திங்கள், 23 மார்ச், 2009

என்னை பற்றி !!!

வணக்கம் நண்பர்களே !!!!

என்னை பற்றி .....

உண்மையாக சொன்னால் நான் ஒரு அவசர குடுக்கை (இப்படி ஆரம்பிப்பது தான் சரி )..........

எனது பெயர் பாமரன் வயது 28 தான் கடந்த ஆறுவருடங்களாக பங்கு சந்தையில் வியாபாரம் செய்து வருகிறேன் .. இந்த ஆறு வருடங்களில் எனது அனுபவம் என்ன என்று பார்த்தால் ...

நான் பங்கு சந்தையில் நுழைந்த போது இன்று உள்ளது போல் அதிக விஷயம் தெரிந்த ஆட்கள் இல்லை மற்றும் சரியான வழிகாட்டுதலும் இல்லை .. எனது ஓரிரு நண்பர்கள் பங்கு வணிகம் செய்து வந்தனர் .. அவர்களிடம் சந்தை பற்றி சில விஷயங்கள் மட்டும் கேட்டு அறிந்தேன் ..பின்னர் அனேக விஷயங்கள் புத்தகம் வாயிலாகவும் மற்றும் வலை தளங்கள் உதவியுடனும் தேடி தேடி அறிந்தேன் ..

ஆனால் அதற்குள் சின்ன சின்ன இடைவெளியில் சந்தைகள் என்னை ஆசை பட .. நானும் நம்பி உள்ளே வந்தேன் ..

வந்தவுடன் @@@@@@@@@@@@@@@@@@

தினசரி பங்கு வணிகம் , கமாடிட்டி வணிகம் , புட் மற்றும் கால் ஆப்சன் மற்றும் பியுச்சர் வணிகம் என எல்லாம் செய்து அனுபவம் தான் பெற முடிந்தது .. பல லட்சங்கள் இழந்தது தான் மிச்சம் .. பின்னர் ஒரு நாள் அதிக பட்ச இழப்பாக பல லட்சங்களில் இழந்து விட்டு யோசித்த பொழுது தான் பங்கு சந்தையில் நிதானம் பொறுமை இரண்டும் மிக அவசியம் ..

இவை இரண்டும் எனக்கு இருந்தது ஆனால் அதிகமா தேவை என்பது இழப்புக்கு பின்னால் தான் தெரிந்தது .. அதைவிட முக்கியம் தன்னம்பிக்கை .. சந்தைகள் எப்போதும் இருக்கும் ஆனால் நாம் சந்தையில் இருக்க வேண்டும் ...

சந்தை
என்பது கடல் போல கரையில் இருந்து பார்த்தால் சாதாரணமாக தான் இருக்கும் . கடல் அலை போல வந்து தங்கள் காதுகளில் சில விபரங்களை கூறி உள்ளே வர செய்யும் .............................

( மச்சான் உள்ளே போனாலே பணத்தை அள்ளிடலாம் .. சாக்கு பை தான் வேண்டும் ) உள்ளே இறங்கினால் தான் சில அல்ல பல விசயங்கள்
தெரியும் ..

நானும் ஒரு வருடம் ஆனதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல அலங்காரத்துடன் காலரை தூக்கிக்கொண்டேன் .. உள்ளே வேகமாக சென்று கொண்டு இருந்தேன் .. அப்பொழுது தன் தெரிந்தது வண்டியில் பிரேக் இல்லை முட்டி மோதி விழுந்து .. எழுந்து நின்றேன் ..

(நின்றேன் என்பது ஒரு வார்த்தை எழுந்து நிற்க என்பது நஷ்டத்தை வைத்து அல்ல சந்தையில் ஏற்பட்ட அடிகளை வைத்து ) பல இழப்புகளை சந்தித்தேன் ..

பின்னர் பல விசயங்களை எனது அறிவுக்கு அப்பாற்பட்டு தேட ஆரம்பித்தேன் ...

இழப்பு ஒன்று தான் மனிதனை பல விசயங்களில் சீர்படுத்தி ஒழுங்கு படுத்தும் ..

அது போல எனது இழப்புகள் என்னை சரி வர ஒழுங்கு படுத்தியது .

பின்னர் என் போல பலர் உள்ள நமது தமிழ் மண்ணில் தமிழிலேயே சந்தை பற்றி எழுதினால் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே என்று தோன்றியது

எழுத ஆரம்பித்து ................................. எழுதினேன் ..................................

முடிந்த வரை எழுதிக்கொண்டே இருப்பேன் ....

உங்கள் ஆதரவுடன்
அன்புடன்
பாமரன்