திங்கள், 30 மார்ச், 2009

நண்பர்களே சனிக்கிழமை இடுகையை படித்து விட்டு தொடரவும் !!!

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % அளவிற்கு சரிவடைந்து துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் 1.5 % to 2 % வரை சரிவில் துவங்கும் .. அவ்வாறு நிகழும் பட்சத்தில் முக்கிய அதரவு நிலையான " 3100 " புள்ளிகளுக்கு கீழே சந்தைகள் துவக்கத்திலேயே உடைபடலாம் ..

பின்னர் அடுத்த முக்கிய அதரவு நிலையான 3070 . 3038 . இரண்டு நிலைகள் இருக்கும் . அந்த நிலைகளும் உடைபட்டால் சந்தைகள் மேலும் பலவீனம் அடைய வாய்ப்புகள் உள்ளது .

வரும் வியாழன் நடைபெறவுள்ள " G 20 " மாநாட்டில் பொருளாதார பிரச்சனைகள் குறித்து அனைத்து நாடுகளும் விவாதிக்க உள்ளன . மாநாட்டுக்கு பிறகு சந்தைகள் போக்கில் பெரிய மாற்றம் உண்டாகும் .

மேலும் அனைத்து நாடுகளும் பொதுவன் ஒரு கரன்சி ஐ அறிமுகப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன ( அவர்களின் முனைப்பு கரன்சி வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா டாலர் ஐ முன்னிலை படுத்தக்கூடாது) என்பது குறிப்பிடத்தக்கது ..

ஆகையால் வர இருக்கும் நாட்கள் சந்தைகள் சற்று வித்யாசமாகவே வர்த்தகம் நடக்கும் என நினைக்கிறேன் . முடிந்த வரை சந்தையின் போக்கில் சென்று வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள் ..

எதிர் நீச்சல் வேண்டாம் .. நிலைகள் எடுத்து வைப்பதை தவிர்க்கவும் ..

நிப்டி நிலைகள் ;---------------

அதரவு ; 3100 , 3070 , 3040 ......
எதிர்ப்பு ; 3130 , 3150 , 3170 .......

நன்றி !!!