புதன், 29 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் சரிவில் துவங்கின . ஆனால் பின்னர் சந்தைகள் வெகு நேரம் ஒரே நிலைகளில் நின்று வர்த்தகம் ஆனது பின்னர் உலக சந்தைகளில் நேற்று முன்தினம் நடந்தது போல டவ் ஜோன்ஸ் பியுச்சர் சந்தை மற்றும் ஆசியசந்தைகள் ஐரோப்பிய சந்தைகள் என அனைத்தும் 1 % - 3 % வரை சரிவில் வர்த்தகம் ஆனது .

ஆனால் நேற்று முன்தினம் சந்தையின் சரிவுகள் நிறுத்தப்பட்டன . ஆனால் நேற்றைய சந்தையில் அந்த நிறுத்தங்கள் நடக்கவில்லை . ஆனால் எதிர் பார்ப்புக்கு மீறி சந்தைகள் சரிய ஆரம்பித்தன . அதுவும் ஒவ்வொரு குறைந்த பட்ச புள்ளிகளுக்கும் ஒரு சிறிய உயர்வு அதுவும் வாங்குவது போல ஒருதோற்றதினை உண்டு படுத்தி சந்தைகள் வீழ்ந்தன . ஆக எல்லோரும் எதிர் பார்க்காத வண்ணம் சந்தைகள் வீழ்ந்தன .

அசியசந்தைகள் முடிவில் பெரிய சரிவுகளை எதிர் நோக்கியது . முடிவில் 2.5 % - 3 % சரிவில் முடிந்தன . நமது சந்தைகள் அதையும் மீறி 3 % - 3.5 % வரை சரிவடைந்து முடிந்தன .

நேற்றைய அமெரிக்காசந்தைகள் "பிளாட் " நிலைகளில் துவங்கி பின்னர் இடையில் எந்த வித உயர்வும் இல்லாமல் முடிந்தன . முடிவிலும் சந்தைகள் " பிளாட் " நிலைகளில் வர்த்தகத்தை முடித்து கொண்டன .

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . இவை வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சியாக இருக்கலாம் . ஜப்பானிய சந்தைகள் இன்று விடுமுறை தினம் ஆதலால் ஆசிய சந்தைகள் நமது சந்தைகள் துவக்கத்திர்க்காக நாளின் உயரங்களுக்கு அருகாமையில் வர்த்தகம் ஆகி கொண்டுள்ளன . ஆக நமது சந்தைகளிலும் வீழ்ச்சிக்கு பிந்தைய எழுச்சியாக ஒரு உயரங்களும் மற்றும் பியுச்சர் சந்தைகள் முடிவு தினம் மற்றும் நாளைய மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆகியவற்றை வைத்து நமது சந்தைகளில் நல்லதொரு உயர்வுகள் வரலாம் ..

நமது சந்தைகளை இன்று 1.5 % - 2 % வரை உயர்வில் தொடங்கலாம் . அதன் பின்னர் சந்தைகள் பியுச்சர் வர்த்தக முடிவினை வைத்து செயல்படும் . இன்றைய சந்தையில் நுட்ப காரணிகள் எதுவும் ஒத்து வராது .

குறிப்பு -----
*************
நண்பர்களே நுட்ப காரணிகளை பொறுத்த வரை (டெக் அனலிசிஸ் ) எப்போதும் பியுச்சர் சந்தைகள் முடிவு தேதிக்கு இரு தினங்கள் முன்பு இருந்தே ஒத்து வராது . நினைவில் கொள்ளவும் .....

வாழ்க வையகம் . வளர்க தமிழகம்

நன்றி !!!!