செவ்வாய், 24 மார்ச், 2009

நேற்றைய சந்தைகள் வெள்ளியன்று முடிவடைந்ததை விட நிப்டி 40 புள்ளிகள் அதிகரித்து துவங்கியது .. ஆசிய சந்தைகள் அனைத்தும் ஏறுமுகத்தில் துவங்கின . பின்னர் ஆசிய சந்தைகள் முடிவில் 3 % to 4 % வரை அதிகரித்து முடிவடைந்தன .

அமெரிக்க சந்தையில் புதிதாக கருவூல பில் சம்பந்தமான ஊக்க தொகை அறிவிப்பு வரலாம் என அரசு அறிவித்தது .. பின்னர் அந்த பில் சம்பந்தமான அறிவிப்பு வெளியானால் சந்தைகள் சற்று மேலே வரும் எனவும் EQ சந்தைகளுக்கு இது சாதகமான அம்சமாக கருதப்பட்டது .

இத்தனை கருத்தில் கொண்டு அமெரிக்க பியுச்சர் சந்தைகள் காலை முதல் ஏறு முகத்திலே இருந்தன . காலை நமது சந்தைகள் துவங்கும் பொழுது + 50 புள்ளிகள் இருந்த DOW மதியத்தின் போது + 200 புள்ளிகளை எட்டியது .
இந்த ஏற்றம் ஆசிய சந்தைகளின் முடிவினையும் மாற்றியது . ஆசிய சந்தைகள் அனைத்தும் உயர் நிலைகளுக்கு அருகாமையில் முடிவடைந்தன ..

நமது சந்தைகள் காலையிலேயே மிக முக்கிய எதிர் நிலையான 2830 என்ற நிலைகளை தாண்டி துவங்கிய சூழலில் அடுத்த கட்ட நகர்வுகள் எதிர் பார்த்து போல கீழே உடைய வில்லை . மேலும் 2830 ஐ அடுத்த நகர்வுகள் சந்தையில் பெருமளவு " SHORT COVERING RALLY " யை உருவாக்கியது .. சில நிறுவன பங்குகள் பல மடங்கு விலை ஏற்றம் கண்டன ..

மேலும் " 2850 " புள்ளிகளைக் கடந்ததும் சந்தைகள் மின்னல் வேகத்தில் ( நமது சந்தைகளுக்கு நல்லதொரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டதை போல ) மிக எளிதாக 2920 , 2950 , ஆகிய முக்கிய எதிர் நிலைகளை கடந்து நாளின் உயரங்களுக்கு அருகாமையில் சந்தைகள் முடிவடைந்தன ....

அமெரிக்க சந்தைகள் கருவூல பில் சம்பந்தமான அறிவிப்பிற்காக சந்தை எழுச்சி அடைய துவங்கின . முடிவில் அமெரிக்க சந்தைகள் 6 % to 7% வரையிலான ஏற்றம் பெற்று முடிவடைந்தன ..

ஆசிய சந்தைகளை பொறுத்த வரையில் நேற்றே முடிந்த வரை எழுச்சி அடைந்து விட்டன .. அந்த அளவிற்கு மேல் சற்று 2 % வரை இன்றைய சந்தையில் எழுச்சி அடையலாம் என நினைக்கிறேன் . மேலும் இன்றைய ஆசிய சந்தையில் முடிவில் லாப நோக்கில் சற்று சந்தையில் விற்பனை அதிகரிக்கலாம் எனவும் எதிர் பார்க்கிறேன்

நமது சந்தைகளை பொறுத்தவரை எந்த ஒரு நிலைப்பாட்டிற்கும் வர முடியாத சூழலில் உள்ளோம் . ஏனெனில் டெக்னிகல் " ஐயும் சாராமல் , பண்டமன்டலையும் சாராமல் முடிந்த வரை தலை கீழாக வர்த்தகம் நடந்து வருகிறது .. இது சில ஆபரேட்டர்களின் கையில் சந்தை இருப்பதை உணர்த்துகிறது.. அவர்கள் கையில் இருந்து சந்தைகள் வெளிவந்தால் தான் சந்தைகளின் கணிப்பு சரியாக இருக்கும் ..

எனது எதிர் பார்ப்பின் படி சந்தைகள் இன்று 1 % to 2% வரையிலான உயர்வுகள் மட்டுமே சந்தையில் சாத்தியமாகும் என நினைக்கிறேன் ..

மேலு சந்தைகள் வலுவான எதிர் நிலையான 2980 to 3000 புள்ளிகளை கடக்க சற்று வாய்ப்புகள் குறைவே .. அப்படி சிரமப்படும் பட்சத்தில் அந்த நிலைகளில் சந்தையில் சற்று லாபம் கருதி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ..

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் சந்தையின் ஒவ்வொரு உயரங்களிலும் முடிந்த அளவு தங்கள் நிலைகளில் இருந்து வெளியேறுவது மற்றும் லாபத்தினை உறுதி செய்வது தான் சால சிறந்ததாகும் .. ( பின்னாளில் வருத்தப்பட வேண்டியது இல்லை ).

நிபிட்டி நிலைகள் ;;

அதரவு ---- 2920 , 2900 ,2830 .....
எதிர்ப்பு ---- 2950 , 2980 , 3000 .....


நன்றி !!