ஞாயிறு, 31 மே, 2009

இன்றைய தேதியில் பொருளாதார சிக்கல்கள் @

இன்றைய தேதியில் இன்னும் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை . அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் இந்த பிரச்சனைகள் மேலும் வலுவடைந்து வருவதாக தான் உலக வல்லுனர்கள் அனைவரும் கூறும் விஷயம் .

இது சந்தைகளில் எவ்வித தாக்த்தினையும் ஏற்படுத்தவல்லது - அதைப்பற்றிய சில விளக்கங்களை பார்க்கலாம் .

அமெரிக்காவில் வரும் ஜுன் முதல் தேதி அதாவது நாளை ஜெனரல் மோட்டார் நிறுவனம் தனது திவால் அறிவிப்பினை அரசிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏன் என்றால் ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஏற்க்கனவே திவால் மனு செய்ய வரமாட்டோம் என்று கூறி மோட்டார் நிறுவனக்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க தொகையில் அதிக தொகையினை பெற்ற நிறுவனம் ஆகும் .

மேலும் இந்த நிறுவனம் ஏற்க்கனவே இரண்டு முறைகள் திவால் மனு செய்ய சென்று அரசு விண்ணப்பத்தினை நிராகரித்து விட்டது . இந்த முறை அதையும் மீறி எப்படியும் திவால் மனு செய்ய்ய தயாராகிவருகிறது ஜெனரல் மோட்டார் நிறுவனம் .

தற்பொழுது அமெரிக்காவில் திவால் செய்ய இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டும் என ஒரு அறிக்கை கூறுகிறது (தனியார் நிறுவங்கள் உட்பட ) . அதோடு மட்டுமல்லாமல் தனி நபர்கள் இரண்டு லட்சத்துக்கு மேல் திவால் மனு செய்ய தயாராகி வருகிறர்கள் . அவர்களில் இருபது ஐந்தாயிரம் பேர் இம்மாதம் திவால் மனு செய்ய அனுமதிக்க பட்டுள்ளனர் .

மேலும் அமெரிக்காவில் திவாலாகி வரும் வங்கிகளின் எண்ணிக்கை அறுபதை நெருங்கி வருகிறது . மேலும் சில வங்கிகள் இந்த மாதத்தில் திவால் மனு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது . இவ்வருட இறுதிக்குள் பல வங்கிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது ..

மேலும் அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களான சோனி , மைக்ரோசாப்ட் , வோல்ஸ் வேகன் , ரோல்ல்ஸ் ராய் , சிட்டி வங்கி . மற்றும் பல நிறுவனங்கள் மேலும் மேலும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன . அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணியாளர்கள் என்ற நோக்கத்துடன் ஆட்குறைப்பு நடந்து வருகிறது .

இதற்கிடையில் போன வாரம் நடந்த அதிபர் கருத்தரங்கில் நடை பெற்ற பொருளாதார ப்பிரச்சனைகள் பற்றிய விவாதத்தில் பேசிய திரு . ஒபமாவின்மற்றும் அவர் குழுக்களும் சேர்ந்து இனி பொருளாதார சிக்கல்களை சமாளிக்க ஊக்க தொகைகள் அதிகம் வழங்கப்பட மாட்டது என உறுதியான அறிவிப்பினை அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் இதில் மறு பரிசீலனை என்பது கிடையாது என்றும் ஒபாமா அரசு திட்டவட்டமாக தெளிவாக கூறியுள்ளது .

இந்த அறிவிப்புகளினால் அமெரிக்கா சந்தைகளில் முதலீடுகள் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளன . மேலும் பரஸ் பர நிதி நிறுவனங்கள் இன்னும் ஆட்குறைப்பில் ஈடு படவில்லை இந்த செய்திகளினால் வரும் வாரங்களில் அவர்களும் ஆட்குறைப்பில் ஈடு படலாம் .

தற்போதைய சூழலில் அமெரிக்காவின் டாலரை முதல் அந்தஸ்தில் இருந்து இறக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சீன மற்றும் இந்தியா இன்னும் சில சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

சில மாதங்களுக்கு முந்தய " G 20 " மாநாட்டில் இது பற்றிய பொதுவான ஒரு கரன்சியை கொண்டு வர விவாதம் பேச ஒபாமா அந்த பேச்சினை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றய உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்கா ஒரு பொருளாதார பிரச்சனைக்குரிய நாடாக கருதப்படுகிறது . அதோடு மட்டுமல்லாமல் பல நாடுகள் அமெரிக்காவின் தற்போதைய சிக்கல்களை வைத்து அமெரிக்காவை ஓரம் கட்ட முயற்சி செய்கின்றன . ஆனால் அதை எளிதாக எதிர் கொள்ள கூடிய திறமை படைத்த இங்கிலாந்து மிகவும் அமைதியாக இருந்து வருகிறது .

இங்கிலாந்திலும் தற்சமயம் அமெரிக்காவை பற்றி பேசிய அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன . ஆகா ------

அதையும் நீட்டி முழங்க வேண்டுமா உங்களுக்கு நண்பர்களே @@@@@@@

ஆக இவ்விரு வல்லரசு நாடுகளிலும் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஊக்க தொகைகள் வழங்கிய போதிலும் அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் இது சம்பந்தமா சலுகைகள் வழங்கியும் பிரச்சனைகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை . பிரச்சனைகள் மேலும் மேலும் தலை தூக்கி வருகின்றன .

இந்த அனைத்து பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு சீன மற்றும் நமது நாடும் மற்றும் ஜப்பானும் இது பற்றிய பேச்சுக்களில் சிறிது தயக்கம் காட்டாமல் எங்களது நாடுகளில் பொருளாதார பிரச்சனைகள் எதுவும் அதிகமாக இல்லை என்று கூறி வருகின்றன .

நிபுணர்களின் கணிப்பின் படி சீனாவில் அடுத்த வருட ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் பயங்கரமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது . நமது நாடும் அது போல தான் உள்ளது . மிக குறைவான இன்பிலேசன் மிக குறைந்த வட்டி விகிதங்கள் என பொருளாதார பிரச்சனைக்கு முன்னரே எல்லாம் குறைவாக உள்ளது .பொருளாதார பிரச்சினைகள் வந்தால் மீண்டும் உலக வங்கியில் கையேந்த வேண்டும் .

அவ்வாறு நடக்கும் சூழ்நிலையில் தற்போதைய அமெரிக்காவை எதிர்க்கும் டாலர் விஷயம் முக்கியமாக பேசப்படலாம் . அதனால் புதிய பிரச்சனைகள் நிகழலாம் .எது எப்படியாகினும் நமது நாடும் சீனாவும் மற்றும் ஜப்பானும் அமெரிக்காவை ஓரம் கட்ட நினைக்கும் எண்ணத்தினை கைவிட்டால் பரவாயில்லை .

அது தான் நமக்கும் நமது நாட்டின் எதிர் காலத்திற்கும் நல்லதொரு விசயமாக இருக்கும் . உலக நிபுணர்களின் கணிப்பின் படி அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார சரிவின் இரண்டாம் நிலை துவங்க உள்ளது . அது கிரெடிட் கார்டு பற்றிய விஷயம் தான் . அவ்வாறு நிகழும் பட்சத்தில் உலகின் முதல் வல்லரசான அமெரிக்கா வீழும் என நினைப்பது முட்டாள் தனம் .

அவ்வாறு நிகழ்ந்தால் அது உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம் .

நண்பர்களே இந்த முக்கிய பதிவின் நோக்கம் சந்தைகள் உயர்ந்து கொண்டே செல்வதர்ககவோ அல்லது நான் ஒரு சரிவின் ஆதரவாளனோ இல்லை நீங்கள் இத்தகைய பிரச்சனைகள் உள்ளதை தெரிந்து கொள்ளவே .


உச்சராக இருங்கள் !!! லாபத்தினை உறுதி செய்யுங்கள் @@@@@@@@@

நன்றி !!!

அடுத்த இது போன்ற முக்கிய விழிப்புணர்வு பதிவு தலைப்பு மட்டும் இங்கே--

--- அமெரிக்காவை சாப்பிட தயாராகும் கிரெடி கார்டு சிக்கல்கள் -----

காத்திருங்கள் நண்பர்களே @@@@@@@@@@@@@@@@@@@@

விழிப்புணர்வு இடுகை 5

மே மாத சந்தைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு இடுகை ,
************************************************************
கடந்த மாத சந்தைகளை பொறுத்த வரை சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் அவர்களின் வாங்கும் படலம் ஏப்ரல் மாத இறுதியிலேயே ஆரம்பித்துள்ளது . காரணம் அவர்களுக்கு அடுத்து அமையுள்ள ஆட்சி காங்கிரெஸ் என்பது அவர்களுக்கு சரியாக தெரிந்துள்ளது. நமது மக்களிடையே எலெக்சன் வரை சந்தைகள் விழாது என்ற ஊடகத்தினை மட்டும் பரப்பி விட்டு சந்தைகளை சரியானதொரு தருணத்தில் மேலே கொண்டு செல்ல ஆரம்பித்தனர் .

மேலும் சந்தைகளில் கடந்த மாதம் சிறிய பங்குகள் முதல் லார்ஜ் கேப் மற்றும் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் நன்றாக உயர்த்தப்பட்டுள்ளது . அதுவும் பல பங்குகளின் விலைகள் இரண்டு மூன்று மடங்கிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகளின் வளர்ச்சி என்பது அதிகம் வியாபாரம் இல்லாமல் சந்தைகள் உயர்வு அடைந்துள்ள அந்த வளர்ச்சி விகிதங்கள் சாதரணமாக
2 % - 5 % வரை ஆகும் .

பங்குகளின் விலைகள் அதிக அளவில் வர்த்தகம் இல்லாமல் திடீர் திடீர் உயர்வுகளை அடைய செய்துள்ளனர் .

சந்தைகளில் வர்த்தகத்தின் அளவு குறைந்து வரும் பொழுது சந்தைகள் திடீர் உயர்வுகளை சந்திக்கின்றன . ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும் பொழுது சந்தைகள் சிறிய அளவிலான சரிவுகளை மட்டும் சந்திக்கிறது . மேலும் அந்நிய மற்றும் ஆபரேட்டர்கள் சந்தைகளில் அடாசு பங்குகளின் விலைகளையும் , மற்றும் முதல் தரம்மான பங்குகளின் விலைகளையும் சற்று அதிகமாக உயர்த்தி உள்ளனர் .

அந்த உயர்வுகளில் தங்கள் பங்குகளை விற்று வருகிறார்கள் . மேலும் இது போன்ற செயல் சந்தைகள் பின்னாளில் பலவீனம் அடைய வாய்ப்ப்பு உள்ளதையே காட்டுகிறது .

நமது மக்களிடையே தவறான ஒரு வர்த்தக முறை உள்ளது அது பங்குகளின் விலைகள் மிகவும் சரிவடைந்து கீழே வாரும் பொழுது கையில் உள்ள பங்குகள் அனைத்தினையும் விற்று விட்டு சும்மா இருப்பார்கள் . அப்பொழுது வாங்க வேண்டும் செய்ய மாட்டார்கள் . ஆனால் இது போன்ற அதிக விலைகள் வரும் பொழுது உள்ளே புகுந்து சிறிதும் மீதமின்றி அனைத்து தொகைகளுக்கும் பங்குகளை வாங்கி போட்டு விடுவார்கள் .

இதை பொறுத்த வரை வாறன் பபெட் அவர்கள் கூறியது போல சந்தைகள் அதிகம் சரிவடையும் பொழுது நாம் சந்தைகளில் வாங்க வேண்டும் அதிகம் உயரும் பொழுது விற்று விட்டு சந்தையை விட்டு வெளியேற வேண்டும் .அதையும் மீறி நாம் விற்றதிர்க்கும் அதிகமாக செல்லும் பொழுது சந்தையை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் .

நம்து மக்கள் இது வரை மூன்று இடங்களில் கோட்டை ( முதலில் சந்தைகள் 20 % சரிவு சனவரி 2008 , அடுத்து " LIFE TIME " குறைந்த பட்ச புள்ளிகளான அக்டோபர் மாதம் 2008 , அடுத்தது சமீபத்திய உயர்வான மே 2009 ) விட்டு விட்டனர் இனியாவது சரியாக சிந்திப்பார்கள் என நம்புகிறேன் ....

மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளின் பொழுதும் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நமது சந்தைகளில் இருந்து நமது மக்கள் பலரை வெளியேற்றி அனுப்பி விட்டனர் .

இன்றைய சூழலில் நமது சந்தைகள் உயர்ந்துள்ள உயர்வுகளை மனதில் வைத்து உங்கள் லாபத்தினை உறுதி செய்ய தவறாதீர்கள் .

நன்றி !!!

அடுத்த இடுகையான விழிப்புணர்வு இடுகை 6 - ஐ படிக்க தவறாதீர்கள் ...

மே மாதம் அதிகம் உயர்ந்த இன்டெக்ஸ் !!!

மே மாத பியுச்சர் சந்தைகளில் சில இண்டக்ஸ்களின் உயர்வுகள் சற்று அபரமானதகவே இருந்தன அவைகள் ------------

* சென்செக்ஸ் - 20 %
* நிப்டி - 21 %
* காப் கூட்ஸ் - 42 %
* மிட் காப் - 33 %
* சுமால் காப் - 46 %
* ரியாலிட்டி - 71 %
* பேங்க் இன்டெக்ஸ்- 35 %
*பவர் - 31 %
* மெட்டல் - 45 %

******************************************************

மே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் !!!

மே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் ---
*******************************************
பங்குகளின் பெயர் ----- உயர்ந்த சதவீதம் %
-------------------------------------------------------
* டாட்டா ஸ்டீல் - 70 %
*ரேன் பாக்சி - 67 %
*ப்ரோவோகு - 123%
*ஹச் ஜிஎஸ் எல் - 156 %
* யுனிடெக் - 79%
* நால்கோ - 68 %
* ஆர்பிட் - 136%
* என் எம் டி சி - 126%
* எலி கான் - 126%
*பல கஷ்யப் - 136%
* ஜெ பி அசோசியட் - 76%
* REL காப் - 79%
* REL இன்பிரா - 83%
* யுனிட்டி இன்பிரா - 144%
* அபான் - 108%
*REL காம் - 43%
* இந்தியா புல்ல்ஸ் - 125%
* கம்மன் இந்தியா - 80 %
* எஸ் பி ஐ - 40%
*********************************************************

கடந்த வார சந்தைகள் !!

கடந்த வார சந்தைகள் !!

INDICES == WKLY CLS = C HANGE ( - OR + )
**************** ******************
NIKKIE = 9522.50 = +296.69 .
FTSE = 4417.94 = +52.65 .
DAX = 4940.82 = ------
CAC = 3277.65 = ------
STRAITES = 2329.08 = ----
DOW JONES = 8500.32 = +223.07 .
NASDAQ = 1774.33 = +82.32 .
HANG SENG = 18171.00 = +1108.48 .
KOSPI = 1320.99 = - 0.3 .
NIFTY = 4448.95 =+ 210.45 .
SENSEX = 14625.25 = +738.10 .
SGX NIFTY = 4449 = + 203 .

*********** ************* ****************