வியாழன், 23 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி முக்கிய அதரவு நிலையான " 3300 " நிலைகள் உடைபட்டு இருப்பது சந்தைகளின் பலவீனத்தை காட்டுகிறது . இருப்பினும் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது . இது ஒரு வகையில் சந்தைகளின் திடீர் உயரங்களை கொண்டு வரலாம் என எதிர் பார்க்கிறேன் ..

மேலும் நமது சந்தைகளில் காலாண்டு அறிக்கைகள் மிகவும் மோசமாக வந்து கொண்டுள்ள சூழலிலும் சந்தைகளின் போக்கை நிர்ணயிக்க முடியவில்லை , இது நேற்றைய சந்தையில் நன்றாக பிரதி பலித்தன . எந்தெந்த பங்குகளின் காலாண்டு அறிக்கைகள் மோசமாக வந்துள்ளதோ அந்த பங்குகளின் டெலிவரி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது கவனிக்கவும் .

நேற்றைய சந்தைகள் முழுவதும் முக்கிய நிலைகள் உடைபடுவதும் பின்னர் மீளுவதுமாக இருந்தது ஆனால் இறுதியில் சந்தைகள் " 3330 " புள்ளிகளில் முடிவடைந்தன . நேற்றைய ஆசியா சந்தையில் 1 % - 3 % அளவிலான சரிவுகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் " FLAT " நிலைகளில் துவங்கி பின்னர் மோர்கன் ஸ்டான்லி காலாண்டு அறிக்கைகள் எதிர் மறையாக வந்துள்ளன .. அமெரிக்கா சந்தைகள் முடிவில் " பிளாட் " நிலைகளில் முடிவடைந்தன ...

இன்றைய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி உள்ளன . மேலும் நேற்றைய இழப்பினை மீட்டெடுக்கும் முயற்சியாக இன்றைய ஆசியா சந்தைகள் சற்று மேலே வரலாம் . நமது சந்தைகள் பொறுத்த வரை இன்றும் நல்லதொரு ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் .

இன்ற இன்பிலேசன் அறிவிப்பு அனேகமாக டேப்லேசன் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது . (மேலும் தேர்தலை மையமாக வைத்து ஊக்க அறிவிப்புகள் எதுவும தர கூடாது )டேப்லேசன் அறிவிப்புகள் வராமலும் போக வாய்ப்பு உள்ளது . ஏன் இன்பிலேசன் அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது . அல்லது இன்பிலேசன் சற்று குறையலாம் ..

எது எப்படியாகினும் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்குவது நிறுத்தும் வரை சந்தைகளின் சரிவுகள் சற்று நிறுத்தப்படலாம் என நினைக்கிறேன் ..

நிப்டி நிலைகள் ----
அதரவு --- 3301 , 3275 , 3240 ..
எதிர்ப்பு --- 3335 , 3380 , 3410 ..

நன்றி !!!
எல்லா புகழும் இறைவனுக்கே !! அவன் ஒருவன் தான் உலகின் உயர்ந்தவன்