ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

வெள்ளியன்று சந்தைகள் 20 - 30 புள்ளிகள் உயர்வில் சந்தைகள் துவங்கின . பின்னர் சந்தைகள் சிறிது கூட சரிவடையாமல் வர்த்தகம் ஆனது . வெள்ளியன்று பதிவில் குறிப்பிட்டது போல ஆபரேட்டர்கள் சந்தையை உயர்த்தி சென்றனர் . மேலும் சந்தைகள் " 200 " நாளின் சராசரிக்கு மேல் முன்தினம் முடிவடைந்தது அவர்களுக்கு சாதகமாக ஆகி விட்டது . அதனால் அலட்சியமாக கொஞ்சம் கூட சரிவுகள் இல்லாமல் சந்தைகள் உயரங்களை பதம் பார்த்து வணிகம் ஆனது .

ஆனால் ஆசிய சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி சிறிது உயர்வினை கண்டு மறுபடியும் சரிவடைந்தன சந்தைகள் முடிவில் பிளாட் நிலைகளிலே முடிந்தது . ஜப்பானிய சந்தை மட்டும் 2 % சரிவடைந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகள் ஆசிய சந்தைகள் முடிவில் உயரங்களுக்கு அருகாமையில் வணிகம் நடந்து கொண்டு இருந்தன . நமது சந்தைகள் முடிவில் நாளின் உயரங்களுக்கு அருகாமையில் " 57 " புள்ளிகள் அதிகரித்து " 3480 .75 " நிலைகளில் முடிவடைந்தன .

வெள்ளியன்று அமெரிக்காசந்தைகள் சிறிது உயர்வில் துவங்கி பின்னர் நாளின் நெடுகில் சந்தைகள் சற்று உயர்ந்தன . முடிவில் சந்தைகள் 1.5 % - 2 % வரை உயர்வில் முடிந்தன . மேலும் உலக சந்தைகளில் மேலும் தங்கத்தின் விலைகள் உயந்து வருகிறது . இதை பற்றிவல்லுனர்கள் கூறும் பொழுது உலக முதலீடுகள் அனைத்து தங்கத்தின் பக்கம் வருவதாக குறிப்பிட்டுள்ளன . மேலும் இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலைகள் ( " $ 1200 " PER OUNCE ) பவுன் 14, 000 - 15 , 000 நெருங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் உள்ளது .

ஆகவே நண்பர்களே கவனமிருக்கட்டும் சில அரசியல் காரணங்களுக்காக சந்தைகள் உயந்து வருவதையும் உலக நாடுகளின் பொருளாதார பின்னடைவு நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் என அனைத்து செயல் முறைகளும் எதிர்மறையாக உள்ள சூழலில் சந்தைகள் உயர்ந்து வருகின்றன .

அடுத்த பதிவில் சந்திக்கலாம் . @@@@@@@@@@@

நன்றி !!!

எல்லாம் தெரிந்தவன் பேசுவதில்லை , அதற்காக பேசாதவன் எல்லாம் எல்லாம் தெரிந்தவன் ஆகி விட முடியாது ..