சனி, 28 மார்ச், 2009


புதிய
மாதத்தில் முதல் வர்த்தக தினம் நமது சந்தைகள் இன்னும் ஆபரேடர்களின் கையில் இருந்து விடுபடவில்லை என்பது மட்டும் நன்கு புரியும் வகையில் நேற்றைய சந்தையின் போக்கு இருந்தது .. ஆசிய சந்தைகள் " FLAT " நிலையிலேயே தங்கள் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன ..ஆசிய சந்தைகளின் முடிவில் நமது சந்தைகள் 1 % to 1.5 % வரை அதிகரித்து வர்த்தகம் நடந்து கொண்டு இருந்தன ..

ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்திற்கு பின் நமது சந்தைகள் அடுத்த அடுத்த உயரங்களை தொட முயற்சி செய்தன . வெற்றியும் கண்டன , முடிவில் தேசிய பங்கு சந்தை 26 புள்ளிகள் உயர்ந்து " 3108 " புள்ளிகளில் முடிவடைந்தன ..

நேற்றைய அமெரிக்கசந்தைகள் 2.5 % 3 % வரை சரிவினைக் கண்டன .. அமெரிக்க சந்தைகளை பொறுத்த வரையில் ஓரளவு மேல் நிலையை அடைந்து விட்டதாக கருதுகிறேன் .. இனி வரும் நாட்களில் லாப நோக்கில் பங்குகளின் விற்பனை சந்தையில் வரலாம் என நினைக்கிறேன் ..

நன்றி !!!