செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் அதிகரித்து துவங்கின . பின்னர் வேகமாக முன்னேறி நாளின் உயரங்களை தாண்டி வணிகம் ஆனது . இந்நிலையில் சந்தைகள் " 3450 " என்ற கடினமான எதிர்ப்பை தாண்டி செல்ல முயன்றது . ஆனால் ஆசியசந்தையில் விற்ப்பனை அதிகரித்ததால் ஆசிய சந்தைகள் மற்றும் அமெரிக்கபியுச்சர் சந்தைகள் நமது சந்தைகளின் இடைவேளையின் போது 2 % சரிவில் வர்த்தகம் நடக்க தொடங்கியது .

அதன் பின்னர் நமது சந்தைகளில் செல்லிங் அதிகரித்தது . ஆனாலும் நமது சந்தைகளில் பெரிதாக சரிவுகள் எதுவும் வரவில்லை . மேலும் சந்தைகள் முடிவின் போது முந்தய புள்ளிகளை விட 7 புள்ளிகள் சரிவு அடைந்து "3370 " நிலைகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்க சந்தைகள் பெரிய அளவு விற்ப்பனை மற்றும் செல்லிங் இருந்தது . இதனால் சந்தைகள் பெரிய அளவிலான சரிவினை கண்டது . மேலும் சந்தைகள் முடிவில் 3 % - 4% வரையிலான சரிவினை கண்டது . அமெரிக்க சந்தைகளில் பெரிது எதிர்பார்க்கப்பட்ட " BOA " "IBM " போன்ற நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் திருப்பதியாக இல்லை . லாபம் சரிவடைந்துள்ளது . ஆகவே சந்தைகளில் சரிவுகள் அதிகரித்தன .

முந்தய பதிவில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன் . மேலும் உலக சந்தைகளில் லாபத்தினை உறுதி செய்ய தயாராகி விட்டதாக உணர்கிறேன் .

இன்றைய ஆசிய சந்தைகள் 3 % - 4% வரை சரிவில் துவங்கி உள்ளன . அமெரிக்க சந்தைகளின் நகர்வினை ஒட்டி பிற சந்தைகள் நகர்வினை ஆரம்பித்துள்ளன . மேலும் நமது சந்தைகள் தவிர அனைத்து சந்தைகளும் உலக சந்தைகளை பின்பற்றி வருகின்றன என முந்தய பதிவில் குறிப்பிட்டது நினைவு இருக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைய சந்தையில் " 50 " புள்ளிகள் வரை சரிவில் துவங்க வாய்ப்பு உள்ளது . ஆனால் சந்தைகள் அந்த கீழ் நிலைகளில் இருந்து மீள ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன் . முடிந்த வரை சந்தையின் போக்கில் வணிகம் செய்ய முற்படுங்கள் அல்லது சந்தையில் இருந்து வெளியே இருந்து வேடிக்கை பாருங்கள் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது உள்ளே செல்லுங்கள் .

இன்றைய சந்தையில் நிப்டி " 3301 " ஐ முக்கிய அதரவு நிலையாகவும் " 3410 " முக்கிய எதிர் நிலையாகவும் இருக்கும் . இவற்றில் எந்த நிலைகள் உடை பட்டாலும் அதன் போக்கில் சந்தைகள் செல்ல ஆரம்பிக்கும் . ஆனால் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கிறேன் .

நமது சந்தைகளில் பெரிதாக உலக சந்தைகளின் தாக்கம் இருக்காது . இந்நிலைகளில் சந்தைகளில் " SHORT SELLING " செல்ல வேண்டாம் . மேலும் இன்றைய ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் சந்தைக்கு உற்சாகமானதாக இருந்தால் சந்தையில் பெரிய அளவிலான உயர்வு சாத்தியம் , இல்லாவிட்டாலும் பெரிய அளவிலான சரிவுகள் வர வாய்ப்புகள இல்லை என்றே கருதுகிறேன் .

கடந்த ஒரு வார காலமாகவே அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள் எனபது நினைவில் கொள்ளவும் . மேலும் அவர்களின் வாங்கும் விதத்தின் அளவும் பெரிய அளவில் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது . ஆகவே அவர்கள் சந்தையை பெரிய அளவில் கீழிறங்க விட மாட்டார்கள் . ஆக பெரிய அளவிலான சரிவுகள் வரும் பொழுது அப்போதைய சந்தை நிலவரத்தை பொறுத்து வாங்குங்கள் . முடிந்த வரை உடனுக்குடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் .

தினசரி வணிகர் கட்டாயம் " SL " உபயோக படுத்தவும் . மேலும் " லாங் " நிலைகள் எடுத்து வைக்க வேண்டாம் . சில அரசியல் காரணங்களுக்காக சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதை நினைவில் கொள்ளவும் . அதையும் மீறி லாங் வைத்துள்ளவர்கள் " ஹெட்ஜ் " செய்து வைக்கவும் ..

நிப்டி நிலைகள் ---- -

அதரவு --- 3334 ,3301 , 3275 ...
எதிர்ப்பு --- 3380 ,3410 , 3275 ...

நன்றி !!!