ 30 .
NIFTY = 4583.40 =-3 .
SENSEX = 15237 = +134 .
SGX NIFTY = 4585 = -2 .

*********************************************************

கடந்த வார சந்தையில் உயர்ந்த மற்றும் தாழ்ந்தவர்கள் !!!

வணக்கம் நண்பர்களே !!!

கடந்த வாரம் சந்தைகள் சற்று அதிகமாக நிச்சயமில்லாத தன்மையினை ஏற்படுத்தினாலும் நமது வர்த்தகர்களுக்கு சற்று லாபத்தினை தந்தது . இதை யாரும் மறுக்க முடியாது .

சரி இனி @@@@@@@@@@@@

------------கடந்தவார சந்தைகளில் உயர்ந்து மற்றும் தாழ்ந்தவர்கள் ---------------

பங்கின் பெயர் - உயர்வு % ---

* ஹச் சிஇல் - 12 %
* மகிந்திரா - 10 %
* டாட்டா பவர் - 12 %
* சத்யம் கம்ப - 20 %
* டெக் மகிந்திரா - 13.5 %
* என் அண்ட் டி - 4 %
----------------------------------

பங்கின் பெயர் - சரிவு % -
* யுனிடெக் - 12.2%
*எஸ் பி ஐ - 10.3 %
* டி யல் எப் - 10.2 %
* பி பி சி ய ல் - 11.7 %


நன்றி
!!
வெள்ளியன்று நமது சந்தைகள் வார இறுதி மற்றும் ஐ ஐ பி அறிவிப்புகள் ஆகியவற்றிற்காக சந்தைகள் சற்று துவக்கம் அதிகரித்து இருந்தாலும் வர்த்தகம் சற்று ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆனது ஆனால் உயர்வுகளில் .....

பின்னர் வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சற்று நல்ல விஷயம் தான் ( ஐ ஐ பி + 1.4 vs - 0.71 )ஆனால் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்து சந்தைகள் சரிய ஆரம்பித்தன .

ஆசியசந்தைகள் முடிவில் பொழுது 1 % - 1.5% வரை அதிகரித்து முடிந்தன .

வெள்ளியன்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே .சரிவுகளில் வர்த்தகம் நடந்து வந்தன . பின்னர் சந்தைகளில் பெரியதொரு சரிவுகள் வந்தன சந்தைகள் வர்த்தக முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .

நமது சந்தைகள் கடந்த 13 வாரங்களாக உயர்வில் முடிந்து இந்த வாரம் சந்தைகள் சரிவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சந்தைகள் குறுகிய காலத்தில் அடைந்த தற்போதைய உயர்வுகள் சந்தைகளில் வரும் வாரங்களில் நிலை கொள்வது சற்று ஆச்சர்யமே !!!!

நுட்ப காரணிகளின் படி சந்தைகள் இப்போது உள்ள நிலையில் இருந்து (நிப்டி )கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் வரையிலான சரிவினை கண்டால் தான் சந்தைகள் ஒரு நல்ல உயர்வினை அடுத்த ஆண்டுகளில் எட்ட வாய்ப்புகள் உள்ளன . என்று கருதுகிறேன் நமது மக்கள் அனைவரின் கருத்தும் இதுவாக தன் உள்ளது என்ன நான் சரிவு அளவினை நுட்ப காரணிகளை படி சற்று அதிகப்படியாக கூறியுள்ளேன் .

அவ்வாறு வரும் வாரங்களில் நிகழும் பட்சத்தில் சந்தைகள் அதிக பட்ச உயர்வுகளாக அடுத்த மூன்று மாதங்களுக்கு 4820 -5000 ஆகிய இரு நிலைகள் மட்டும் இருக்கும் . ஆனால் குறைந்த பட்ச நிலைகள் என்று பார்க்கும் பொழுது 2900 வரையில் சந்தைகள் செல்ல வாய்ப்புகள் உள்ளன . இந்த சரிவுகள் ஜுன் மற்றும் ஜூலை மாதங்கள் இறுதிவரை நிகழலாம் .

நன்றி !@!!!

வெள்ளி, 12 ஜூன், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து துவங்கின . பின்னர் சந்தைகளில் சற்று செல்லிங் அதிகரித்தது. ஆசிய சந்தைகளிலும் சற்று செல்லிங் காரணமாக சந்தைகள் நகர்வுகள் சற்று குறைவாகவே இருந்தன . நமது சந்தைகளில் முன் குறிப்பிட்ட 4670 நிலைகள் தாண்டியும் சந்தைகள் வர்த்தகம் நன்றாக வலுவாக இல்லை . ஆதலால் சந்தைகள் அந்த நிலைகளுக்கு மேல் செல்லாமல் சந்தைகள் சரிந்தன .

ஆசிய சந்தைகள் உயர்வுகளிலேயே நின்று பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன . மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று பிளாட் நிலைகளிலேயே துவங்கின ஆதலால் சந்தைகள் அனைத்தும் சற்று சுணக்கம் கண்டன

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று அபாரமாகவே இருந்தன .ஆனால் சந்தைகள் வர்த்தகத்தின் இடையில் ஒரு பெரிய உயர்வினை காட்டியது , ஆனால் சந்தைகள் முடிவில் 1/2 % மட்டும் உயர்வில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் 1 %- 1 .1/2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் சற்று உயர்வில் துவங்கலாம் . ஆனால் அந்தநிலைகளில் சந்தைகளில் சற்று செல்லிங் நேற்றைய அளவினைவிட அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன .

மேலும் நமது சந்தைகளில் நேற்றைய இன்பிலேசன் அறிவிப்பு சந்தைகளுக்கு சற்று சாதகமாகவே வந்துள்ளன மற்றும் வரவுள்ள நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிக்கையை வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது .

ஆகவே சந்தைகள் சற்று உயர வாய்ப்புகள் உள்ளன . ஆனாலும் நண்பர்களே நமது சந்தைகளை பொறுத்த வரை உயர்வு இலக்கு குறைவு . ஆனால் சரிவு இலக்கு அதிகம் என்பதினை கவனத்தில் கொள்ளவும்

நன்றி !!!

வியாழன், 11 ஜூன், 2009

நேற்றைய சந்தைகள் துவக்கம் கணக்கு படி பிளாட் தான் . ஆனால் சந்தைகள் துவக்கம் முதல் அடுத்த 5 நிமிடத்திற்குள் நிப்டி 100 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது இந்த வர்த்தக நேரத்தில் சந்தைகளில் அதிக வர்த்தகம் இல்லாமல் சந்தைகள் உயர்த்தப்பட்டுள்ளது .

ஆனால் பங்குகளில் அந்த வளர்ச்சி இல்லை மேலும் ஆசியசந்தைகள் துவக்கத்தில் இருந்த நிலைகளில் இருந்து உயர ஆரம்பித்தன . ஆசிய சந்தைகள் முடிவில் 2 % - 3 % வரையிலான உயர்வில் முடிந்தன .

ஆசிய சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் 130 புள்ளிகள் உயர்வில் இருந்தன . ஆனால் முடிவில் சந்தைகள் கீழிறங்க ஆரம்பித்தன . அப்பொழுது நமது சந்தைகளில் பங்குகளின் விலைகள் வேகமாக சரிய ஆரம்பித்தன . கிட்டத்தட்ட அனேக பங்குகள் விலைகள் சரிய ஆரம்பித்தன .நமது சந்தைகள் முடிவில் 104 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் காலை பியுச்சர் சந்தைகள் துவக்கம் முதலே 1 % வரை உயர்விலேயே வர்த்தகம் ஆனது . நமது சந்தைகளும் ஆசிய சந்தைகளும் அமெரிக்கா சந்தைகள் உயரும் என்ற எதிர் பார்ப்பில் அனைத்து சந்தைகளும் உயர்ந்தன .

ஆனால் நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சரிவில் இருந்தன . பின்னர் அங்கு வந்த மோசமான பொருளாதார அறிவிப்புகளால் சந்தைகள் சரிய ஆரம்பித்தன .மேலும் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது . சரிவை நோக்கி சென்ற சந்தைகள் பின்னர் முடிவில் பிளாட் நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் 1 % வரை சரிவடைந்து துவங்கி உள்ளன . நமது சந்தைகள் அனேகமாக ஆசிய சந்தைகளை பின்பற்றி துவங்க மற்றும் வர்த்தகம் நடக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன .நமது சந்தைகளில் சிறிய உயர்வுடன் கூடிய சரிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன .

இன்றைய சந்தைகளில் முக்கிய நிலைகளாக எதிர் நிலையாக 4670 இந்த நிலைகள் உடைபட்டு சந்தைகள் மேலே சென்றால் 4720 வரையும் மற்றும் தடை நிலையாக 4620 நிலைகள் உடைபட்டு கீழே சென்றால் 4570 வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன .

இன்றைய சந்தைகளில் முடிந்தவரை அமைதி @@@@@@@@@@@@@@@@

நன்றி !!!

புதன், 10 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி 4450 நிலைகளுக்கு மேல் துவங்கி பின்னர் அடுத்த எதிர் நிலைகளான 4480 - 4520 ஆகிய நிலைகளை எளிதாக கடக்க செய்தனர் . துவக்கத்தில் சந்தைகள் வேகமாக சரிந்தன . பின்னர் சந்தைகள் அதை விட வேகமாக உயர்த்தப்பட்டன .

நேற்றைய ஆசியசந்தைகள் பிளாட் ஆக முடிவடைந்தன ஆனால் சீன சந்தை மட்டும் 2 % வரை சரிவடைந்தன . ஆனால் நமது சந்தைகள் இத்தனை நாளாக பின் தொடர்ந்த சீன சந்தைகளையும் சாராமல் மற்றும் ஆசிய சந்தைகளையும் சாராமல் தனித்துவமாக உயர்ந்து கொண்டே சென்று நேற்றைய சரிவுகளை ஈடு கட்டியே தீருவது என்ற நோக்கில் சந்தைகளை உயர்த்தி கொண்டே சென்றனர் .

சந்தைகள் முடிவில் 3 % வரையிலான உயர்வுடன் 121 புள்ளிகள் அதிகரித்து முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக எந்தவித வேகமான நகர்வுகளும் இல்லாமல் சில குறிப்பிட்ட நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன .

இன்றைய ஆசிய சந்தைகள் 1% அளவிற்கு உயர்ந்து துவங்கி உள்ளன , நமது சந்தைகளும் அதை பின்பற்றி துவங்கலாம் . 4520 நிலைகள உடைபடாத வரை சந்தைகள் அடுத்த சரிவுக்கு தயாரில்லை அதற்க்கு அடுத்து 4400 நிலைகளுக்கு கீழ் சந்தைகள் முடிவடையும் பட்சத்தில் சந்தைகளின் போக்கு சற்று மாறலாம். சந்தைகள் 4100 வரை சரிவடைய வாய்ப்புகள் உள்ளன .

மேலும் இன்றைய சந்தைகள் 4570 நிலைகளுக்கு மேல் செல்லும் பட்சத்தில் சந்தைகள் 4620 வரை செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன .

நமது சந்தைகள் பொறுத்த வரை தற்சமயம் வலுவான நல்லதொரு காரணிகளை இல்லாமல் சந்தைகள் பட்ஜெட் அறிவிப்புகளுக்ககவே சந்தைகள் நாள் தோறும் உயர்த்தப்படுகிறது . மேலும் இந்த இடைவெளியில் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நமது சந்தைகளில் ஆப்சன் பக்கமாக சென்று நமது முதலீட்டாளர்களை வீட்டுக்கு அனுபிவருகிரர்கள் .

கடந்த இரண்டு நாட்களாக சந்தைகளில் --

நேற்றைய முன் தினம் 157 புள்ளிகள் சரிவு அவர்கள் சந்தைகளில் கால் ஆப்சன் அதிகமாக வாங்கி இருந்தனர் . நேற்றைய சந்தைகள் உயர்த்தி செல்லப்பட்டு கால் ஆப்சன் - குறிப்பிட்ட அளவு விற்கப்பட்டுள்ளது . நேற்றைய சந்தைகள் உயர்வின் பொழுது அதிகமாக புட் ஆப்சன் வாங்கப்பட்டுள்ளது . இன்றைய உயர்வின் பொழுது மீதம் இருக்கும் கால் ஆப்சன் விற்கப்பட்டு பின்னர் அந்த நிலைகளில் மீண்டும் புட் ஆப்சன் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு சந்தைகளை சரிவுக்கு கொண்டு சென்று புட் ஆப்சனை விற்று வெளியேறுகிறார்கள்

இந்த தற்போதைய வர்த்தகத்தின் நிலையை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகளில் தினசரி மற்றும் குறுகிய கால முதலீட்டளர்களுக்கு மட்டு சரியாக வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது .

ஆகவே சந்தைகளில் ஆபரேட்டர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் நிமிடத்திற்க்கு நிமிடம் சந்தைகளில் தங்களது ஆப்றேட்டை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .

நன்றி !!!

எல்லா செயல்களுக்கு ஒரு அர்த்தமிருக்கும் .அர்த்தமில்லாத செயல்களை செய்யும் பொழுது தான் மனிதனின் தவறுகள் வெளிப்படுகிறது ..
ரமேஷ்

செவ்வாய், 9 ஜூன், 2009

நேற்றைய சந்தைகள் எதிர் பார்த்தபடி பங்குகளின் விலைகள் மிகப் பெரிய சரிவுகளை கண்டன . இன்டெக்ஸ் இம் சேர்த்து தான் .(சரிவுகள் தொடக்கத்தின் முதல் நாள் என நினைக்கிறேன் . இதனால் தான் நண்பர்களே 4400 - 4500 நிலைகளில் லாபத்தினை உறுதி செய்ய சொல்லி இருந்தேன் .

நேற்றய சந்தைகளில் நிப்டி முக்கிய தடை நிலையான 4520 -4480 ஆகிய இரு நிலைகள் உடை பட்டு உள்ளன .

நேற்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் பிளாட் நிலைகளில் துவங்கின சீன சந்தைகள் மட்டும் 2 % வரை சரிவடைந்தன . இந்த சந்தைகள் முடிவடையும் பொழுது நமது சந்தைகள் நிப்டி 100 புள்ளிகள் வரை சரிவடைந்து இருந்தன . பின்னர் சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்தல் மற்றும் செல்லிங் அதிகரித்ததால் சந்தைகள் மீண்டும் சரிந்தன . முடிவில் நமது சந்தைகள் 3.5 % வரை சரிவடைந்து முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகளில் துவக்கம் 1 % அளவிற்கு சரிவடைந்து துவங்கின . பின்னர் அங்கு முக்கியமாக எதிர் பார்த்த UBS இன் திவால் அறிவிப்பு சம்பந்தமான செய்திகள் எதுவும் அறிவிக்கபடாததால் சந்தைகள் நகர்வுகள் அதிகம் இன்றி பிளாட் நிலைகளில் முடிந்தன .

இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவில் துவங்கி உள்ளன . நேற்றைய அமெரிக்காவின் UBS பற்றிய அறிவிப்பு வராதது அந்த அறிவிப்பினை வரும் நாட்களில் என்று வேண்டுமானாலும் எதிர் பார்க்கலாம் என கருதப்படுகிறது . அதனால் ஆசிய சந்தைகளின் நகர்வுகளில் சற்று குறைவாக உள்ளன .

நமது சந்தைகள் துவக்கம் சற்று சரிவில் துவங்கலாம் . பின்னர் ஆசிய சந்தைகளின் போக்கில் பிரதிபலிக்கும் . மேலும் நமது சந்தைகள் இன்று முக்கிய எதிர் நிலையான 4470 - 4440 ஆகிய எதிர் நிலைகளை தாண்டி சந்தைகள் செல்ல வாய்ப்புகள் சற்று குறைவு என்றே கருதுகிறேன் .

முடிந்த வரை லாங் நிலைகள் தவிர்க்கவும் சந்தையின் ஒவ்வொரு உயர்விலும் செல்லிங் அல்லது புட் ஆப்சனை தேர்வு செய்யலாம் .

நன்றி !!!

திங்கள், 8 ஜூன், 2009

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய தினம் பெரிதாக எதுவும் எதிர் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன் . இன்றைய ஆசியா சந்தைகளின் துவக்கம் பிளாட் நிலைகளில் துவங்கி உள்ளன . மேலும் அமெரிக்கா சந்தைகளின் போக்கும் சற்று நிலைப்பாடுகள் குறைவாகவே உள்ளன .


ஆசியா சந்தைகளில் பெரிதாக ஊக்க செய்திகள் எதுவும் இல்லாதது தான் சந்தைகளை நிறுத்தியும் மற்றும் சரிவடையமலும் வைத்துள்ளதாக கருதுகிறேன் .

நமது சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் நிப்டி 4620 நிலைகளுக்கு மேல் முடிவடையாத அல்லது அந்த நிலைகளுக்கு மேல் வர்த்தகம் சரி வர நடக்காமல் போனால் வரும் நாட்களில் சந்தைகளில் சரிவுகள் உறுதி படுத்த படும் என நினைக்கிறேன் .

தினசரி வர்த்தகர்கள் இன்றைய சந்தைகளில் மட்டும் அல்லது இந்த வாரம் முழுவதும் மேற்கண்ட நிலைகளில் தங்களது செல்லிங் ஐ தொடரலாம் .

நன்றி !!!

ஞாயிறு, 7 ஜூன், 2009

நிப்டியும் உலக சந்தைகளும்

நமது சந்தைகளை உலக சந்தைகளுடன் ஒப்பிடும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டதா !!! என உங்கள் ஆதங்க குரல் கேட்கிறது கோபப் படாதீர்கள் ???

நண்பர்களே !!!

கடந்த 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்ப்பட்ட பொருளாதார பிரச்சனைகளால் உலகமே ஸ்தம்பித்தது . அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது . உலகம் முழுவது எந்த விசயமாக பேசினாலும் இந்த வார்த்தைகளை தான் கேட்க முடிந்தது .

நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் என பார்க்கும் பொழுது முதலில் பாதிக்கப்படுவது பங்கு சந்தைகள் தான் . 2008 இல் ஏற்ப்பட்ட பொருளாதார பாதிப்பில் உலக சந்தைகள் எல்லாம் வலுவிழந்து பாதாளத்தை நோக்கி சரிந்தன . முதலீட்டாளர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் . நமது சந்தைகள் இதற்க்கு விதி விலக்கல்ல --

கடந்த அக்டோபர் மாதம் உலக சந்தைகள் பலவும் அதிக பட்ச இழப்புகளை சந்தித்தது அதுவும் இது வரை இல்லாத விலைகளில் பங்குகளும் குறியீடுகளும் வர்த்தகம் ஆகின .

கீழே உள்ள அட்டவணையை காணவும் ---------

இன்டெக்ஸ் -- குறைந்த விலை -- தற்போதைய விலை - உயர்வு % இல்
****************************************************************************
டவ் ஜோன்ஸ் - 6440 --- 8763 ----- 32 %
நாஸ்டாக் - 1265 --- 1834 ----- 35 %
கனடா cac - 2465 --- 3318 ----- 34 %
லண்டன் ftse - 3460 --- 4386 ----- 26 %
ஜெர்மனி dax - 3588 --- 5077 ----- 41 %
சிங்கபூர் straits - 1455 --- 2396 ----- 62 %
ஜப்பான் nikkie- 6995 --- 9768 ----- 40 %
சீனா hang seng -10676 --- 18679 ---- 76 %
கொரியாkospi- 940 ---- 1398 ---- 46 %
நிபிட்டி - 2252 ---- 4587 ---- 104 %
சென்செக்ஸ் - 7697 ---- 15103 --- 96 %

********************************************************************************
மேலே உள்ளதை பார்த்தும் நமது சந்தைகள் எப்படி எந்த நிலைகளில் வர்த்தகம் ஆகின்றன என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன் . உலக சந்தைகள் அனைத்தும் 30 % to 40 % வரையிலான உயர்வுகளை மட்டும் அடைந்துள்ள . நமது சந்தைகள் மட்டும் எந்த வித சரியான காரணங்களும் இல்லாமல் 100 % வரையிலான வளர்ச்சியை அடைந்து உள்ளன . அதுவும் கிட்டத்தட்ட 9 மாதங்களில் ............

நமது சந்தைகளின் இந்த வளர்ச்சி உலக சந்தைகளின் போக்கினை வைத்து பார்த்தால் திடீர் வளர்ச்சி தான் . இந்த வளர்ச்சி நிற்காது என்றே கருதுகிறேன் . உலக பொருளாதாரம் இன்னும் சிக்கலாகும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள் .
இவற்றை வைத்து பார்க்கும் பொழுது நமது சந்தைகளில் உயர்வினை வைத்து பார்த்தால் வரும் மாதங்களில் சந்தைகளில் சரிவுகள் பெரிதாக வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .

அடுத்த காலாண்டுகளில் பொருளாதார பிரச்சனைகள் பெரிதாக வரும் பொழுது நமது சந்தைகளில் வாங்குபவர்கள் இருப்பார்கள் என்பதே சந்தேகம் தான் ..

பதிவை படித்து முடித்து விட்டு சிந்தித்து செயல் படுங்கள் எனது கருத்தை மட்டும் நான் எழுதி உள்ளேன் ..

தகவலுக்காக எனது மின் அஞ்சலில் உங்களது சந்தேகத்தினை எனக்கு மின் அஞ்சல் செய்யுங்கள் .

நன்றி !!!

உலக சந்தைகளின் கணக்கு அளித்த http://finance.yahoo.com/ தளத்திற்கு எனது நன்றி ...

சனி, 6 ஜூன், 2009

கடந்த வார சந்தைகள்

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9768.01= +246.69 .
FTSE = 4438.56 = +20.62 .
DAX = 5077.23 = +136.41
CAC = 3339.05 = +61.35
STRAITES = 2396.35 = +67.35
DOW JONES = 8763.13 = +262.81 .
NASDAQ = 1849.42 = +75.09 .
HANG SENG = 18679.53 = +508.30 .
KOSPI = 1398=+ 70 .
NIFTY = 4586.90 =+ 138 .
SENSEX = 15103 = +478 .
SGX NIFTY = 4587 = + 138 .

*********************************************************

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய முதலீட்டாலர்களா வெல்லப்போவது யார் ?

வணக்கம் நண்பர்களே @@@@@@@@

நமது சந்தைகளின் இன்றைய நிலையை மனதில் வைத்து புதிய புதிய விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து கொண்டே உள்ளேன்

வழக்கம் போல உங்கள் ஆதரவுடன் !!!

நண்பர்களே ---

இன்றைய சந்தைகள் அதுவும் நமது சந்தைகள் பொறுத்த வரை வெகு வேகமாக மிகப் பெரிய இலக்கினை அடைந்துள்ளனஅவ்வாறு வந்ததில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் சந்தைகள் UPA அரசின் வெற்றிக்கு பிறகு சந்தைகள் இரு தினங்களில் வெகு வேகமாக உயர்ந்ததுடன் பங்குகளின் விலைகளும் உடன் உயர்ந்துள்ளது

நமது ஆபரேட்டர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல ஏப்ரல் மாத கடைசியில் இருந்து இன்று வரை வாங்கி வந்துள்ளனர் . தற்சமயம் அவர்கள் கையில் உள்ள பங்குகளின் ( அவர்கள் முதலீடு செய்த துகை ) மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 21,800 கோடி என என் எஸ ஈ தெரிவிக்கிறது.

இதை தொடரும் முன் சில பழைய விளக்கங்கள் ---

நமது சந்தைகளில் 21000 . புள்ளிகளில் இருந்து
சந்தைகள் சிறிய சரிவாக முதலில் 18000 புள்ளிகள் வரை சந்தைகள் வந்தன . அதன் பின்னர் அங்கிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்கேற்ப்பு ஆவணங்களில் சில திருத்தங்கள் என அரசு அறிவித்ததும் அவர்கள் சந்தைகளில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர் .

அப்பொழுது அவர்கள் விற்ற தொகை 52,847 கோடிகள் அப்பொழுது சந்தைகள் அந்த நிலைகளில் இருந்து சுமார் 8000 புள்ளிகள் வரை கீழிறங்கின . இடைப்பட்ட புள்ளிகள் சுமார் 10000 -

இப்பொழுது பழைய விளக்கங்கள் முன்பு கூறியது போல சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கிய இந்த 21,800 கோடி முதலீடுகள் சந்தைகள் 2850 - 3600 ஆகிய புள்ளிகளில் வாங்கப்பட்டது . தற்பொழுது சந்தைகளில் உள்ள விலைகள் 3600 நிலைகளில் இருந்த விலைகளை விட பல மடங்குகள் அதிகம் .

இந்த 21,800 கோடி முதலீட்டில் சந்தைகள் கிட்டத்தட்ட 7000 புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது இந்த இடைப்பட்ட காலங்களில் அவர்கள் செய்த முதலீடு புதிய முதலீடுகள் மட்டுமே ..

அடுத்ததாக நமது சந்தைகள் பொறுத்த வரை அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு பணம் காய்க்கும் மரமாகவே கருதுகின்றனர் ஏன் அவ்வாறு கூறுகிறேன் என்றால் நமது சந்தைகளில் சரிவுகளில் நமது முதலீட்டாளர் முதலீடு செய்வதில்லை ஆனால் அந்நிய முதலீட்டாளர்கள் எந்த நிலைகளிலும் முதலீடு செய்கிறார்கள் .

சந்தைகளின் உயர்வுகளின் பொழுது நமது முதலீட்டாளர்கள் வாங்குகிறார்கள் ஆனால் அந்நிய முதலீட்டாளர்கள் அங்கு தான் விற்பனை செய்கிறார்கள் . அந்த நிலைகள் தற்போதைய நமது சந்தைகளில் உள்ளது . அந்நிய முதலீட்டாளர்கள் சில தவறு செய்து விட்டார்களா என கருதுகிறேன் .

அளவுக்கு அதிகமாக சந்தைகளை உயர்த்தி சென்று விட்டார்களா உயர்ந்த தற்போதைய விலைகளில் பங்குகளை வாங்க நமது மக்கள் தயாராக இல்லை . நமது மக்களை பொறுத்த வரை 3600 - 3700 நிலைகளில் வாங்கவே ஆர்வமாக உள்ளனர் .

இப்படி இருக்க அந்நிய முதலீட்டாளர்கள் உடன் போட்டியிட்டு நமது உள்ளூர் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் ஆகியவையும் சகட்டு வாங்கி தள்ளி உள்ளன . அவர்கள் அனைவரும் வாங்கியதில் சந்தைகள் உயர்வில் மாட்டி சரிவில் வங்கி அவரேஜ் செய்த நமது முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருகிறார்கள் .

அனேகமாக எனது கணிப்பின் படி அவர்கள் மாட்டி கொண்டு விட்டதாக கருதுகிறேன் . ஏன் என்றால் நமது சந்தைகளின் கடந்த இரு வார வர்த்தகத்தினை வைத்து பார்க்கும் பொழுது இன்டெக்ஸ் மற்றும் பங்குகள் உயர்வின் பொழுது விற்பனை அதிகரித்து வருகிறது .

இது ஒரு வகையில் ஒரு எதிர் மறையான செயலை காட்டுகிறது .மேலும் சந்தைகள் துவக்கத்தில் சரிவடைந்து பின்னர் அங்கிருந்து பெரியதொரு உயர்வினை காட்டி உயர்விலேயே முடிக்கப்படுகிறது .

இது நமது மக்களை சந்தைகளில் வாங்கும் பக்கமாக திருப்ப முயற்சி செய்கிறார்கள் என நினைக்கிறேன் . மேலும் வரும் வாரங்களில் சந்தைகள் சிறிய அளவில் சரிவடைந்தலே பங்குகள் விலைகள் பெரிதாக சரிவடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளூர் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் என இவர்கள் அனைவரும் விற்கும் சூழ்நிலைகள் சந்தைகளில் வந்தால் சந்தைகள் அதல பாதாளத்திற்கு செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை . அவ்வாறு வரும் பொழுது சந்தைகளில் வாங்குபவர்கள் இருக்க மாட்டார்கள் .

ஆகவே சந்தைகள் சரிவில் அவரேஜ் செய்த நண்பர்கள் வெளியேறுங்கள் நஷ்டம் 20 % வரை நஷ்டத்தில் உள்ள நபர்களும் வெளியேறி விடலாம் . நான் ஏற்க்கனவே முந்தய பதிவுகளில் இது பற்றி குறிப்பிட்டு இருந்தேன் .ஆகவே சந்தைகளில் இருந்து வெளியேறி வேடிக்கை பாருங்கள் பட்ஜெட் வருவதற்குள் சந்தைகளில் இன்னும் என்னென்னவோ நிகழப்போகிறது .

சந்தைகள் எப்பொழுதும் இருக்கும் நாம் உள்ளே இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் .

நன்றி !!!


நேற்றைய சந்தைகளில் நிப்டி போக்கு சற்று முற்றிலும் மாறுபட்டு வர்த்தகம் ஆனது என்பதை யாரும் மறுக்க முடியாது . துவக்கம் ஆசிய சந்தைகளை ஒட்டி 40 புள்ளிகள் அதிகரித்து துவங்கின . ஆனால் சந்தைகளில் தொடர்ச்சியாக உயர்வுகள் வந்தன . சந்தைகள் எதிர் பார்த்த நிலைகளான " 4620 " புள்ளிகளுக்கு மேலும் சென்று 4647 நிலைகள் வரை சந்தைகள் சென்றது .

ஆனால் ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவில் சென்று கொண்டு இருந்தன ஆனால் நமது சந்தைகளின் போக்கை பின்பற்றி உடன் அனைத்தும் சரிவில் இருந்து மீள துவங்கின .

ஆசிய சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் கலை துவங்கிய அதே நிலைகளில் வர்த்தகம் ஆனது பின்னர் நமது சந்தைகள் முடிவில் ஆசிய சந்தைகள் 1 % வரை உயர்ந்து முடிந்தன . நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் முடிவினை போல 14 புள்ளிகள் அதிகரித்து முடிந்தன .

வெள்ளியன்று முடிந்த அமெரிக்கா சந்தைகள் பெரிதாக எதுவும் நகர்வுகள் இல்லாமல் சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கிய பின்னர் திடீரென ஒரு பெரிய உயர்வுகள் வந்தன ஆனால் அந்த உயர்வுகளை தக்க வைக்காமல் சந்தைகள் கீழிறங்கின ..

நன்றி !!!

வெள்ளி, 5 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி இன் ஆபரேட்டிங் நன்றாக தெரிந்தது என்றே கூறலாம் . நமது சந்தைகள் துவக்கம் 30 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் உடனடியாக சரிவினை சந்தித்தது பின்னர் நன்றாக சந்தைகள் உயரத் துவங்கின .

ஆசிய சந்தைகள் நேற்றைய சந்தைகளில் குழப்பமான சூழலில் தங்களது வர்த்தகத்தினை முடித்துக்கொண்டன . ஆசிய சந்தைகள் அனைத்தும் 0.5 % வரை சரிவில் முடிந்தது . ஆசிய சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் 1 % அளவிற்கு உயர்ந்து வர்த்தகம் ஆனது பின்னர் நமது சந்தைகள் அதே நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கி பின்னர் பிளாட் நிலைகளில் முடித்து கொண்டன அங்கு எதுவும் உற்சாக அறிவிப்புகள் இல்லாததே இந்த நிலைக்கு காரணம் . நுட்ப காரணிகளை வைத்து பார்க்கும் பொழுது அமெரிக்கா சந்தைகளின் வளர்ச்சி இன்னும் சில காலண்டுகளுக்கு பெரிதாக உயர வாய்ப்புகள் இல்லை என்று கருதப்படுகிறது .

இன்றைய ஆசிய சந்தைகள் நேற்றைய சந்தைகள் போலவே பிளாட் நிலைகளில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போல பிளாட் நிலைகளில் துவங்கவே வாய்ப்புகள் உள்ளன .

நமது சந்தைகள் இன்றைய சந்தைகளில் அனேக ஷார்ட் பொசிசன் உள்ளவர்களை சந்தைகளில் இருந்து வெளியேற்ற ஆபரேட்டர்கள் முனைவார்கள் ஆகவே சந்தைகளில் தற்காலிக உயர்வுகளுக்கு வாய்ப்பு உள்ளது சந்தைகள் 4620 நிலைகள் வரை செல்லலாம் . அதையும் தாண்டி செல்லும் பட்சத்தில் சந்தைகள் 4654 - 4682 வரை செல்ல அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

குறிப்பாக மேற்குறிப்பிட்ட நிலைகள் வர்த்கமானதாக காட்டப்படும் சூழ்நிலைகளும் உள்ளன . அந்த நிலைகள் சந்தைகள் நின்று வர்த்தகம் ஆகுமா என்றும் இன்றைய சூழலில் கூற இயலவில்லை . ஏனென்றால் சந்தைகள் இப்போதைய சூழலில் அதிகம் வாங்கப்பட்ட இடமாக நுட்ப காரணிகளை கூறுகின்றன (over bought zone ). கவனமாக இருங்கள் ..

நன்றி !!!

வியாழன், 4 ஜூன், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி துவக்கம் சற்று 35 புள்ளிகள் அதிகரித்து துவங்கியது . பின்னர் ஆசிய சந்தைகளை நமது சந்தைகள் பின்பற்றவில்லை . சந்தைகளில் சிறிய சரிவுகள் வந்தன அந்த சரிவுகள் உறுதி படுத்தப்படும் வேளையில் சந்தைகளில் ஆபரேட்டர்கள் பலவந்தமாக சந்தைகளை உயர்த்தினார்கள் .

நமது சந்தைகள் நேற்று மட்டுமல்ல கடந்த 2 வாரங்களாக சந்தைகள் அதே நிலைகளில் 4200 - 4500 நிலைகளுக்கு இடையே வர்தகமாகி வருகிறது . உலக சந்தைகளில் ஏற்ப்படும் சரிவுகள் நமது சந்தைகளில் நிறுத்தப்பட்டு வருகிறது . ஆசிய சந்தைகளை பொறுத்த வரை எந்த வித ஊக்க மற்றும் நல்லதொரு அறிவிப்புகளும் இன்றி சந்தைகள் உயர்த்தப்பட்டு வருகிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுடன் துவங்கியது பின்னர் சந்தைகளில் வந்த வேலையில்லாதோர் பற்றிய அறிவிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து சந்தைகளில் சற்று சரிவுகள் அதிகரித்தது பின்னர் சந்தைகள் முடிவில் 1 % வரை சரிவில் முடிந்தன . மேலும் நேற்று வந்த அமெரிக்கா பொருளாதார அறிவிப்புகள் சற்று மோசமடைந்து வந்தது . இது வரும் நாட்களில் சந்தைகளை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது .

இன்றைய ஆசிய சந்தைகள் 1 % - 2 % வரை சரிவில் துவங்கி உள்ளன . நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் போக்கினை பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் ஏன் என்றால் சிங்கபூர் நிப்டி 40 புள்ளிகள் மட்டும் சரிவில் துவங்கி உள்ளது . அதை வைத்து பார்க்கும் பொழுது நமது சந்தைகள் அதே அளவு தான் சரிவுகளில் துவங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

நமது சந்தைகளை பொறுத்த வரை 4480 நிலைகளுக்கு கீழே சந்தைகள் செல்லாத வரை சரிவுகளுக்கு வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் . ஆகவே நண்பர்களே முடிந்தவரை உயர்வுனைலைகளில் தங்களது குறுகியகால மற்றும் நீண்ட கால முதலீடுகளை வைத்து வேடிக்கை பார்க்கும் அருமை நண்பர்களும் சற்று சந்தையை விட்டு வெளியேறுவது நலம் ...

நன்றி !!!

புதன், 3 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளை வைத்து பார்த்தால் நமது சந்தைகளை ஆபரேட்டர்கள் எந்த அளவிற்கு தங்கள் கைகளில் சந்தைகளை வைத்துள்ளார்கள் என்பது புரிகிறது . இத்தனை நாளாக சீன சந்தைகளின் போக்கினை பின் தொடர்ந்த நமது சந்தைகள் நேற்றய சந்தையில் முற்றிலும் மாறுபட்டு திடீரென சற்று சரிவில் இருந்த சந்தைகள் நாளின் உயரங்களை தாண்டி வணிகம் ஆனது .

ஆசிய மற்றும் சீன சந்தைகள் முடிவில் நமது சந்தைகள் கிட்டத்தட்ட பிளாட் நிலைகளுக்கு வந்தன என்பது குறிப்பிட தக்கது . இந்த நிலைகளில் வர்த்தகம் செய்ய நமது சந்தைகளில் மக்கள் தயங்குகிறார்கள் . நமது சந்தைகள் முடிவில் உயர்வில் முடிந்தன அதுவும் உலக சந்தைகளின் வர்த்தக முறைகளுக்கு மாறாக .

நேற்றைய அமெரிக்கா சந்தைகளின் நிலைகளை பொறுத்த வரை உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தவன் கதை தான் . சந்தைகள் மேலும் உயர முடியாமலும் தடாலென வீழ முடியாமலும் திணறுகின்றன . அமெரிக்கா சந்தைகளை பொறுத்த வரை மேலும் உயர வாய்ப்புகள் இல்லை . என நிபுணர்கள் குழு கூறுகிறது .

இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் சற்று குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன் . நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தையிலும் உயர்ந்து துவங்க வாய்ப்பு அதிகம் உள்ளன .

ஆசிய சந்தைகளின் தற்போதைய உயரங்கள் முன்னெப்போது இல்லாத அளவில் உயர்ந்துள்ளன . சந்தைகளில் முன்னெப்போதும் நடைமுறையில் இல்லாத நேர்மறையான விசயங்கள் இல்லாத போதும் சந்தைகள் உயர்வதும் அல்லது உயர்ந்து கொண்டே செல்வதும் சற்று ஆச்சர்யமாக உள்ளது .

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் 4500 - 4600 நிலைகளுக்குள் வர்த்தகம் ஆகும் . இவற்றில் எந்த நிலைகள் உடை பட்டாலும் சந்தைகள் அந்த பக்கமாக செல்லலாம் .

சந்தைகளில் தற்சமயம் உள்ள சூழலை வைத்து பார்க்கும் பொழுது பட்ஜெட் அறிவிப்பிற்கு முன்னர் சந்தைகள் பெரிதாக கீழிறங்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது .

நன்றி !!!

செவ்வாய், 2 ஜூன், 2009

நேற்றைய சந்தைகளில் நிப்டி துவக்கத்தில் இருந்தே அதிக பட்ச புள்ளிகளை வர்த்தகமாகி கொண்டு இருந்தது . அதன் பின்னர் இடை வேளையின் பொழுது சந்தைகள் மிக வேகமானதொரு சரிவினை கண்டது . பின்னர் சந்தைகள் திரும்ப அதன் போக்கில் வர்த்தகம் ஆனது .

ஆசிய சந்தைகள் முடிவில் 3 % - 4 % வரை உயர்வில் முடிவடைந்தன . நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் முடிவில் 1 % மட்டும் உயர்ந்து இருந்தன . வர்த்தகத்தின் முடிவில் சந்தைகள் 2 % வரை உயர்ந்து முடிந்தன . நாளின் உயரங்களுக்கு அருகாமையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது .

நேற்றைக்கு பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது திவால் அறிக்கையை தாக்கல் செய்தது .இருப்பினும் அரசு தொடர்ந்து ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை நடத்த உள்ளதாக செய்தி வெளியானது . மேலும் அரசிடம் ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 60 % இருப்பது குறிப்பிட தக்கது .

மேலும் ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது கடன் தொகையாக குறிப்பிட்ட தொகையானது $ 172.8 பில்லியன் ஆகும் . அரசின் எதிர் கால திட்டமாக ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது . அதற்க்கு 90 நாட்கள் வரை ஆகலாம் என்றும் கூறியுள்ளது .

நமது சந்தைகள் மட்டும் தான் எதிர் மறையான செயல்களுக்கு சந்தையினை உயர்த்துமா ? எங்களுக்கும் தெரியும் என நேற்றைய அமெரிக்கா சந்தைகளும் களத்தில் இறங்கி அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே நமது சந்தைகள் போலவே உயர்ந்து துவங்கி பின்னர் உயர்விலேயே வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தன .அங்கு உள்ள நிபுணர்கள் கூறும் பொழுது வரும் நாட்களில் அமெரிக்கா சந்தைகள் சரிவினை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் .

நமது சந்தைகளை பொறுத்த வரை தொடர்ந்து உயர்வுகளே இருந்து வருகிறது . சரிவுகள் என்பது மருந்துக்கும் இல்லை . இன்றும் சற்று அதிகரித்து துவங்க வாய்ப்பு உள்ளது . நண்பர்களே இன்றைய சந்தைகளை பொறுத்த வரை நுட்ப காரணிகளை வைத்து அல்லது பண்ட மண்டலான விசயங்களை வைத்து சந்தையின் போக்கினை நிர்ணயிக்க முடியவில்லை . காரணம் சந்தைகளை தங்கள் கையில் கொண்டுள்ள பரஸ்பர நிதியகங்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் என அனைவரும் வரும் நாட்களில் சந்தைகளில் பங்குகளை விற்க முடியாமல் தடுமாறலாம் என நினைக்கிறேன் (அதிக விலைகளில் - தற்போதைய விலைகளில் )

எதற்கும் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் தினசரி வர்த்தகர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸ் உபயோக படுத்துங்கள் . நேண்ட கால முதலீட்டாளர்கள் மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருங்கள் சந்தைகள் ஒரு நிலைகளில் வந்து நிற்கும் அப்பொழுது உங்கள் முதலீடுகளை ஒரே சமயத்தில் வாங்காமல் சந்தைகளின் சரிவின் பொழுது சிறிது சிரிதாத வாங்குங்கள் ..

முடிந்தவரை லாங் நிலைகளில் பொசிசன் எடுத்து வைப்பதை தவிர்க்கவும் .

நன்றி !!!

திங்கள், 1 ஜூன், 2009

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்கா சந்தைகள் சிறிது உற்சாகத்துடன் 1%வரை அதிகரித்து முடிந்தன . அங்கு சந்தைகளுக்கு ஆதரவான செய்திகள் எதுவும் இல்லை . அதனால் சந்தைகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக 8000 - 8500 புள்ளிகளில் வர்தகமாகி வருகிறது .

இன்றைய ஆசியசந்தைகள் துவக்கம் சற்று மகிழ்ச்சிகரமானதாக உள்ளது . ஆசிய சந்தைகள் 1 % அளவிற்கு உயர்ந்துள்ளன . ஆசிய சந்தைகள் எந்த வித சரிவுமின்றி செல்வது குறிப்பிட தக்கது .

நமது சந்தைகள் இன்றைய துவக்கம் 1 % வரை அதிகரித்து துவங்க வாய்ப்பு உள்ளது . மேலும் கடந்த வாரத்தில் வந்த ஜி டி பி மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் சந்தையில் எந்த வித பாதகத்தினையும் ஏற்ப்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன் .

ஆனாலும் நமது சந்தைகள் பாராளுமன்ற தேர்தல் முடிவு அறிவிப்பிற்கு பின்னர் உயர்ந்த உயர்வுகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் சிறிய சரிவினையாவது தந்து விட்டு மேலே சென்று இருக்கலாம் . அதே போல திரும்ப திரும்ப மேலே சென்று கொண்டுள்ளது

கடந்த வாரம் மட்டும் நமது சந்தைகள் கிட்டத்தட்ட 5 % வரை உயர்ந்துள்ளது .கடந்த இரு வாரங்களில் உலக சந்தைகள் உயர்வு சாதரணமாக உள்ளது ஆனால் நமது சந்தைகளும் சீன சந்தைகளும் அதிக பட்ச உயர்வுகளை எட்டி உள்ளன . இது வரை அமெரிக்கா சந்தைகளை பின் தொடர்ந்த நமது சந்தைகள் இப்பொழுது முழுவதும் சீன சந்தைகளை பின் தொடர்கின்றன .

மேலும் இன்றைய ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் திவால் அறிவிப்புகள் சந்தைகளில் எவ்வித ஏற்ப்படுத்தும் என்பது சற்று கணிக்க முடியாத விசயமாக உள்ளது .

எதற்கும் கவனமாக இருங்கள் லாங் நிலைகள் தவிர்க்கவும்

நன்றி !!!

ஞாயிறு, 31 மே, 2009

இன்றைய தேதியில் பொருளாதார சிக்கல்கள் @

இன்றைய தேதியில் இன்னும் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை . அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் இந்த பிரச்சனைகள் மேலும் வலுவடைந்து வருவதாக தான் உலக வல்லுனர்கள் அனைவரும் கூறும் விஷயம் .

இது சந்தைகளில் எவ்வித தாக்த்தினையும் ஏற்படுத்தவல்லது - அதைப்பற்றிய சில விளக்கங்களை பார்க்கலாம் .

அமெரிக்காவில் வரும் ஜுன் முதல் தேதி அதாவது நாளை ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது திவால் அறிவிப்பினை அரசிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏன் என்றால் ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஏற்க்கனவே திவால் மனு செய்ய வரமாட்டோம் என்று கூறி மோட்டார் நிறுவனக்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க தொகையில் அதிக தொகையினை பெற்ற நிறுவனம் ஆகும் .

மேலும் இந்த நிறுவனம் ஏற்க்கனவே இரண்டு முறைகள் திவால் மனு செய்ய சென்று அரசு விண்ணப்பத்தினை நிராகரித்து விட்டது . இந்த முறை அதையும் மீறி எப்படியும் திவால் மனு செய்ய்ய தயாராகிவருகிறது ஜெனரல் மோட்டார் நிறுவனம் .

தற்பொழுது அமெரிக்காவில் திவால் செய்ய இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டும் என ஒரு அறிக்கை கூறுகிறது (தனியார் நிறுவங்கள் உட்பட ) . அதோடு மட்டுமல்லாமல் தனி நபர்கள் இரண்டு லட்சத்துக்கு மேல் திவால் மனு செய்ய தயாராகி வருகிறர்கள் . அவர்களில் இருபது ஐந்தாயிரம் பேர் இம்மாதம் திவால் மனு செய்ய அனுமதிக்க பட்டுள்ளனர் .

மேலும் அமெரிக்காவில் திவாலாகி வரும் வங்கிகளின் எண்ணிக்கை அறுபதை நெருங்கி வருகிறது . மேலும் சில வங்கிகள் இந்த மாதத்தில் திவால் மனு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது . இவ்வருட இறுதிக்குள் பல வங்கிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது ..

மேலும் அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களான சோனி , மைக்ரோசாப்ட் , வோல்ஸ் வேகன் , ரோல்ல்ஸ் ராய் , சிட்டி வங்கி . மற்றும் பல நிறுவனங்கள் மேலும் மேலும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன . அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணியாளர்கள் என்ற நோக்கத்துடன் ஆட்குறைப்பு நடந்து வருகிறது .

இதற்கிடையில் போன வாரம் நடந்த அதிபர் கருத்தரங்கில் நடை பெற்ற பொருளாதார ப்பிரச்சனைகள் பற்றிய விவாதத்தில் பேசிய திரு . ஒபமாவின்மற்றும் அவர் குழுக்களும் சேர்ந்து இனி பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஊக்க தொகைகள் அதிகம் வழங்கப்பட மாட்டது என உறுதியான அறிவிப்பினை அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் இதில் மறு பரிசீலனை என்பது கிடையாது என்றும் ஒபாமா அரசு திட்டவட்டமாக தெளிவாக கூறியுள்ளது .

இந்த அறிவிப்புகளினால் அமெரிக்கா சந்தைகளில் முதலீடுகள் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளன . மேலும் பரஸ் பர நிதி நிறுவனங்கள் இன்னும் ஆட்குறைப்பில் ஈடு படவில்லை இந்த செய்திகளினால் வரும் வாரங்களில் அவர்களும் ஆட்குறைப்பில் ஈடு படலாம் .

தற்போதைய சூழலில் அமெரிக்காவின் டாலரை முதல் அந்தஸ்தில் இருந்து இறக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சீன மற்றும் இந்தியா இன்னும் சில சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

சில மாதங்களுக்கு முந்தய " G 20 " மாநாட்டில் இது பற்றிய பொதுவான ஒரு கரன்சியை கொண்டு வர விவாதம் பேச ஒபாமா அந்த பேச்சினை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றய உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்கா ஒரு பொருளாதார பிரச்சனைக்குரிய நாடாக கருதப்படுகிறது . அதோடு மட்டுமல்லாமல் பல நாடுகள் அமெரிக்காவின் தற்போதைய சிக்கல்களை வைத்து அமெரிக்காவை ஓரம் கட்ட முயற்சி செய்கின்றன . ஆனால் அதை எளிதாக எதிர் கொள்ள கூடிய திறமை படைத்த இங்கிலாந்து மிகவும் அமைதியாக இருந்து வருகிறது .

இங்கிலாந்திலும் தற்சமயம் அமெரிக்காவை பற்றி பேசிய அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன . ஆகா ------

அதையும் நீட்டி முழங்க வேண்டுமா உங்களுக்கு நண்பர்களே @@@@@@@

ஆக இவ்விரு வல்லரசு நாடுகளிலும் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஊக்க தொகைகள் வழங்கிய போதிலும் அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் இது சம்பந்தமா சலுகைகள் வழங்கியும் பிரச்சனைகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை . பிரச்சனைகள் மேலும் மேலும் தலை தூக்கி வருகின்றன .

இந்த அனைத்து பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு சீன மற்றும் நமது நாடும் மற்றும் ஜப்பானும் இது பற்றிய பேச்சுக்களில் சிறிது தயக்கம் காட்டாமல் எங்களது நாடுகளில் பொருளாதார பிரச்சனைகள் எதுவும் அதிகமாக இல்லை என்று கூறி வருகின்றன .

நிபுணர்களின் கணிப்பின் படி சீனாவில் அடுத்த வருட ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் பயங்கரமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது . நமது நாடும் அது போல தான் உள்ளது . மிக குறைவான இன்பிலேசன் மிக குறைந்த வட்டி விகிதங்கள் என பொருளாதார பிரச்சனைக்கு முன்னரே எல்லாம் குறைவாக உள்ளது .பொருளாதார பிரச்சினைகள் வந்தால் மீண்டும் உலக வங்கியில் கையேந்த வேண்டும் .

அவ்வாறு நடக்கும் சூழ்நிலையில் தற்போதைய அமெரிக்காவை எதிர்க்கும் டாலர் விஷயம் முக்கியமாக பேசப்படலாம் . அதனால் புதிய பிரச்சனைகள் நிகழலாம் .எது எப்படியாகினும் நமது நாடும் சீனாவும் மற்றும் ஜப்பானும் அமெரிக்காவை ஓரம் கட்ட நினைக்கும் எண்ணத்தினை கைவிட்டால் பரவாயில்லை .

அது தான் நமக்கும் நமது நாட்டின் எதிர் காலத்திற்கும் நல்லதொரு விசயமாக இருக்கும் . உலக நிபுணர்களின் கணிப்பின் படி அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார சரிவின் இரண்டாம் நிலை துவங்க உள்ளது . அது கிரெடிட் கார்டு பற்றிய விஷயம் தான் . அவ்வாறு நிகழும் பட்சத்தில் உலகின் முதல் வல்லரசான அமெரிக்கா வீழும் என நினைப்பது முட்டாள் தனம் .

அவ்வாறு நிகழ்ந்தால் அது உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம் .

நண்பர்களே இந்த முக்கிய பதிவின் நோக்கம் சந்தைகள் உயர்ந்து கொண்டே செல்வதர்ககவோ அல்லது நான் ஒரு சரிவின் ஆதரவாளனோ இல்லை நீங்கள் இத்தகைய பிரச்சனைகள் உள்ளதை தெரிந்து கொள்ளவே .


உச்சராக இருங்கள் !!! லாபத்தினை உறுதி செய்யுங்கள் @@@@@@@@@

நன்றி !!!

அடுத்த இது போன்ற முக்கிய விழிப்புணர்வு பதிவு தலைப்பு மட்டும் இங்கே--

--- அமெரிக்காவை சாப்பிட தயாராகும் கிரெடி கார்டு சிக்கல்கள் -----

காத்திருங்கள் நண்பர்களே @@@@@@@@@@@@@@@@@@@@

விழிப்புணர்வு இடுகை 5

மே மாத சந்தைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு இடுகை ,
************************************************************
கடந்த மாத சந்தைகளை பொறுத்த வரை சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் அவர்களின் வாங்கும் படலம் ஏப்ரல் மாத இறுதியிலேயே ஆரம்பித்துள்ளது . காரணம் அவர்களுக்கு அடுத்து அமையுள்ள ஆட்சி காங்கிரெஸ் என்பது அவர்களுக்கு சரியாக தெரிந்துள்ளது. நமது மக்களிடையே எலெக்சன் வரை சந்தைகள் விழாது என்ற ஊடகத்தினை மட்டும் பரப்பி விட்டு சந்தைகளை சரியானதொரு தருணத்தில் மேலே கொண்டு செல்ல ஆரம்பித்தனர் .

மேலும் சந்தைகளில் கடந்த மாதம் சிறிய பங்குகள் முதல் லார்ஜ் கேப் மற்றும் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் நன்றாக உயர்த்தப்பட்டுள்ளது . அதுவும் பல பங்குகளின் விலைகள் இரண்டு மூன்று மடங்கிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகளின் வளர்ச்சி என்பது அதிகம் வியாபாரம் இல்லாமல் சந்தைகள் உயர்வு அடைந்துள்ள அந்த வளர்ச்சி விகிதங்கள் சாதரணமாக
2 % - 5 % வரை ஆகும் .

பங்குகளின் விலைகள் அதிக அளவில் வர்த்தகம் இல்லாமல் திடீர் திடீர் உயர்வுகளை அடைய செய்துள்ளனர் .

சந்தைகளில் வர்த்தகத்தின் அளவு குறைந்து வரும் பொழுது சந்தைகள் திடீர் உயர்வுகளை சந்திக்கின்றன . ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது சந்தைகள் சிறிய அளவிலான சரிவுகளை மட்டும் சந்திக்கிறது . மேலும் அந்நிய மற்றும் ஆபரேட்டர்கள் சந்தைகளில் அடாசு பங்குகளின் விலைகளையும் , மற்றும் முதல் தரம்மான பங்குகளின் விலைகளையும் சற்று அதிகமாக உயர்த்தி உள்ளனர் .

அந்த உயர்வுகளில் தங்கள் பங்குகளை விற்று வருகிறார்கள் . மேலும் இது போன்ற செயல் சந்தைகள் பின்னாளில் பலவீனம் அடைய வாய்ப்ப்பு உள்ளதையே காட்டுகிறது .

நமது மக்களிடையே தவறான ஒரு வர்த்தக முறை உள்ளது அது பங்குகளின் விலைகள் மிகவும் சரிவடைந்து கீழே வாரும் பொழுது கையில் உள்ள பங்குகள் அனைத்தினையும் விற்று விட்டு சும்மா இருப்பார்கள் . அப்பொழுது வாங்க வேண்டும் செய்ய மாட்டார்கள் . ஆனால் இது போன்ற அதிக விலைகள் வரும் பொழுது உள்ளே புகுந்து சிறிதும் மீதமின்றி அனைத்து தொகைகளுக்கும் பங்குகளை வாங்கி போட்டு விடுவார்கள் .

இதை பொறுத்த வரை வாறன் பபெட் அவர்கள் கூறியது போல சந்தைகள் அதிகம் சரிவடையும் பொழுது நாம் சந்தைகளில் வாங்க வேண்டும் அதிகம் உயரும் பொழுது விற்று விட்டு சந்தையை விட்டு வெளியேற வேண்டும் .அதையும் மீறி நாம் விற்றதிர்க்கும் அதிகமாக செல்லும் பொழுது சந்தையை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் .

நம்து மக்கள் இது வரை மூன்று இடங்களில் கோட்டை ( முதலில் சந்தைகள் 20 % சரிவு சனவரி 2008 , அடுத்து " LIFE TIME " குறைந்த பட்ச புள்ளிகளான அக்டோபர் மாதம் 2008 , அடுத்தது சமீபத்திய உயர்வான மே 2009 ) விட்டு விட்டனர் இனியாவது சரியாக சிந்திப்பார்கள் என நம்புகிறேன் ....

மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளின் பொழுதும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நமது சந்தைகளில் இருந்து நமது மக்கள் பலரை வெளியேற்றி அனுப்பி விட்டனர் .

இன்றைய சூழலில் நமது சந்தைகள் உயர்ந்துள்ள உயர்வுகளை மனதில் வைத்து உங்கள் லாபத்தினை உறுதி செய்ய தவறாதீர்கள் .

நன்றி !!!

அடுத்த இடுகையான விழிப்புணர்வு இடுகை 6 - ஐ படிக்க தவறாதீர்கள் ...

மே மாதம் அதிகம் உயர்ந்த இன்டெக்ஸ் !!!

மே மாத பியுச்சர் சந்தைகளில் சில இண்டக்ஸ்களின் உயர்வுகள் சற்று அபரமானதகவே இருந்தன அவைகள் ------------

* சென்செக்ஸ் - 20 %
* நிப்டி - 21 %
* காப் கூட்ஸ் - 42 %
* மிட் காப் - 33 %
* சுமால் காப் - 46 %
* ரியாலிட்டி - 71 %
* பேங்க் இன்டெக்ஸ்- 35 %
*பவர் - 31 %
* மெட்டல் - 45 %

******************************************************

மே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் !!!

மே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் ---
*******************************************
பங்குகளின் பெயர் ----- உயர்ந்த சதவீதம் %
-------------------------------------------------------
* டாட்டா ஸ்டீல் - 70 %
*ரேன் பாக்சி - 67 %
*ப்ரோவோகு - 123%
*ஹச் ஜிஎஸ் எல் - 156 %
* யுனிடெக் - 79%
* நால்கோ - 68 %
* ஆர்பிட் - 136%
* என் எம் டி சி - 126%
* எலி கான் - 126%
*பல கஷ்யப் - 136%
* ஜெ பி அசோசியட் - 76%
* REL காப் - 79%
* REL இன்பிரா - 83%
* யுனிட்டி இன்பிரா - 144%
* அபான் - 108%
*REL காம் - 43%
* இந்தியா புல்ல்ஸ் - 125%
* கம்மன் இந்தியா - 80 %
* எஸ் பி ஐ - 40%
*********************************************************

கடந்த வார சந்தைகள் !!

கடந்த வார சந்தைகள் !!

INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9522.50 = +296.69 .
FTSE = 4417.94 = +52.65 .
DAX = 4940.82 = ------
CAC = 3277.65 = ------
STRAITES = 2329.08 = ----
DOW JONES = 8500.32 = +223.07 .
NASDAQ = 1774.33 = +82.32 .
HANG SENG = 18171.00 = +1108.48 .
KOSPI = 1320.99 = - 0.3 .
NIFTY = 4448.95 =+ 210.45 .
SENSEX = 14625.25 = +738.10 .
SGX NIFTY = 4449 = + 203 .

*********** ************* ****************

வலைப்பதிவு திரும்ப ஆரம்ப அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே !!!

---- வலைப்பதிவு திரும்ப ஆரம்ப அறிவிப்பு ----

கடந்த மாத இடையில் எனது தொழில் முறையான சில வேலை பளுவின் காரணமாக பதிவினை தற்காலிகமாக நிறுத்தியது அறிந்து நண்பர்கள் பலரிடம் இருந்து கேள்விக்குறியுடன் வந்த மின் அஞ்சல் களுக்கு பதில் அஞ்சல் செய்து விட்டு பதிவை தொடருகிறேன் ............

எனக்கு வந்த மின் அஞ்சல் பலவற்றிலும் நண்பரே நீங்கள் கூறியது போல வர்த்தகத்தினை நிறுத்தாமல் தொடர்ந்தேன் , தற்சமயம் பார்த்தால் நஷ்டம் தான் மிச்சம் என மின் அஞ்சல் வந்துள்ளது .

கவலை படாதீர்கள் நண்பர்களே !! சம்பாதித்து கொள்ளலாம் ...

இனி வழக்கம் போல பதிவுகள் தொடரும் ....

அன்புடன்

ரமேஷ்

ஞாயிறு, 24 மே, 2009

கடந்த வார சந்தைகள்

கடந்த வார சந்தைகள் !!
INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************

NIKKIE = 9225.81 = -39.19 .
FTSE = 4365.29 = +17.18 .
DOW JONES = 8277.32 = +8.92 .
NASDAQ = 1692.01 = +12 .
HANG SENG = 17062.52 = +271.30 .
KOSPI = 1321.29 = +11 .
NIFTY = 4238.50 =567.50 .
SENSEX = 13887.15 = +1715 .
SGX NIFTY = 4247 = + 552 .

*********** ************* ****************

வேண்டாமே ஆக்சன் சந்தை !!!

வணக்கம் நண்பர்களே !!!

அடுத்த புதிய பதிவாக எதை எழுதலாம் என்று தோன்றிய பொழுது ஆக்சன் சந்தை பற்றி தோன்றியது ------

இனி அதன் விபரங்களை பார்ப்போம் ---

நாம் முன்பு பங்கு சந்தை ஒரு அலசலில் பார்த்து போல பங்குகளை வாங்கிய () விற்ற பங்குகளை அன்றைய தினத்தன்றே கணக்குகளை முடித்து தர வேண்டும் . அவ்வாறு செய்ய விட்டால் வாங்கிய பங்குகள் டெலிவரி ஆகிவிடும் தரகு நிறுவனத்திற்கு பங்குகளுக்கான தொகையினை செலுத்த வேண்டும் . விற்று வாங்காமல் விட்டு விட்டால் அது ஆக்சன் சந்தைக்கு சென்று விடும் .

ஆக்சன் சந்தை என்றால் என்ன ?

ஆக்சன் சந்தைகள் பங்கு சந்தைகள் தினசரி வணிகமாகும் அதே சந்தைகளில் 12 - 1.30 வரை தனியாக வணிகமாகும் . நாம் பங்குகளை வாங்கி விற்பது போல அங்கே நடக்காது தங்களது கணக்கில் பங்குகளை வைத்துள்ள நபர்கள் விற்ப்பனை மட்டும் செய்யலாம் . யார் வேண்டுமானாலும் விற்ப்பனை செய்யலாம் .

இந்த சந்தையில் விற்ப்பவர்கள் யார் . ??

இதில் விற்ப்பவர்கள் நம்மை போல வணிகர்கள் தான் ஆனால் அவர்கள் கணக்கில் பங்குகள் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் . அவ்வாறு கணக்கில் இருந்தால் சந்தையில் வணிகமாகும் விலையை விட 30 % அதிக விலையிட்டு செல்லிங் செய்யலாம் .

காரணம் ஆக்சன் சந்தைகளில் வாங்குபவர்கள் நமது எக்ஸ்ச்சஞ் தான் அவர்கள் விலையை பார்க்க மாட்டார்கள் . இத்தனை பங்குகள் தேவை என ஆக்சன் சந்தையில் உள்ள விலைகளில் பங்குகளை வாங்கி கணக்கை நேர் செய்வார்கள் . அது 10 % to 30 % வரை நமது சந்தை விலையை விட அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம் .

ஆக்சன் பிற விளக்கங்கள் . ??

மேற்குறிப்பிட்ட படி ஒருவர் தனது கணக்கில் பங்குகளை விற்று கணக்கை நேர் செய்யாமல் விட்டு விட்டால் அது ஆக்சன் சந்தைக்கு விற்றதற்கு பின் இரண்டாவது நாளில் ஆக்சன் சந்தைக்கு வரும் . இது தனியாக ஒவ்வொரு நபர்களை வைத்து பங்குகள் வாங்கப்பட மாட்டார்கள் .

உதா ; ஷேர்கான் , கார்வி , இந்போ லைன் போன்ற பங்கு தரகு அலுவலகங்களின் தலைமையகத்தில் இது போல பங்குகள் மொத்தம் எத்தனை தேவை என கணக்கு இருக்கும் அதை எக்ஸ்ச்சஞ்சில் தினம் கணக்கிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்து ஆக்சன் சந்தைகளில் பங்குகளை வாங்குவார்கள் .

இவ்வாறு ஆக்சன் சந்தைகளுக்கு சென்று பங்குகள் வாங்கப்பட்டால் இது போல தவறுகள் நடக்க கூடாது என்று சில நிறுவனங்கள் அபராதமும் விதிக்கின்றன .

நண்பர்களே !!!

எனது அனுபவத்தின் அடிப்படையில் கண்ட சில உண்மைகள் -----


** அன்றைய தினம் விற்று அதிகரித்த பங்குகளை ஆக்சனுக்கு அனுப்புவதால் நமக்கு டெலிவரி கமிசன் மற்றும் கவர செய்யும் தினம் பங்கின் விலை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் .

தற்போதைய சூழலில் சந்தைகளில் ஆக்சன் சந்தை துவங்கும் பொழுது சந்தைகள் தற்காலிகமாக உயர்த்தப்படுகின்றன . ஆக்சன் சந்தைகள் முடிவடையும் பொழுது தான்
நமது சந்தைகள் சரிவடைகின்றன ..

** ஆக்சன் சந்தைகளிலும் சில சூதாடிகள் உள்ளனர் அவர்கள் அதிக அளவில் பங்குகள் வரும் பொழுது பங்கின் விலையை மிகவும் அதிகரிப்பது இவர்களின் முக்கியமான வேலை ..

** அதிகம் வர்த்தகம் ஆகாத பங்குகளில் விற்ப்பவர்கள் தனது இஷ்டத்திற்கு 30 % வரை அதிக விலையிட்டு வைப்பார்கள் சந்தையில் அந்த விலையிலும் சில சமயம் பங்குகள் வாங்கப்படும் .

நன்றி நண்பர்களே !!!

தங்களது கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் ---

அன்புடன்
ரமேஷ்

புட் ஆப்சன் புட்டுகிச்சு ! கால் ஆப்சன் கழண்டு கிச்சு !!!


எனது ஒவ்வொரு பதிவிலும் நமது பங்கு சந்தை சகாக்களுக்கு பயன் படும் விதத்தில் மிகவும் கடினமான பணிகளுக்கு இடையிலும் பதிவெழுதி வருகிறேன் . பங்கு சந்தை ஓரு அலசலை தொடர்ந்து சந்தைகளின் அடுத்ததடுத்த விபரங்களை தொடர்ந்து கொண்டே உள்ளேன்.

தற்சமயம் சந்தைகளில் பெரிதும் வணிகர்களை பாதிக்கும் ஒரு விசயத்தினை பற்றி =====

இனி அதை பற்றி @@@@@@@@@@@@

இந்த பதிவில் ----

நமது சந்தைகளை பொறுத்த வரை தினசரி வர்த்தகம் , மற்றும் பியுச்சர் மற்றும் ஆப்சன் போன்றவற்றின் மேலோட்டமான விசயங்களை பங்கு சந்தை ஒரு அலசலும் மற்றும் பியுச்சர் அண்ட் ஆப்சன் பதிவிலும் பார்த்தோம் .

இனி ஆப்சன் பற்றி !!!

நானும் கடந்த மூன்று மாதங்களாக சந்தையில் நகர்வுகளை கவனித்து வருகிறேன் . சந்தையில் வர்த்தகத்தில் உள்ள தினசரி வர்த்தகர்களை சந்தையை விட்டே வெளியே அனுப்புவது என்ற கோணத்தில் ஆபரேட்டர்கள் சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள் .

பதிவை படிக்கும் ஒவ்வொரு வரும் பதிவு முடியும் வரை தினசரி வர்த்தகர்கள் என்ற நிலையில் இருக்கவும் ..

தற்போதைய சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது யாவரும் அறிந்ததே ஆனால் இதற்க்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் முன்பெல்லாம் சந்தைகளில் விற்று வாங்கும் அல்லது வாங்கி விற்கும் படலம் தான் இருக்கும் .

பயுச்சர் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது சந்தைகளில் புட் ஆப்சன் அதிகம் வாங்கப்பட்டு இருந்தால் சந்தைகளை ப்ரெட் செய்து சந்தையை உயர்த்தி புட் ஆப்சனை மதிப்பில்லாம செய்வார்கள் . அதே போல எதிர் திசையாக கொண்டால் கால் ஆப்சன் அதிகம் வாங்கப்பட்டு இருந்தால் சந்தையை சரிவு அடையசெய்து கால் ஆப்சனை மதிப்பில்லாமல் செய்வார்கள் .

இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முந்தய வியாபார முறை ( தந்திரம் )

ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன . ஆபரேட்டர்கள் பியுச்சர் வர்த்தகம் முடிவு தேதியின் பொழுது அதிக அளவு புட் ஆப்சனும் அதிக அளவு கால் ஆப்சனும் வாங்கபட்டிருப்பின் சந்தையினை ஒரே இடத்தில அவர்கள் வாங்கும் சக்தியை பயனபடுத்தி நிலை நிறுத்தி புட் ஆப்சன் மற்றும் கால் ஆப்சன் இரண்டையும் மதிப்பில்லாமல் செய்வார்கள் .

ஆனால் கடந்த 3 - 4 மாதங்களாக சந்தைகளில் ஆபரேட்டர்களின் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டதாக உணர்கிறேன் . முன்பு மாத இறுதி செய்த வேலைகளை இன்று நினைத்த மாத்திரத்தில் செய்து வருகின்றனர் .

உதா ; சந்தைகள் 3700 - 4000 க்குள் வர்த்தகம் நடப்பதாக கொண்டால் சந்தையை 3850 நிலைகளில் நிறுத்தி 3600 புட் ஆப்சன் மற்றும் 4100 கால் ஆப்சனை ஷாட் செல் செய்து லாபம் பார்க்கின்றனர் .

இது ஒரு வகையில் அவர்கள் எடுக்கும் ரிஸ்க்கை காட்டினாலும் நமது சந்தைகளில் உள்ள HNI'S - DII'S - எல்லாம் எங்கே சென்று விட்டார்க என்று புரியவில்லை .

மேலும் முன்பெல்லாம் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் எதாவது ஒரு திசையில் இருப்பார்கள் . ஆனால் அவர்கள் செய்யும் வணிகம் முழுவதும் ஹெட்சில் இருக்கும் .

நான் ஒரு மாத வர்த்தக நிலைகள் நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது -----

அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் ஆபரேட்டர்களும் தற்சமயம் சந்தையின் அதிக ஏற்ற இரக்கங்களின் பொழுது சந்தையில் நிப்டி பியுச்சர் வாங்கி புட் ஆப்சனையும் வாங்கி கொள்கின்றனர் . இது ஒரு முறை அல்லது நிப்டி பியுச்சர் விற்று கால் ஆப்சனை வாங்குகின்றனர் .

இவ்வாறு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நமது சிறிய தினசரி வணிகர்கள் உலக சந்தைகளின் போக்கினை வைத்து வர்த்தகம் செய்ய சந்தைக்குள் இறங்கினால் அவர்கள் கேட்கும் விலைக்கு ஆபரேட்டர்கள் விற்கின்றனர் நமது மக்களும் குழப்பத்துடன் ஸ்டாப் லாஸ் அல்லது நஷ்டத்துடன் சந்தையை விட்டு வெளியே வருகின்றனர் .

இவ்வாறு அவர்கள் விற்றால் சந்தைகளை உயர்த்த போகிறார்கள் என்று அர்தம் பின்னர் சந்தைகளின் உயர்வின் பொழுது புட் ஆப்சனை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் அது போல கால் ஆப்சனை விற்றால் சந்தையை இறக்கபோகிறார்கள் என்று அர்த்தம் சரிவின் பொழுது கால் ஆப்சனை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் .

இது போதாதென்று சில சமயங்களில் சந்தையில் புட் ஆப்சனில் அதிக செல்லரை போட்டு வைத்தும் கால் ஆப்சனில் அதிக செல்லரை போட்டு வைத்தும் குழப்பத்தை உண்டு செய்வார்கள் .

இவ்வாறு தான் தற்போதைய சந்தைகளின் போக்கு உள்ளது

இதை புரிந்து கொண்டு தினசரி வணிகர்கள் வணிகம் செய்யுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் .

அன்புடன்

ரமேஷ்