வியாழன், 16 ஏப்ரல், 2009

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் 1 !!!

பதிவினை தொடரலாமா ???

சரி அந்நிய முதலீட்டாளர்கள் வாங்குவதால் சந்தைகளுக்கு நன்மை தானே மேலே செல்லாமல் ஏன் சந்தைகளில் சரிவுகள் வருகிறது ? ..

இவர்கள் பங்குகளை வாங்கி மட்டும் விற்ப்பனை செய்வது இல்லை . விற்றும் வியாபாரம் செய்வார்கள் நாம் செய்வது போல " SHORT SELLING " முறையில் இவர்களுக்கும் அனுமதி உண்டு . ஆனால் இவர்களுக்கு அதெற்கென ஒரு அளவு இருக்கும் அதை மீறி விற்க கூடாது .

ஆனால் நமது நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தினசரி வணிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு குறிப்பிட்ட ஒரு குறைந்த பட்ச புள்ளிகளுக்கு அல்லது விலைகளுக்கு கீழே பங்குகளின் விலைகளை கொண்டு செல்வர்கள் .

அதனால் நமது வணிகர்கள் அதிக நஷ்டத்தினை தடுக்க மற்றும் " MTM " இழப்பை கட்ட முடியாமலும் குறைவான நஷ்டத்தில் சந்தையில் இருந்து வெளிவருவார்கள் . அவர்கள் அந்தநிலைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கும் படலத்தை ஆரம்பிபர்கள் .

அடுத்த நாள் சந்தைகளில் அதன் விலைகள் உயரும் நமது முதலீட்டாளர்கள் நஷ்டத்தினை குறைக்க திரும்ப விலை அதிகரிக்கும் என வாங்குவார்கள் வாங்கும் பொழுது அவர்கள் விற்று லாபம் பார்த்து வெளியேறுவார்கள் . இதற்க்கு முக்கிய காரணம் இவர்களின் பண பலம தான் .

சந்தை தவிர இவர்களின் முதலீடுகள் ???

அந்நிய முதலீட்டாளர்களை பொறுத்த வரை லாபம் சம்பாதிப்பது மட்டும் தான் குறிக்கோள் . வேறு எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் . இவர்கள் சந்தை முதலீடு உடன் நிறுத்த மாட்டார்கள் . நாளுக்கு நாள் என சந்தையையே மாற்றுவார்கள் . ஒரு சந்தையில் இருந்து இன்னொரு சந்தைக்கு முதலீடுகள் மாறும் .

அவற்றோடு அல்லாமல் தங்கம் மற்றும் உலோகங்கள் , கச்சா என்னை , மற்றும் கரன்சி வர்த்தகத்திலும் முதலீடு செய்வார்கள் ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாராலும் கணிக்க முடியாது . இவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உட ன்சந்தையை விட்டு வேகமாக உள்ளே வந்ததை விட விரைவாக வெளியே செல்வர்கள் ,.

DII'S --- HNI 'S ---- QNI 'S ,...

இதில் DII'S இல் வருபவர்கள் உள் நாட்டு பெரிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்கள் . HNI"S என்பவர்கள் பெரிய பொருளாதார வசதி கொண்ட முதலீட்டாளர்கள் தான் . QNI'S என்பவர்கள் தனி நபர்களாக சந்தையில் அதிக தொகையினை முதலீடு செய்பவர்கள் . இவர்கள் அனைவரும் இருப்பதால் தான் சந்தைகள் சில சமயம் பெரிய சரிவுகளில் இருந்து தடுக்க படுகின்றன . மேலும் ஓரளவாவது இவர்களுக்கு அந்நிய முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள் .

இவர்களுக்கு மேல் ஒரு பெரிய அதி புத்தி சாலிகள் ???

அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு தொகையை சந்தைகளில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாள்கள் அல்லது குறிப்பிட்ட லாபம் வரும் வரை பங்கின் விலைகள் இறங்கினாலும் பங்குகளை விற்க மாட்டார்கள் . ஆனால் முதலீட்டு தொகையில் சிறிது இறங்கினாலே சந்தையில் இருந்து புலி பாய்ச்சலில் வெளி வருப்பவர்கள் தான்" ஹெட்ஜ் பண்டு " என்று கூறப்படுபவர்கள் .

இவர்களுக்கு அதிக லாபம் முக்கியமல்ல ஆனால் முதலீடு குறையாமல் பார்த்து கொள்வார்கள் முதலீடு குறைந்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தையை விட்டு வெளியேறிவிடுவார்கள் .. அதனால் தான் சந்தைகள் சில சமயங்களில் வேகமாக சரிகிறது ..

நன்றி !!!

அன்புடன்
ரமேஷ்