வியாழன், 30 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி துவக்கத்தில் ஆசிய சந்தைகளின் உயர்வினை ஒட்டி 40 - புள்ளிகள் அதிகரித்து துவங்கின . பின்னர் சந்தைகள் எதிர் பார்த்தபடி உயர்வுகள் சாத்தியமானது . சந்தைகள் சிறிதும் சரிவின்றி உயரங்களை கடந்து வர்த்தகம் நடக்க தொடங்கின .

போன வார பதிவுகளிளில் குறிப்பிட்டது போல மகாராஷ்டிரா மாநில தேர்தலை முன்னிலை படுத்தி சந்தைகள் உயர்த்தப்பட்டது . நிப்டி முடிவில் 111 புள்ளிகளில் கிட்டத்தட்ட 3 % மேல் உயர்ந்தது . ஆசிய சந்தைகள் அனைத்தும் 3 % உயர்வில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் 1 % அளவிற்கு உயர்ந்து துவங்கின . மேலும் திரு ஒபாமா அவர்கள் அதிபராக தேர்வாகி" 100 " நாட்களின் சிறப்பு கொண்டாட்டங்கள் நடை பெற்றது . இந்த கொண்டாட்டங்களால் நியூயார்க் நகரமே விழாக்கோலம் கொண்டது . சந்தைகளிலும் அந்த உற்சாகம் காணப்பட்டது .

அமெரிக்கா சந்தைகள் நேற்றைய சந்தையில் உயர்வுகளிலேயே வர்த்தகம் ஆனது . சந்தைகள் முடிவில் 2 % - 2.5 % வரை உயர்ந்து முடிந்தன . ஐரோப்பிய சந்தைகளும் 2 % - 2.5 % வரை உயர்ந்து முடிந்தன .

இன்றும் நாளையும் நமது சந்தைகள் விடுமுறை !!!

இன்றைய ஆசிய சந்தைகள் சற்று அளவுக்கு மீறி 3 % - 4 % அதிகரித்து துவங்கி உள்ளன . இதில் ஜப்பானிய சந்தை உயர்வு சற்று சரி என்றே கூறலாம் . ஜப்பானிய சந்தைகள் நேற்று விடுமுறை . அதனால் இந்த உயர்வுகள் உலக சந்தைகள் வரிசைப்படி துவக்கமாக துவங்கி உள்ளன . ஆனால் ஆசிய சந்தைகள் நேற்றும் உயர்ந்து இன்றும் உயந்துள்ளது . சற்று வேடிக்கையாக உள்ளது . இருந்தாலும் இவை அனைத்தும் உலக சந்தைகளின் வரிசையில் இவ்வார இறுதிக்குள் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் .

சரி நமது சந்தைகள் இல்லை நாம் ஆக வேண்டியதை பாப்போம் . இனிதாக விடுமுறைகளை களியுங்கள் நண்பர்களே . !!!

---- நமக்கு தெரியாததை தெரியாது என ஒப்புக்கொள்வது தான் அறிவு -----

நன்றி !!!
அன்புடன்
ரமேஷ்