புதன், 22 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி முன்தினம் கூறியது போல 50 புள்ளிகள் சரிவில் துவங்கி பின்னர் மீள ஆரம்பித்து . பின்னர் சரிவடைந்து இடையில் எதிர் பார்த்து போல ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிக்கை வெளியிட்டது அதனால் சந்தைகள் சரிவில் இருந்து முழுவதும் மீண்டு " flat " நிலைகளில் முடிவடைந்தன . ஆனால் சந்தைகள் இடையில் இறக்கங்கள் சற்று அதிகமாகவே இருந்தது .

நேற்றைய சந்தையில் ஆசிய சந்தைகள் காலை துவங்கிய அதே நிலைகளில் 3.5% - 4 % வரை சரிவுகளில் முடிவடைந்தன . ஆனால் நமது சந்தைகள் சரிவுகள் எதுவும் இல்லாமல் " FLAT " நிலைகளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் முந்தய வீழ்ச்சியின் எழுச்சியாக 1.5 % - 2.5 % வரை அதிகரித்துள்ளது . மேலும் இன்னும் சில பிரச்சனைகள் வரும் நாட்களில் வரவுள்ளன . வரும் நாட்களில் உலக சந்தைகள் இனி லாபத்தினை உறுதி செய்யும் ..

இன்றைய ஆசிய சந்தைகள் " FLAT " நிலைகளை சரிவில் துவங்கி உள்ளன . சந்தைகளுக்கு போதுமான வலு இல்லை என நினைக்கிறேன் . மேலும் இது வரை வந்த ஊக்க அறிவிப்புகள் சந்தைகளை ஓரளவு நிலை நிறுத்தி மீள செய்துள்ளன . ஆகவே உலக சந்தைகளில் அடுத்த செய்திகள் வரும் வரை சந்தைகள் குறிப்பிட்ட புள்ளிகள் இடையில் வர்த்தகம் நடக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தைகள் 10 - 15 புள்ளிகள் வரை உயர்வில் துவங்க வாய்ப்பு உள்ளது . மேலும் சந்தைகள் கடந்த சில தினங்களாக சந்தையில் நடக்கும் வர்த்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நிப்டி கடந்த ஒருவார காலமாகவே " 3350 -3500 " நிலைகளுக்கு இடையில் வர்தகமாகி வருகின்றன . மேலும் உலக சந்தைகள் சரிவடையும் நிலையிலும் நமது சந்தைகள் சரிவடையாமல் நிறுத்த படுகிறது . இவற்றை வைத்து பார்க்கும் பொழுது சந்தைகள் ஒரு பெரிய உயர்வுக்கு தயாராக உள்ளதாக கருதுகிறேன் .

நிப்டி தற்சமய வர்த்தகங்களின் படி 3300 நிலைகள் உடை படாத வரை சந்தைகள் கீழிறங்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன . மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் (முதலீடு முந்தய பதிவில் குறிப்பிட்டது போல) இந்த மாத இறுதி வரை குறைய வாய்ப்புகள் இல்லை என கருதுகிறேன் .

நிப்டி நிலைகள் ----

அதரவு --- 3334 , 3301 , 3275 ..
எதிர்ப்பு --- 3380 , 3410 , 3450 ...

நன்றி !!!