வெள்ளி, 24 ஏப்ரல், 2009

நேற்றைய சந்தையில் நிப்டி முந்தய பதிவில் கூறியது போல ஒரு பெரிய உயர்வினை கொண்டு வந்தது . அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தையில் விளையாடி வருகிறார்கள் . எனக்கு அவர்கள் வர்த்தகம் செய்வது போல தோன்ற வில்லை . மேலும் சந்தைகளின் தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் பொழுது முடிந்தவரை சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பதே மேல் என எனக்கு தோன்றுகிறது ..

நேற்றய சந்தையில் நிப்டி முக்கிய எதிர் நிலையான " 3410 " புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளன . மேலும் நேற்றய இன்பிலேசன் அறிவிப்புகள் சந்தைகளை கீழே கொண்டு வந்து இருக்க வேண்டும் மாறாக சந்தைகள் உயர்ந்துள்ளன .

சந்தைகள் 3410 நிலைகளுக்கு மேல் செல்வது சந்தையின் ஆரோக்கியமான போக்கினை காட்டினாலும் போன மற்றும் இந்த வார ஆரம்பத்தில் உலக சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள் நமது சந்தைகளில் எள்ளளவும் இல்லை மாறாக சந்தைகள் அந்த நாட்களில் எல்லாம் உயர்வினை கண்டது உங்களுக்கெல்லாம் நினைவு இருக்கலாம் ..

நேற்றய ஆசியா சந்தைகளை பொறுத்த வரை முடிவில் 1 % - 3 % வரை உயர்வினை கண்டன . ஆனால் நமது சந்தைகள் முடிவில் 4 % உயர்வில் முடிந்துள்ளன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி பின்னர் சந்தைகள் முடிவில் 1 % அளவிற்கு உயர்ந்தன . மேலும் அங்கும் நமது சந்தைகள் போலவே ஆபரேட்டர்கள் சந்தைகளை நிலை நிறுத்தி வைத்துள்ளதாக கருதுகிறேன் . அங்கு பெரிது எதிர் பார்க்கப்பட்ட பெரிய நிறுவனக்களின் காலாண்டு அறிக்கைகள் எல்லாம் சரிவர இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ..

இன்றைய ஆசியா சந்தைகள் " பிளாட் " நிலைகளில் துவங்கி உள்ளன . நேற்றே எதிர் பார்த்த லாபத்தினை உறுதி செய்யும் நிலைகள் சந்தையில் வரவில்லை மாறாக சந்தைகள் நேற்றும் உயர்ந்துள்ளன . ஆக இது சந்தைகளில் வரும் நாட்களில் பெரிய சரிவினை கொண்டு வரும் என கருதுகிறேன் .

மேற் சொன்ன அனைத்தினையும் மீண்டும் ஒரு முறை படித்து நினைவில் கொள்க ...

நமது சந்தைகளை பொறுத்த வரை இன்றைக்கு முடிந்த வரை ஆபரேட்டர்கள் சந்தையினை ஓரளவு உயர்த்தி சென்று பின்னர் அங்கிருந்து வேகமானதொரு சரிவினை ஏற்படுத்தலாம் என கருதுகிறேன் . ஆகவே முடிந்த வரை லாங் நிலைகள் எடுக்காமல் இருக்கவும் அல்லது கட்டாயம் " ஸ்டாப் லாஸ் " உடன் வணிகத்தில் ஈடு படுங்கள் . முடிந்தால் புட் ஆப்சனை வாங்குங்கள் .

நிப்டி நிலைகள் -----

அதரவு -- 3380 , 3334 , 3301 ..
எதிர்ப்பு -- 3450 , 3491 ,3510 ...

நன்றி !!!

அன்பே சிவம் , யாரிடமும் பகைமையை காட்டாதீர்கள் , முடிந்தால் அன்பு செலுத்துங்கள் ...