சனி, 18 ஏப்ரல், 2009

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் !!!

பங்கு சந்தை பற்றிய சில விபரங்கள் மற்றும் சந்தையின் சிறப்பம்சங்களை எனது பதிவுகளில் தெரிந்து கொண்டீர்களா ?

நண்பர்களே !!!!!
இன்றைய சந்தை நிலைமைகளை வைத்து அந்நிய முதலீட்டாளர்களை பற்றி ஒரு பதிவு எழுதலாம் என தோன்றியது உடன் உங்கள் முன் பார்வைக்கு ...

நமது சந்தைகளில் ( நான் பங்கு சந்தை ஒரு அலசலில் கூறியது போல ) சிறு முதலீட்டாளர்கள் , நீண்ட கால முதலீட்டாளர்கள் , தினசரி வணிகர்கள் அந்த வரிசையில் DII'S - " DOMESTIC INSTITUTIONAL INVESTOR , HNI 'S - HIGH NETWORTH INDIVIDUAL INVESTOR , QNI 'S - QUALIFIED NETWORTH INDIVIDUAL INVESTOR -- இவர்களுக்கு அடுத்த படியாக வருபவர்கள் தான் - FII 'S - FOREIGN INSTITUTIONAL INVESTOR ... என்கிற இந்த அந்நிய முதலீட்டாளர்கள் ...

சரி அந்நிய முதலீட்டாளர்கள் என்றால் யார் ? எப்படி நமது சந்தைக்கு வருகின்றனர் ? ஏன் வருகின்றனர் ? ...

அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் வெளி நாடுகளில் இருந்து உலக சந்தைகளில் வர்த்தகம் செய்யவரும் ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு பரஸ்பர நிதியகங்கலாகவோ இருக்கலாம் . இவர்களின் குறிக்கோள் லாபம் பர்ப்ப்பது மட்டும் தான் . பின்னர் சந்தைகளில் ஒரு அபரீத வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை ஏற்ப்படுத்தி லாபம் பர்ப்ப்பர்கள் அது தான் அவர்களின் வேலை ..

இவர்கள் பங்கு சந்தைகளை நெறிமுறை படுத்தும் அமைப்பான செபி இன் அனுமதி பெற்று பின்னர் கணக்குகள் துவங்கி சந்தைகளில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்யலாம் என செபி ஆணை வழங்கிய பிறகு அவர்கள் வர்த்தகத்தினை தொடங்கலாம் .

இவர்களுக்கென அரசு பல சட்டதிட்டங்களை வகுத்து அதை நெறிமுறை படுத்தி "p " " notes " என்று பெயரிட்டுள்ளது . இந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ள படி தான் அந்நிய முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் மீறினால் செபி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் .

இந்த " p " "notes " இல் அவர்களுக்கு தரப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் சில விபரங்கள் , வியாபார ஒப்பந்தங்கள் , வியாபார முறைகள் மற்றும் தினசரி வணிகத்தின் அளவுகள் போன்ற விபரங்கள் இருக்கும் . இதில் அவ்வப்போது தேவைப்படும் பொழுது அரசு சில மாற்றங்களை கொண்டு வரும் ஏனெனில் சந்தை முழுவதும் அவர்களிடம் செல்லாமல் இருக்க மற்றும் சந்தைகளில் ஒரு நிலையான போக்கினை ஏற்ப்படுத்த ...

தற்சமய நிலை என்ன ?
தற்போழுது சந்தைகள் அந்நிய முதலீட்டாளர்கள் கைபொம்மை ஆகி விட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே காரணம் நமது மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டது ஏனென்றால் அனைவரும் அதிக பட்ச விலைகளில் அதிக பங்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

நாம் அவர்களுக்கு நிகராக வர்த்தகம் செய்ய சந்தையில் தற்சமயம் யாரும் இல்லை . ஏன் முக்கிய நபர்களான DII'S, QNI'S ,HNI'S இவர்கள் கூட இன்று சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களை நிறுத்த முடியவில்லை .

இதே சிறிது காலங்களுக்கு முன்பு இவர்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு எதிராக நின்று சந்தையை வலுஉள்ளதாக மாற்றினார்கள் . ஆனால் தற்போதைய நிலையில் சந்தையின் போக்கினை மாற்ற கூடிய அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் உருவெடுத்துள்ளனர் . ஆதலால் இவர்கள் சக்தி சற்று குறைந்து விட்டது .

அந்நிய முதலீட்டாளர்களை பொறுத்த வரை ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு கட்டமைப்பு இன்ன பிற தொழில் வளர்ச்சிகள் நன்றாக உள்ளது அல்லது வரும் காலத்தில் சிறப்பபாக இருக்கும் என கருதினால் அவர்கள் அதிக அளவு தொகையினை முதலீடு செய்வார்கள் .

அவர்கள் எடுத்து வரும் தொகையானது USD $ ஆக வரும் பொழுது சாதரணமாக சந்தையில் ஒரு பெரிய தொகையாக வந்து சேரும் . அரசாங்கமும் சந்தையின் நலன் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் முதலீடு செய்யும் தொகையினை சமயத்தில் அதிகரிப்பார்கள் மற்றும் சில சலுகைகளையும் வர்த்தக சம்பந்தமாக அறிவிப்பார்கள் . இவர்களால் தான் சந்தைகள் ஒரு பெரிய அளவில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டாகிறது ..

நன்றி !!!

மீதி அடுத்த இடுகையில் தொடரவும் .......