அடமான பங்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடமான பங்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மே, 2009

நேற்றைய உலக சந்தைகள் முழுவதும் அமெரிக்காவின் " strees " பற்றிய அறிவிப்பிற்க்காக உலக சந்தைகள் பலவும் சரிவுகள் இல்லாமல் உறுதியாக மேல் நிலைகளில் வர்த்தகம் ஆனது . ஆசியசந்தைகள் துவக்கம் சற்று அதிகமாக இருந்தது இருந்தாலும் சந்தைகள் முடியும் வரை சரிவுகள் இல்லை

ஆதலால் நமது சந்தைகள் முடிந்த வரை மேலே கொண்டு செல்லப்பட்டது . நமது சந்தைகள் இன்றைய சூழலில் நுட்ப காரணிகளை தொடர்பு படுத்தாமல் சந்தைகள் வர்தகமாகி வருகிறது .

மேலும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அந்நிய முதலீட்டாளர்கள் நமது சந்தைகளில் இன்னும் வாங்கும் படலத்திலேயே உள்ளனர் என்று அவர்கள் கணக்கு சொல்கிறது ( ஆனால் அவர்கள் வாங்குவது சில சூட்சமம் தான் சில பங்குகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது ) . அவர்கள் வெளியேறும் வரை நமது சந்தைகளின் போக்கு நமக்கு புரியாது ...

நேற்றைய சந்தைகளில் நமது சந்தைகள் 3610 முக்கிய அதரவு நிலையாக கொண்டு துவங்கியது .. சந்தைகள் எதிர் ' 3670 சென்றது குறிப்பிடத்தக்கது



சனி, 21 மார்ச், 2009

அடமான பங்குகள்

அடமான பங்குகள் !!!

இப்போது சந்தையிலும் மற்ற இடங்களிலும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இது தான் பங்குகள் அடமானம் ..

பங்குகள் அடமானம் என்றால் என்ன ?

சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை நடத்த முடியாமல் (அ) செலவுகளை சமாளிக்க முடியாமல் போகும் சமயத்தில் சில மெர்சன்ட் வங்கிகளிடம் ( மெர்சன்ட் வங்கிகள் என்பது பங்குகளில் முதலீடு மற்றும் வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் . இது அந்தந்த வங்கிகளின் சம்பந்தமான தனி பிரிவு . உதா ; இந்தியன் வங்கி , ஐ சி ஐ சி ஐ வங்கி , பஞ்சாப் நேசனல் வங்கி , பேங்க் ஆப்இந்தியா , மற்றும் பல வங்கிகள் உள்ளன .) சில நிறுவனங்கள் பண தேவைக்காக தங்களிடம் உள்ள பிரமோட்டார் பங்குகளில் குறிப்பிட்ட அளவு (அ ) தேவைக்கு ஏற்ப பங்குகளை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு செய்து பிரச்சனைகளை சரி செய்யும் . இதுவே பங்குகள் அடமானம் எனப்படுவது .

நிறுவனம் சரிவர பிரச்சனைகளை முடித்து சரி செய்து லாபம் வந்ததும் பங்குகளை திருப்பி கொள்ளும் ..ஆனால் நிலைகளை சமாளிக்க முடியாமலும் (அ ) சந்தையில் அந்த பங்குகளின் விலை திடீரென சரிந்தாலோ சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை லாப நோக்கு அல்லாமல் சந்தை விலையில் விற்று விடும் சந்தை சரிவில் இருந்தாலும் கூட

தற்சமயம் செபிஅறிவிப்பில் இது போல அடமானம் வைக்கும் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகள் என்ற விவரங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .அந்த உத்தரவு மெர்சன்ட் வங்கி நிறுவனங்களுக்கும் பொருந்தும் .

செபி ஏன் இப்பொழுது இதை செயல்படுத்துகிறது என்றால் சத்யம் நிறுவன பங்குகள் இது போல தான் ( அடமான பங்குகளை) மெர்சன்ட் வங்கி நிறுவனங்கள்சரிவில் அந்த நிறுவன பங்குகளை விற்று விட்டது என்று செய்தி உள்ளது .

சமீபமாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகள் சில ...ஆனால் எண்ணிக்கை இல்லை ..TATA POWER , JSW STEEL , DR REDDY'S LAB ,NET WORK 18 ,UTV SOFTWARE , ABAN OFF SHORE ,ASIAN PAINT , MIND TREE. மற்றும் பலஇது தங்களின் தகவலுக்காக மட்டுமே .

 இதை வைத்து இந்த பங்குகள் சரியில்லை என எந்த முடிவும் எடுக்க வேண்டாம் ..

நன்றி !!!